மாமனார் செய்கிற வேலையா இது..? எவ்வளவு சொல்லியும் கேக்கல.. தனுஷ் விவாகரத்து.. ரகசியம் உடைத்த பிரபல நடிகர்..

நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இடையில் ஏற்பட்ட பிரிவின் தொடர்ச்சியாக, இந்த விவகாரம் இப்போது விவாகரத்தில் வந்து நிற்கிறது. எப்படியும் மீண்டும் இருவரும் இணைந்து விடுவார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், இப்போது நடிகர் தனுஷும் ஐஸ்வர்யாவும் சென்னையில் உள்ள குடும்பம் நல நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்த நிலையில் தனுஷ் ஐஸ்வர்யா பிரிவுக்கு ரஜினிகாந்தின் செயல்பாடும் ஒரு காரணம் என்று பிரபல நடிகர், வெளிப்படையாக பேசியிருக்கிறார். இது தற்போது வைரலாகி வருகிறது.

தனுஷ் – ஐஸ்வர்யா

நடிகர் தனுஷ்- ஐஸ்வர்யா விவாகரத்து சமாச்சாரம் தான் கடந்த இரண்டு தினங்களாக சமூக வலைதள பக்கங்களை ஆட்டிபடைத்துக் கொண்டிருக்கிறது. இவர்களுடைய விவாகரத்துக்கும் இதுதான் காரணம் என பல்வேறு கருத்துக்கள், சர்ச்சையான விஷயங்கள் இணையத்தில் பரவிக்கொண்டிருக்கின்றன.

ஆனால் அதெல்லாம் உண்மையா என்றால் யாருக்கும் தெரியாது. குறிப்பிட்ட இரண்டு குடும்பங்களுக்குள் நடந்த பிரச்சனைதான் அது என்பதால், அதனை உறுதியிட்டு யாரும் உண்மை என உறுதிப்படுத்த முடியாது.

மரியாதை கொடுக்கவில்லை

இந்நிலையில் புதிய தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகிக் கொண்டு இருக்கிறது. அதில் நடிகர் தனுஷின் பெற்றோருக்கு ஐஸ்வர்யா தனுஷ் எள்ளளவும் மரியாதை கொடுக்கவில்லை. அவர்களுடன் ஆசையாக அன்னியோனியமாக பேசி பழகியது கிடையாது என்று கூறுகிறார்கள்.

இதையும் படியுங்கள்: என் செல்லப்பேரு ஆப்பிள்.. நடிகை முமைத் கான் இப்போ எப்படி இருக்கார் பாருங்க..!

மேலும் நடிகர் ரஜினிகாந்த் எதேச்சையாகவோ அல்லது திட்டமிட்டோ செய்த ஒரு விஷயம் நடிகர் தனுஷின் மனதை உடைத்து விட்டது என்றும் கூறுகிறார்கள்.

ரஜினியின் சம்மந்திதான்

அது என்னவென்றால், நடிகர் தனுஷின் தந்தை இயக்குனர் கஸ்தூரிராஜா படம் சம்பந்தப்பட்ட வியாபாரத்தில் ஒரு இடத்தில் கடன் வாங்கி இருக்கிறார். அந்த கடனுக்கு நடிகர் ரஜினிகாந்த் சம்மந்திதான் நான் என்று கூறி ரஜினிகாந்தின் பெயரை முன் நிறுத்தி கடனை வாங்கி இருக்கிறார்.

நான் பொறுப்பு இல்லை

அதன் பிறகு அதில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக கடன் கொடுத்தவர்கள் நீதிமன்றத்தை நாடிய நிலையில், அதில் ரஜினிகாந்தின் பெயர் அடிபட்டது. அப்போது நடிகர் ரஜினிகாந்த், கஸ்தூரிராஜா கடன் வாங்கி இருந்தால் அதற்கு அவர் தான் பதில் சொல்ல வேண்டும். அதற்கு நான் பொறுப்பு ஏற்க முடியாது என பேட்டி கொடுத்திருந்தார். இது மருமகன் தனுஷை மிகவும் காயப்படுத்தி இருக்கிறது.

இதையும் படியுங்கள்: திடீர் ட்ரெண்டாகும் #நன்றிகெட்ட_ரஞ்சித் என்ன காரணம்..? அப்படி என்ன பண்ணாருன்னு பாருங்க..!

மாமனார் செய்கிற வேலையா இது?

என்னதான் இருந்தாலும், தன்னுடைய மாமனார் இப்படி பேசி இருக்க கூடாது. என்ன பிரச்சனையோ, அதை பார்த்து நான் சரி செய்கிறேன் என கூறியிருக்கலாம் அல்லது அது என்ன விஷயம் என்று, எனக்கு இதுவரை தெரியாது. நான் அதை கவனிக்கிறேன் என கூறி இருக்கலாம்.

பொதுவாக அவருக்கும் எனக்கும் சம்பந்தம் கிடையாது என பேசியது ஏற்றுக்கொள்ள முடியாது. ஒரு மாமனார் செய்கிற வேலையா இது என நடிகர் தனுஷ் அப்போதே நொடிந்து போயிருக்கிறார்.

விரிசல்கள் அதிகமாகி…

அடுத்தடுத்து விரிசல்கள் அதிகமாகிக் கொண்டே செல்ல, விவாகரத்திற்கு வந்து நின்றிருக்கிறது இந்த நட்சத்திர தம்பதியின் திருமண வாழ்க்கை இன்று கூறியிருக்கிறார் பிரபல பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன்.