Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Tamil Cinema News

இனிது இனிது பட நடிகை பெனாஸ் என்ன ஆனார் தெரியுமா..? தீயாய் பரவும் புகைப்படம்..!

திரையுலகையை பொருத்தவரை நடிகர்கள் நடிகைகள் வருவதும் கோபமாக இருப்பார்கள். வெகுசில நடிகைகள் மட்டுமே 10 ஆண்டுகள் 15 ஆண்டுகள் 30 ஆண்டுகள் கூட திரைத்துறையில் நிலைத்திருப்பார்கள்.

இன்னும் சிலர் ஒரே ஒரு திரைப்படத்தில் நடித்தாலும் ரசிகர்கள் மத்தியில் ஆழமாக பதிந்து விடுவார்கள். ஆனால், அதன் பிறகு அவர்கள் எங்கே போனார்கள் என்று கூட தெரியாது.

அது போல தான் இனிது இனிது படத்தில் அப்பு என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை பெனாஸ் ஆள் எங்கே இருக்கிறார் என்று கூட காணாமல் போயிருக்கிறார்.

கடந்த 2010 ஆம் ஆண்டு புதுமுக நடிகர்கள் மட்டும் நடித்த இனிது இனிது என்ற திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தை நடிகர் பிரகாஷ்ராஜ் தயாரித்திருந்தார். இயக்குனர் கே வி குகன் இயக்கிய இந்த திரைப்படம் இன்றளவும் 90ஸ் கிட்ஸ்களுக்கு மிகவும் நெருக்கமான ஒரு திரைப்படம்.

இப்பொழுது பார்த்தாலும் கூட கல்லூரி கால நினைவுகளை நினைத்து ஆனந்த கண்ணீர் விட வைக்கும் அளவுக்கான திரைக்கதை காட்சியமைப்புகள் ரசிகர்களை மிகவும் கவர்ந்தன. இந்த படத்தில் இருக்கக்கூடிய காட்சிகளில் ஏதாவது ஒரு காட்சி கண்டிப்பாக ஒவ்வொருவரின் கல்லூரி காலத்திலும் நடந்திருக்கும்.

--Advertisement--

எனவே கல்லூரி மாணவர்கள் இந்த படத்தோடு மிக நெருக்கமாக தொடர்பு படுத்திக் கொள்ள முடியும். இந்த படத்தில் அப்பு என்ற கதாபாத்திரத்தில் நடித்த நடிகை பெனாஸ். அதன்பிறகு ஐந்து ஆண்டுகள் சமூக வலைதளங்களில் இயங்கி வந்திருக்கிறார்.

குறிப்பாக 2015ம் ஆண்டுக்குப் பிறகு அவர் என்ன ஆனார்..? என்று சமூகவலைதளங்களிலும் சரி.. ஒட்டுமொத்த இணையத்திலும் சரி.. எங்கும் கண்டுபிடிக்கவே முடியவில்லை.

அவர் என்ன ஆனார்..? எங்கே போனார்..? என்று எதுவும் தெரியவில்லை 2015 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இன்டர் காயில் இன்டர்நேஷனல் கம்பெனி என்ற துபாயை சேர்ந்த நிறுவனத்தில் உதவி இயக்குனராக மார்க்கெட்டிங் துறையில் பணியாற்றி இருக்கிறார் என்று தெரிகிறது.

அதுவும் ஒரு வேலை வாய்ப்பு கொடுக்கும் இணையதளம் ஒன்றில் தான் அவருடைய இந்த விபரங்கள் கிடைக்கப்பெறுகிறது. தவிர முகநூல் உள்ளிட்ட ஏனைய சமூக வலைதள பக்கங்களில் பெனாஸ் குறித்த அதிகாரப்பூர்வ பக்கங்கள் எதுவும் கிடையாது.

எம் ஓ பி வைஷ்ணவ் பெண்கள் கல்லூரியில் இளங்கலை விஷுவல் கம்யூனிகேஷன் படித்திருந்த இவர் அதே கல்லூரியில் முதுகலை விசுவல் கம்யூனிகேஷன் படித்து முடித்து இருக்கிறார்.

2009 ஆம் ஆண்டு எலமெண்ட்ஸ் பைனான்ஸ் என்ற நிறுவனத்தில் பணியாற்றிய இவர் அதன்பிறகு, வெஞ்சர் இவன்ஸ் மற்றும் அட்வர்டைசிங் நிறுவனத்தில் சேர்த்திருக்கிறார்.

அதன் பிறகு டைம்ஸ் குரூப் பத்திரிகையில் பணியாற்றிய இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு ஓ.எம்.ஜி ஐடியாஸ் என்ற துபாயை சேர்ந்த நிறுவனத்தில் பணியாற்றி இருக்கிறா.

அதன் பிறகு இண்டர்காயில் இன்டர்நேஷனல் கம்பெனி என்ற நிறுவனத்தில் பணியாற்றியதாக தகவல்கள் இருக்கின்றன.

அதன் பிறகு இவர் என்ன ஆனார்..? எங்கே போனார்..? என்ற எந்த விபரமும் இணைய பக்கங்களில் கிடைக்கவில்லை. அவருடைய சில புகைப்படங்கள் மட்டுமே கிடைத்துள்ளன.

Continue Reading
 
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Tamil Cinema News

Trending Now

To Top