என் செல்லப்பேரு ஆப்பிள்.. நடிகை முமைத் கான் இப்போ எப்படி இருக்கார் பாருங்க..!

என் செல்லப்பேரு ஆப்பிள்.. நடிகை முமைத் கான் இப்போ எப்படி இருக்கார் பாருங்க..!

தமிழ் சினிமாவை பொறுத்தவரை நடிகைகளுக்கு என்று எப்போதுமே முக்கியத்துவம் உள்ளது. அவர்களுக்கான நல்ல கேரக்டர்களை, பல இயக்குனர்கள் அன்று முதல் இன்று வரை தந்து கொண்டுதான் இருக்கின்றனர்.

அந்த வகையில் பல நடிகைகள் மிகச் சிறந்த நடிப்பாற்றலை வெளிப்படுத்தி தங்களை ஒரு சிறந்த நடிகையாக ரசிகர்கள் மத்தியில் நிரூபித்திருக்கின்றனர். அப்படிப்பட்ட நடிகைகளுக்கு தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் எப்போதுமே அமோகமான வரவேற்பு உள்ளது.

கவர்ச்சியை மட்டுமே நம்பி

தமிழ் சினிமாவில் நடிகைகள் சாரதா, ஊர்வசி, ரேவதி, நதியா, அம்பிகா, ராதா, ராதிகா, ரம்யா கிருஷ்ணன், லட்சுமி, சுகாசினி, சுகன்யா என பல நடிகைகளுக்கு ரசிகர்கள் மத்தியில் தனி மரியாதை இருந்து வருகிறது.

என்றாலும் குறிப்பிட்ட சில நடிகைகள் கவர்ச்சியை மட்டுமே நம்பி, தமிழ் சினிமாவில் காலம் தள்ளி வருகின்றனர். குறிப்பாக கடந்த 10, 15 ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் ஐட்டம் சாங் எனப்படும் குத்தாட்ட பாடல்களுக்கு நடிகைகள் நடனம் ஆடுவது அதிகரித்து வருகிறது.

இப்படி நடனமாடும் நடிகைகள் ஒரு சில படங்களில் மட்டுமே அவர்களால் நடனமாடி ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்க்க முடியும். அதன் பிறகு அவர்களால் தங்களது இமேஜை காப்பாற்றிக் கொள்ள முடியாது.

--Advertisement--

என் செல்லப்பேரு ஆப்பிள்.. நடிகை முமைத் கான் இப்போ எப்படி இருக்கார் பாருங்க..!

முமைத் கான்

கடந்த 2004 ஆம் ஆண்டு பாலிவுட் படத்தில் ஐட்டம் டான்சராக அறிமுகமானவர்தான் நடிகை முமைத் கான். தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் நிறைய ஐட்டம் பாடல்களுக்கு குத்தாட்டம் போட்டவர்.

ஐட்டம் சாங் டான்ஸர்

இவர் நடிகர் பிரசாந்த் நடித்த மஜ்னு படத்தில் ஐட்டம் சாங் டான்ஸராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு கௌதம் மேனன் இயக்கத்தில், நடிகர் கமல்ஹாசன் நடித்த வேட்டையாடு விளையாடு படத்தில் ‘நெருப்பே சிக்கி முக்கி நெருப்பே’ பாடலில் குத்தாட்டம் போட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

என் செல்லப் பேரு ஆப்பிள்

தெலுங்கு பட உலகில் டோலிவுட்டில் வெளியான போக்கிரி படத்தில் மகேஷ்பாபு உடன் ஆட்டம் போட்ட முமைத் கான் தமிழில், நடிகர் விஜய் உடன் ‘என் செல்லப்பேரு ஆப்பிள்’ என்ற பாடலுக்கு குத்தாட்டம் போட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்: திடீர் ட்ரெண்டாகும் #நன்றிகெட்ட_ரஞ்சித் என்ன காரணம்..? அப்படி என்ன பண்ணாருன்னு பாருங்க..!

என் பேரு மீனா குமாரி

நடிகர் சியான் விக்ரம், நடிகை ஸ்ரேயா நடித்த கந்தசாமி படத்தில், என் பேரு மீனாகுமாரி… என்ற பாடலுக்கு இவர் போட்ட குத்தாட்டம் ஏகப்பட்ட வைப்பை ரசிகர்கள் மத்தியில் உருவாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2016 ஆம் ஆண்டில் வீட்டில் இருந்த போது, தடுக்கி விழுந்ததில் முமைத் கானுக்கு தலையில் அடிபட்டது. இதில் மூளைக்கு பிரச்சனை ஏற்பட்டதால் 15 நாட்கள் சுயநினைவு இல்லாமல் கோமாவில் முமைத் கான் இருந்துள்ளார்.

அடுத்து, தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர், போதை பொருள் வழக்கில் சிக்கினார். அதனால் அந்த நிகழ்ச்சியில் இருந்தும் வெளியேற்றப்பட்டார்.

முரட்டு சிங்கிள்

இப்போது 38 வயதாகும் முமைத் கான் திருமணம் செய்து கொள்ளாமல் முரட்டு சிங்கிளாக தனிமையில் வசித்து வருகிறார். தற்போது அவரது லேட்டஸ்ட் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி, வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்கள்: பொட்டு துணி இல்லாமல் நடிக்க பேரம் பேசிய பேபிம்மா நடிகை.. என்ன பேபிம்மா இதெல்லாம்..

என் செல்லப்பேரு ஆப்பிள்.. நடிகை முமைத் கானா இது, என புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள் ஆச்சரியப்படுகின்றனர்.