மகளா.. கௌரவமா.. இடியாப்ப சிக்கலில் ரஜினிகாந்த்.. CM வீட்டுக்கு போக சொன்ன குருநாதர்.. கசிந்த ரகசியம்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்னதான் திரைப்படங்களில் பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்த தொடர்ச்சியாக தனது மார்க்கெட் குறையாமல் தனது மவுஸ் குறையாமல்,

இன்றளவும் கிட்டத்தட்ட 73 வயதாகியும் ஸ்டார் நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கிறார் என்றெல்லாம் ரசிகர்கள் பேசி அவரை பெருமைப்பட வைத்தாலும் கூட,

அவரது குடும்ப பிரச்சனை அவருக்கு மிகப்பெரிய தலைவலியாக இருந்து வருகிறது. ரஜினி தற்போது வேட்டையன் திரைப்படத்திலும் கூலி திரைப்படத்திலும் மும்முரமாக நடித்து வருகிறார்.

குடும்ப பிரச்சனையால் ரஜினி வேதனை:

அண்மையில் கூட கூலி படத்தின் டைட்டிலுடன் கூடிய போஸ்டர் வெளிவந்து மிகப்பெரிய அளவில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

--Advertisement--

அந்த படத்தில் அவர் மிகவும் இளமையாக ஆக்ஷன் காட்சியில் இளம் ஹீரோக்களுக்கே டஃப் கொடுக்கும் வகையில் அவ்வளவு சிறப்பாக நடித்திருந்தார்.

ரஜினியின் மேனரிசம் குறிப்பாக எல்லோருக்கும் பிடித்து விட்டது. இப்படி 73 வயதிலும் மாஸ் ஹீரோவாக திகழ்ந்து கொண்டிருக்கும் ரஜினியை வைத்து பல கோடி போட்டு படம் எடுக்க பல தயாரிப்பார்கள் லைன் கட்டிக்கொண்டு நிற்கிறார்கள்.

இப்படி ரஜினி பலகோடி சொத்துக்கள் சேர்த்து பணக்கார வாழ்க்கை வாழ்ந்து வந்தாலும் குடும்பத்தில் பிரச்சினை அவருக்கு பெரும் தலைவலியாக இருந்து வருகிறதாம்.

முதல் மகளான ரஜினி மூத்த மகளான ஐஸ்வர்யா தனுஷை கடந்த 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

முதல் மகளும் விவாகரத்து:

இவர்கள் இருவரும் சிறந்த ஜோடிகளாக ரஜினி நினைத்துக் கொண்டு இருந்தார். மருமகனை நல்ல உசத்தியில் வளர்த்து விட வேண்டும் என எண்ணி தனுசுக்கு பல்வேறு திரைப்பட வாய்ப்புகளை,

கொடுத்து சூப்பர் ஹிட் கொடுக்க வழி வகுத்தார். இப்படி இருக்கும் சமயத்தில் திடீரென இவர்கள் விவாகரத்து செய்து பிரியப் போவதாக அறிவித்ததால் ரஜினிக்கு மிகுந்த மன உளைச்சல் ஆகிவிட்டதாம்.

மிகுந்த மன உளைச்சல் அவர்களை சேர்த்து வைக்க முடியாத நிலைமையில் இருக்கிறாராம். காரணம் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் மிகுந்த கெடுபிடியோடு இருக்கிறார்களாம்.

இதனால் அவருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அது மட்டும் இல்லாமல் இளைய மகளான சௌந்தர்யா விஷயத்திலும் இதே போன்று தான் அவருக்கும் விவாகரத்தானது.

அதிலிருந்து மன உளைச்சல் இருந்து மீண்டு வந்த ரஜினிகாந்த் மீண்டும் அவருக்கு மறுமணம் செய்து வைத்து அந்த சிக்கலில் இருந்து இப்போதுதான் மீண்டு வந்து நிம்மதி பெருமூச்சு விட்டார்.

அடுத்தடுத்த விவாகரத்து:

அதற்குள் தற்போது அடுத்த விவகாரம் தலைவிரித்து ஆடுகிறது. இந்நிலையில் தற்போது பிரபல விமர்சகர் ஆனந்தகன் ரஜினி குறித்து ஒரு விஷயத்தை கூறியிருக்கிறார்.

அதாவது, ரஜினிக்கு தனது மூத்த மகள் ஐஸ்வர்யாவால் ஏற்கனவே இது போன்று மிகப்பெரிய பிரச்சனை ஒன்று வர அதற்கு தீர்வு கேட்டு இயக்குனர் கே பாலச்சந்தரிடம் சென்று நின்று இருக்கிறார்.

அப்போது பாலச்சந்தர் நீ இதை என்னிடம் கேட்பதை விட முதல்வர் ஜெயலலிதாவிடம் சென்று கேட்டுப்பார்.

அவர் இதற்கு தீர்வு கொடுப்பார் எனக் கூற ரஜினி ஷாக்காகி நான் எந்த முகத்தை வைத்துக்கொண்டு அவரிடம் பேசுவது என கேட்டாராம்?

மானத்தை இழந்து ஜெ. விடம் உதவி கேட்டு நின்ற ரஜினி:

காரணம் ரஜினிக்கும் ஜெயலலிதாவுக்கும் இடையே மிகப்பெரிய மோதல் அப்போது இருந்தது. உடனே பாலச்சந்தர் உனக்கு மகள் முக்கியமா? கௌரவம் முக்கியமா? என கேட்க,

உடனே ஜெயலலிதாவுக்கு போன் அடித்த ரஜினிகாந்த் அவரிடம் நடந்த விஷயங்களை கூற ஜெயலலிதா அந்த பிரச்சனையிலிருந்து முற்றிலுமாக மீட்டு எடுத்து ரஜினியின் மனஉளைச்சலை நீக்கினார்.

அதேபோல ஐஸ்வர்யா விவகாரத்தில் ரஜினிகாந்த் தனுஷிடம் கெஞ்சவும் இல்லை. ரஜினி தனுஷை பழிவாங்கவும் இல்லை.

காரணம் தனுஷ் ரஜினி மீது மிகப்பெரிய வைத்திருக்கிறார். அவர் எப்போதும் அப்பா என்று ரஜினியை அழைப்பதுண்டு என கூறியுள்ளார் அந்தகன்.