“தொலைக்காட்சி திரைமறைவில் இது தான் நடக்குது.. என் கண்ணால பாத்தேன்" - நடிகை தீபா அதிர்ச்சி தகவல்

“தொலைக்காட்சி திரைமறைவில் இது தான் நடக்குது.. என் கண்ணால பாத்தேன்” – நடிகை தீபா அதிர்ச்சி தகவல்

விஜய் டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்று, மக்களின் மத்தியில் அறிமுகமானவர் நடிகை தீபா. கடைக்குட்டி சிங்கம் படத்தில், நடிகர் கார்த்தியின் அக்காக்களில் ஒருவராக, மாரிமுத்து மனைவியாக நடித்திருப்பார்.

நடிகை தீபா

அதேபோல், நெல்சன் இயக்கத்தில் டாக்டர் படத்தில், சிவகார்த்திகேயனுடன் இணைந்து சில காட்சிகளில் காமெடி செய்திருப்பார்.

தீபாவுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய பெயர் வாங்கிக் கொடுத்த படம் என்றால், அது மாயாண்டி குடும்பத்தார் தான். அந்த படத்தில், மணிவண்ணன் மகளாக நடித்திருப்பார்.

தன் வீட்டு விசேஷத்துக்கு வந்துவிட்டு 50 ஆயிரம் ரூபாய் மொய் செய்துவிட்டு, கறிசோறு சாப்பிடாமல் போகும் தம்பி பரமனுக்காக. நடுரோட்டில் அழுது ஆர்ப்பாட்டம் செய்யும் அந்த காட்சியில், அக்கா தம்பி உறவை அப்படியே பிரதிபலித்திருப்பார் தீபா.

--Advertisement--

அற்புதமான நடிப்பு

அந்த உணர்ச்சிக்கரமான காட்சியில், மிக அற்புதமான நடிப்பை வழங்கிய பிறகுதான், அவருக்கு டிவி சீரியல்களில், படங்களில் நடிக்கும் வாய்ப்பு மிக அதிகமாக வந்தது. அவரது வெள்ளந்தியான பேச்சும், கள்ளம் கபடமற்ற சிரிப்பும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப் போனது.

இதையும் படியுங்கள்: “காரில் கால்களை தூக்கிட்டு இதை பண்றது ஒரு விதமான Vibe..” நிவேதா பெத்துராஜை விளாசும் ரசிகர்கள்..!

சீரியல்கள்

மெட்டி ஒலி சீரியல்தான் தீபா நடித்த முதல் சீரியல். இதில் மீனா என்ற கேரக்டரில் நடித்திருப்பார். தொடர்ந்து கோலங்கள், வாணி ராணி, சரவணன் மீனாட்சி, லட்சுமி ஸ்டோர்ஸ், பாரதி கண்ணம்மா, செந்தூரப்பூவே, பூவா தலையா உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார்.

விஜய் டிவியில் குக் வித் கோமாளி சீசன் 2விலும் ஒரு போட்டியாளராக பங்கேற்று அசத்தியிருந்தார் தீபா.

ஆடல் பாடல் நிகழ்ச்சி

சமீபத்தில் திருவண்ணாமலையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகை தீபா பேசுகையில், தொலைக்காட்சிகளில் நடத்தப்படும் ஆடல் பாடல் போட்டிகளில் வெற்றி பெறுவதற்காக, குழந்தைகளை அவர்களது பெற்றோர் சித்ரவதை செய்வதாக குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அந்த நிகழ்ச்சியில் நடிகை தீபா பேசியதாவது,
உலகமே போட்டி போட்டுட்டு போகுது. என்புள்ளை பெருசா, உன் புள்ளை பெருசா என பெற்றோர்களின் பொறாமைத்தனத்தை பிள்ளைகள் மீது திணித்து அந்த குழந்தைத்தனத்தையே மறக்கடிக்கறாங்க.

கண்ணால பாத்திருக்கிறேன்

இன்னும் டிவியில் எல்லாம் குழந்தை ஸ்டான்ஸ் ஆடறாங்க, பாட்டு பாடறாங்க. நான் கண்ணால பார்த்திருக்கிறேன். அந்த குழந்தைகளை அந்த தாய்மார்கள் எத்தனை சித்ரவதை செய்கிறார்கள் என்று. குழந்தைகளின் மனநிலை பாதிக்கிற அளவுக்கு சித்ரவதை செய்கிறார்கள்.

இதையும் படியுங்கள்: டூ பீஸ் நீச்சல் உடையில்.. நீர்த்துழிகள் சொட்ட சொட்ட.. தீயாய் பரவும் ஜோதிகாவின் வீடியோ..!

என் குழந்தை உலகத்திலேயே பெரிய ஆளா வரணும். இயற்கையிலேயே குழந்தைகளுக்கு திறமை இருந்தால், இயற்கையிலேயே குழந்தைகளுக்கு பாடக் கூடிய திறமை இருந்தால், யாரும் மறைக்க தேவையில்லை. எப்படி இருந்தாலும் அது வெளியே வந்துவிடும்.

குரங்கு பொம்மையல்ல

தயவு செய்து புரிந்துக்கொள்ளுங்கள். குழந்தைகள் என்பது உங்கள் கையில் இருக்கும் குரங்கு பொம்மையல்ல. நீங்கள் சொல்வது போல் எல்லாம் ஆடுவதற்கு என்று பேசியிருக்கிறார் நடிகை தீபா.

“தொலைக்காட்சி திரைமறைவில் பெற்ற குழந்தைகளை, தாய்மார்களே கொடுமை செய்வதை என் கண்ணால பாத்தேன்” என்று நடிகை தீபா பேசியுள்ள இந்த அதிர்ச்சி தகவல் இப்போது வைரலாகி வருகிறது.