தலைக்கேறிய போதை.. சரிந்து விழுந்த ஸ்ரீ திவ்யா..! – பிரபல நடிகரை விளாசும் ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவில் குடும்ப குத்துவிளக்கு என்ற பெயர் எடுத்தவர் நடிகை ஸ்ரீ திவ்யா. ஆனால், நடிகை ஸ்ரீதிவ்யா குறித்து பிரபல நடிகரும் சர்ச்சைக்குரிய பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ள ஒரு தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை கிளப்பி இருக்கிறது.

இதனை கேட்ட ரசிகர்கள் பயில்வான் ரங்கநாதனுக்கு எதிரான கருத்துக்களையும் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். பிரபல நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் பல்வேறு விஷயங்களை வெளிக்கொண்டு வெளி வந்து கொண்டிருக்கிறார்.

சினிமாவில் திரை மறைவில் நடக்கக்கூடிய பல விஷயங்களை பொதுவெளிக்கு கொண்டு வருகிறார். ஆனால் சில சமயங்களில் இவர் கூறும் விஷயங்கள் நம்பகத்தன்மையில்லாமல் இருக்கின்றன. குறிப்பாக சில நடிகைகள் குறித்து பயில்வான் ரங்கநாதன் கூறும் கருத்துக்கள் அவதூறாக இருக்குமோ என்ற சந்தேகமும் ரசிகர்கள் மத்தியில் எழுகிறது.

ஏனென்றால் ஒரு ஆதாரமும் இல்லாமல் அவர் அப்படி இருந்தார்.. அவர் இப்படி இருந்தார்.. என்று ஏகத்துக்கும் பேசிக் கொண்டிருக்கிறார் பயில்வான் ரங்கநாதன். இந்நிலையில் நடிகை ஸ்ரீதிவ்யா குறித்து யாரும் எதிர்பாராத யாரும் யோசித்து கூட பார்த்துடாத ஒரு தகவலை வெளியிட்டு இருக்கிறார்.

ஒரு காலத்தில் நடிகை ஸ்ரீதிவ்யா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார். தமிழ் சினிமாவின் அடுத்த நயன்தாரா என்று ரசிகர்கள் பலராலும் நம்பப்பட்டவர் ஸ்ரீதிவ்யா.

ஆனால் அடுத்தடுத்து இவர் படங்கள் தோல்வியடைந்ததன் காரணமாக இவருக்கு பட வாய்ப்புகள் வருவது குறைந்து போனது. மட்டுமில்லாமல் பிரபல வாரிசு நடிகர் ஒருவருடன் நடிக்க மறுத்தது தான் நடிகர் ஸ்ரீதிவ்யா-வின் சினிமா வாழ்க்கை அஸ்தமனம் ஆனதற்கு காரணம் என்றும் கோடம்பாக்கம் வட்டாரத்தில் பேச்சுகளை கேட்க முடியும்.

இந்நிலையில், பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ள தகவல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. அவர் என்ன கூறியிருக்கிறார் என்றால், பிரபல காமெடி நடிகர் இமாம் அண்ணாச்சி தன்னுடைய புதிய வீட்டின் கிரகப்பிரவேசத்தின் போது நடிகர் ஸ்ரீதிவ்யா-வை அழைத்து இருந்தார் என்றும் அப்பொழுது நடைபெற்ற மது விருந்து நடிகை ஸ்ரீதிவ்யா மூக்கு முட்ட குடித்துவிட்டு மயங்கி கீழே விழுந்து விட்டார் என்றும் அதன் பிறகு தண்ணீர் தெளித்து எழுப்பி அவரை காரில் அனுப்பி வைத்தார் என்றும் பேசியிருக்கிறார்.

பட வாய்ப்புகள் இல்லை என்றால் உடனே இணைய பக்கங்களில் கிளாமர் குதிரையாக ஓட துவங்கிவிடும் நடிகைகள் மத்தியில் பட வாய்ப்புகள் இல்லை என்றாலும் கூட குடும்பப்பாகன கதாபாத்திரங்களில் மட்டும் தான் நடிப்பது என்ற முடிவில் இருக்கும் நடிகை ஸ்ரீதிவ்யா இணைய பக்கங்களிலும் கூட தலை காட்டுவதை தவிர்த்து வருகிறார்.

ஆனால் அப்படிப்பட்ட ஒரு நடிகையை பற்றி நடிகர் பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ள இந்த தகவல் ரசிகர்களை மட்டுமல்லாமல் சக பத்திரிகையாளர்களே அதிர்ச்சியில் ஆழ்ந்திருக்கிறது என்றுதான் கூற வேண்டும்.