“Red Card குடுக்குறீங்களா..? – தாக்கப்பட்ட வனிதா.. கொடூரமாக வீங்கிய முகம்..” – நடந்தது இது தான்..!

பிரபல நடிகர் விஜயகுமாரின் மகளும் நடிகையுமான வனிதா மர்ம நபர் ஒருவரால் திடீரென தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறார். இது குறித்த புகைப்படத்தையும் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார்.

இது குறித்து அவர் கூறியதாவது, நான் பிக் பாஸ் நிகழ்ச்சியின் விமர்சனத்தை முடித்துவிட்டு இரவு உணவு சாப்பிட்டு விட்டு என்னுடைய காரில் இறங்கி நடந்து சென்று கொண்டிருந்தேன்.

காரை என்னுடைய சகோதரி சௌமியா வீட்டின் அருகே இருட்டான பகுதியில் நிறுத்தினேன். அப்போது எங்கிருந்து வந்த ஒரு மர்ப நபர் பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுக்கறீங்களா..? என கேட்டார்.

அப்போது அதுக்கு நீ வேற சப்போர்ட்டுக்கு வரியா..? என சொல்லி என் முகத்தில் பலமாக தாக்கிவிட்டு ஓடிவிட்டார். இதனால் காயம் அடைந்து ரத்தம் வழிந்தது. நள்ளிரவு ஒரு மணிக்கு இந்த சம்பவம் நடந்ததால் என் இரவில் யாரும் இல்லை.

என் சகோதரியை கீழே வரும்படி அழைத்தேன். அவரும் வந்தார். காவல் நிலையத்தில் புகார் செய்யும் படி தெரிவித்தார். ஆனால் நான் போலீசில் புகார் கொடுப்பதில் நம்பிக்கை இல்லை என்று நான் கூறினேன்.

---- Advertisement ----

காயத்துக்காக முதல் உதவி செய்துவிட்டு கோபத்துடன் வெளியேறி தாக்கிய வரை அடையாளம் காண நினைத்தேன் முடியவில்லை. அந்த மற்ப நபர் பைத்தியக்காரத்தனமாக சிரித்தது என் காதில் கேட்டுக் கொண்டிருக்கிறது.

நான் திரையில் தோன்றும் அளவுக்கு உடல் நலத்துடன் இல்லாததால் ஓய்வெடுத்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

வனிதா மீது தாக்குதல் நடத்திய நபர் யார்..? என்று பெரும் கேள்வி இணைய பக்கங்களை எழுந்து இருக்கின்றது.

ஏற்கனவே பிக்பாஸ் ஏழாவது சீசனில் இருந்து போட்டியாளர் பிரதீப் ஆண்டனி என்பவர் வெளியேற்றப்பட்டிருந்தார். இதற்கு பலரும் கடுமையான எதிர்ப்புகளை பதிவு செய்திருந்தனர்.

சமூக வலைதளங்களிலும் இந்த விவகாரம் பெரும் சர்ச்சை கிளப்பியது. இந்நிலையில் இதற்கு ஆதரவாக பேசி வந்த பிக்பாஸ் வனிதா தற்போது கடுமையாக தாக்கப்பட்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

---- Advertisement ----