இது ஆக்ஷன் மேடம்.. ஜீன்ஸ் பேண்ட் போட்டுக்கிட்டு.. நடிகை லயா செய்த வேலையை பாருங்க..!

டிக் டாக் ஆப் மூலம் பல்வேறு விதமான கருத்துக்களை பேசி அதன் மூலம் பிரபலமானவர் தான் சசிலயா. இவர் சமூகநலம் சார்ந்த கருத்துக்கள், அப்பா மகன் உறவு கருத்துக்கள்,

மற்றும் சமூகத்தில் நடக்கும் அவலங்கள் குறித்த கருத்துக்கள், பெண்களுக்கு ஆதரவாக கூறும் கருத்துக்கள் உள்ளிட்டவற்றை பேசி வீடியோ வெளியிட்டு அதன் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமானார்.

நடிகை சசிலயா?

இவர் அத்துடன் சமூக ஆர்வலராகவும் தனது பணியை தொடர்ந்து வந்தார். இந்த சமயத்தில் தான் சசிலயா டிக் டாக் செயலியில் வெளியிட்டு வந்த வீடியோக்கள் மிகப்பெரிய அளவில் பிரபலமானது.

தொடர்ந்து அவருக்கு சின்னத்திரை மற்றும் சினிமாவில் நடிக்கும் வாய்ப்புகள் தேடிவந்தது. அதன் மூலம் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மீனாட்சி பொண்ணுங்க ,

--Advertisement--

சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தொடர்ந்து அவருக்கு திரைப்பட வாய்ப்புகளும் கிடைக்க மோகன் சி இயக்கத்தில் செல்வராகவன் நட்டி நடராஜ் உள்ளிட்டோர் நடித்து வெளிவந்த,

பகாசுரன் திரைப்படத்தில் பெண்களை சப்ளை செய்யும் மோசமான தொழில் செய்பவராக சசிலயா நடித்திருப்பார்.

கடைசியில் கொடூரமாக இவரை செல்வராகவன் கொலை செய்வது போன்ற காட்சியில் படமாக்கப்பட்டிருப்பார்.

திரைப்படங்களில் வாய்ப்பு:

இந்த காட்சி மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது என்று சொல்லலாம். அதே சமயத்தில் கயல் ஆனந்தியின் நடிப்பில் வெளிவந்த ஒயிட் றோஸ் எனும் திரைப்படத்திலும் இவர் நடித்திருக்கிறார்.

தொடர்ந்து இப்படி திரைப்படம் சீரியல் என பிஸியாக இருந்து வரும் இவர் சமூக வலைதளங்களில் எப்போதும் வழக்கம் போல தனது வீடியோக்கள் மற்றும் கருத்து பேசி,

வெளியிடும் வீடியோக்கள் உள்ளிட்டவை தொடர்ச்சியாக வெளியிட்ட வண்ணம் இருக்கிறார். அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று இணையவாசிகளின் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

ஆம் துளசி மடத்தை சுற்றி வந்து அவர் சுவாமி கும்பிடும் போல ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் அணிந்திருக்கும் உடை தான் பெரும் சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது.

ஜீன்ஸ் பேண்ட் போட்டுக்கிட்டு:

குளித்து முடித்துவிட்டு தலையில் துண்டோடு ஜீன்ஸ் பேண்ட் மற்றும் டி-ஷர்ட் அணிந்து துளசி மாடத்தை சுற்றி வந்து கௌசல்யா சுப்ரபாதம் பாடலை போட்டு சாமி கும்பிட்டு இருக்கும் இந்த வீடியோவை,

சசிலையா இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், பாதுகாக்கவோ பத்திரப் படுத்தவோ முடியாத பொக்கிஷம் “நேரம்”..

ஓடிக்கொண்டே இருக்கும்.. துரத்திக் கொண்டேதான் இருக்க வேண்டும்
இறுதி வரை.. என இணையத்தில் வெளியிட,

அதை பலரும் ஷேர் செய்து ஆளாளுக்கு திட்டி விமர்சனம் செய்து வருகிறார்கள். என்னதான் மாடல்களாக இருந்தாலும் சாமி கும்பிடும் போது கூட இப்படி ஒரு உடையா? என அவரை விமர்சித்து தள்ளியுள்ளனர்.