டைட்டில் வின்னர் ஆக முடியதா கடுப்பு..!! பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்ததும் விசித்ராவின் டென்ஷன் பேச்சு..!

பிக் பாஸ் டைட்டில் வின்னர் இவர் தான் என்று இணையங்களில் கசிந்த தகவல் தற்போது பொய்த்து விட்டது என்று கூறலாம். அந்த வகையில் பிக் பாஸ் டைட்டில் வின்னர் பைனலில் இருந்து வெளியேறி இருக்கும் விசித்ரா அப்செட் ஆன நிலையில் தற்போது இருக்கிறார்.

இதனை அடுத்து ரசிகர்களிடம் நேரடியாக வீடியோவில் லைவில் பேசிய நடிகை விசித்ரா பிக் பாஸ் இறுதியில் பங்கேற்க முடியாததை எண்ணி வருத்தப்படுவதாக கூறியிருக்கிறார்.

விஜய் டிவியில் கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் சீசன் 7 தற்போது இறுதி கட்டத்தை எட்டி விட்டது. யாருமே எதிர்பார்க்காத அளவு முந்தைய சீசன் களிலிருந்து வேறுபட்டு பல புதிய டாஸ்க்கள், எலிமினேஷங்கள், ரொமான்ஸ் சண்டை என சீசன் 7 களை கட்டியது.

இந்த சூழ்நிலையில் 16 லட்சம் ரூபாய்யோடு பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பூர்ணிமாவை தொடர்ந்து அந்த வீட்டில் விசித்ரா, மாயா, அர்ச்சனா, விஷ்ணு, தினேஷ், மணி மற்றும் விஜய் வர்மா இருந்தார்கள்.

இதனை அடுத்து கண்டிப்பாக விசித்ரா டைட்டில் வின்னராக பைனலுக்கு செல்வார் என்று எதிர்பார்த்த நிலையில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியது பெருத்த அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

எனினும் தனக்கு மூன்று சதவீத வாக்குகள் தான் இருந்தது என்று கூறிய போது அவ்வளவு தான் உள்ளதா? என்று நினைத்தேன். இருந்தாலும் நம்பிக்கையில் விளையாடினேன். பைனல் ரவுண்டில் நான் வெற்றியடையவில்லை என்று பலரும் கவலை அடைந்து இருக்கிறார்கள்.

இந்த சூழ்நிலையில் கடைசியில் டாப் 5 லிஸ்டில் வரவேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்ட நான் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் போது உண்மையிலேயே டென்ஷன் ஆகிவிட்டேன். என்னால் என்னை நம்பிய மக்களை திருப்தி செய்ய முடியவில்லை.

பிக் பாஸ் வீட்டில் விளையாடிய போது அங்கு எல்லாமே தப்பு தப்பாக நடந்தது. எனினும் அதிகளவு வெற்றி பெற்றது நான் தான். ஆனாலும் பயனிலை பைனலை மிஸ் செய்து விட்டேன் என்று நினைக்கும் போது வருத்தமாக உள்ளது என சற்று காண்டாகவே பேசி இருக்கிறார்.