நீச்சல் உடையில் இதை பண்ணித்தான் நயன்தாரா லேடி சூப்பர் ஸ்டார் ஆனாங்க..! – பிரபல நடிகர் வெளியிட்ட பகீர் தகவல்..!

தமிழ் சினிமாவைப் பொறுத்த வரை காமெடி நடிகராக இருக்கும் வடிவேலு உடன் இணைந்து பல படங்களில் இந்த நடிகர் நடித்திருப்பார். இடையில் இவருக்கு சற்று உடல்நல குறைவு ஏற்பட்டதன் காரணத்தினால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தற்போது பழைய நிலைமைக்கு திரும்பி இருக்கிறார்.

இந்நிலையில் சமீபத்தில் நடிகர் பயில்வான் ரங்கநாதன் எடுத்த பேட்டியில் இவர் கலந்து கொண்டு பலவிதமான விஷயங்களை ரசிகர்களுக்கு, அதிர்ச்சியை ஏற்படுத்தக் கூடிய வகையில் பகிர்ந்திருக்கிறார்.

இன்னும் திருமணம் செய்து கொள்ளாத இந்த காமெடி துணை நடிகர் ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை என்று கேட்ட கேள்விக்கு, தனக்கு கல்யாணத்தில் ஆசை இல்லை. எனினும் தனது அம்மா வழக்கமான அம்மாக்களைப் போல அந்த விஷயத்தில் கடுமையான முயற்சிகளை எடுத்ததாக கூறினார்.

மேலும் தான் சினிமாவில் நடித்த காரணத்தால் எவரும் தனக்கு பெண் தர முன் வரவில்லை என்று கூறியதோடு தற்போது இருக்கும் நடிகைகளில் சிலர் வறுமையில் இருக்கிறார்கள். அதற்கு காரணம் அட்ஜஸ்ட்மென்ட் செய்யாமல் இருப்பது தான். அட்ஜஸ்ட்மென்ட் செய்த நடிகைகள் பணக்காரர்களின் பட்டியல்களில் இடம் பிடித்து விட்டார்கள்.

ஆனால் சினிமாவில் பாருங்கள் அதிக அளவு தமிழ் பெண்கள் இருக்க மாட்டார்கள். இதற்கு காரணம் அந்த மாதிரியான தொந்தரவுகளை அவர்களால் தாங்கிக் கொள்ள முடியாது. திறமை அடிப்படையில் நடிப்பு என்றால் தமிழ் பெண்கள் கண்டிப்பாக இந்தத் துறையில் இருந்திருப்பார்கள்.

அத்தோடு தற்போது இருக்கும் கதாநாயகிகள் எந்த உடையை வேண்டும் என்றாலும் உடுத்த தயாராக இருக்கிறார்கள். இதுவும் ஒரு வகையில் வளர்ச்சி தான். நயன்தாரா ஹிந்தி படத்தில் குறிப்பாக ஜவான் படத்தில் லோக்கல் காஸ்டியூம் அணிந்து தான் நடித்திருந்தார்.

அதுவே பில்லா படத்தில் பிகினி ஆடை அணிந்து நடித்து தான் மிகப்பெரிய நடிகையானார் என்பதை மறுக்க முடியுமா? என்று பேசினார். இது போலவே இன்று இருக்கக்கூடிய திரைப்படங்களில் ஹீரோக்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் தான் நடிகைகளை தேர்வு செய்வார்கள்.

அது போல ஹீரோ என்ன சொல்கிறாரோ? அதைத்தான் இயக்குனர்களும் செய்கிறார்கள் என்ற உண்மையை ஓப்பனாக சொன்ன நடிகர் பாபா லட்சுமணன். நீங்கள் இவரின் கருத்து பற்றி என்ன நினைக்கிறீர்கள். அவர் கூறியது ஒரு வேளை உண்மையாக இருக்குமோ? இதற்கான விடையை காலம் தான் சொல்ல வேண்டும்.