இப்படி இருந்தா படுக்கையறை காட்சியில் நடிக்க சம்மதம்.. பூர்ணிமா ரவி ஒரே போடு..!

சினிமாவில் எப்படியாவது ஜெயித்து விட வேண்டும் எப்படியாவது நடிகையாக வேண்டும் என்ற ஆர்வத்தில் திரைத்துறையில் நுழைந்தவர் தான் பூர்ணிமா ரவி.

இவர் முதன் முதலில் அதற்கு எடுத்த ஆயுதம் டிக் டாக் ஆப். அதன் முழ தான் தனது கெரியரை துவங்கினார்.

அதன் பிறகு YouTube சேனல் ஒன்றை ஆரம்பித்து அதில் பல்வேறு வெத்தொடர்களில் நடித்து வந்தார்.

பூர்ணிமா ரவி:

அதன் மூலம் மக்கள் கவனத்தை கவர்ந்தார். குறிப்பாக ஆராத்து என்ற சேனலை இவர் நடத்தி வருகிறார். அதில் பல வீடியோக்களை வெளியிட்டு மக்கள் மனதில் இடத்தை பிடித்தார்.

மாநிற தோற்றம் நல்ல உயரம் கட்டழகு கவர்ச்சி எனக் கொண்டு மிகவும் தைரியமாக போல்டாக பேசும் பெண்ணாக ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

இதன் மூலம் அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது. ரியோ நடிப்பில் வெளிவந்த பிளான் பண்ணி பண்ணனும் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்த அறிமுகமானார்.

அந்த திரைப்படம் பெரிதாக பேசப்படவில்லை என்றாலும் ஒரு அறியப்பட்ட படமாக இடம் பிடித்தது. தொடர்ந்து அவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்க,

பிக்பாஸ் கொடுத்த அடையாளம்:

போட்டியாளராக பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அந்த சீசனில் மிகப்பெரிய அளவில் மக்களின் கவனத்தை ஈர்த்த பூர்ணிமா அடையாளத்தோடு அந்த வீட்டிலிருந்து வெளியேறினார்.

குறிப்பாக 16 லட்சம் ரூபாய் பணப்பெட்டியோடு அந்த வீட்டில் இருந்து வெளியேறிய போட்டியாளராக பேசப்பட்டார்.

அதன் பிறகு சின்ன திரையில் பல்வேறு ரியாலிட்டி ஷோ மற்றும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார்.

இதனிடையே திரைப்படங்களில் கிடைக்கும் வாய்ப்புகளிலும் தொடர்ந்து நடிக்கும் ஆர்வத்தை செலுத்தி வருகிறார்.

எந்த ஒரு சினிமா பின்பலமும் இல்லாத குடும்பத்தில் பிறந்து வளர்ந்த பூர்ணிமா 1995 ஆம் ஆண்டு பிறந்தார்.

இவர் வேலூரில் பிறந்து அதன் பின்னர் அங்கு படிப்பு பள்ளி மற்றும் கல்லூரி படிப்புகளை முடித்துவிட்டு,

சென்னையில் சினிமா வாய்ப்புக்காக வந்தார். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தொகுப்பாளர் பூர்ணிமாவிடம் படுக்கையறை மற்றும் ரொமான்ஸ் காட்சிகளின் நடிப்பீர்களா என்று கேட்டதற்கு,

ரொமான்ஸ், படுக்கையறை காட்சி என எதுவாக இருந்தாலும் நடிப்பேன். ஆனால் அந்த கதைக்கு சம்பந்தமே இல்லாமல் மட்டும் இருக்க கூடாது.

அப்படி இருந்தால் படுக்கையறை காட்சியில் நடிப்பேன்:

கதையோடு ஒன்றிப்போன படுகையறை காட்சி என்றால் நான் நிச்சயமாக நடிப்பேன். சம்பந்தம் இல்லாமல் ரொமான்ஸ் பண்ண மாட்டேன்.

படுக்கை அறை காட்சிகளில் நடிப்பதெல்லாம் தனிப்பட்ட நபரின் விருப்பம் என அவர் வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார்.

திரைப்பட வாய்ப்புகளுக்காக நடிகைகள் இப்படி வெளிப்படையாகவே படுக்கை அறை காட்சிகளில் நடிப்பேன் என கூறுவது மக்கள் இடையே ஒரு அதிருப்தி ஏற்படுத்தியிருக்கிறது.

   

--Advertisement--