கள்ளக்காதலின் நாயகன் தனுஷ்.. ரஜினியின் 2வது மகளையும் விடல.. போட்டு உடைத்த பிரபலம்..!

நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா விவாகரத்தின் பல பின்னணி விவகாரங்கள் தற்போது திடுக்கிடும் பின்னணி சம்பவங்களை கொண்டதாக வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

தமிழா தமிழா பாண்டியன்

இதுகுறித்து பிரபல பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன், நேர்காணல் ஒன்றில் கூறியிருப்பதாவது,

நடிகர் தனுஷை பொருத்தவரை அவர் சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி, பல படங்களை டைரக்ட் செய்ய வேண்டும். பல படங்களை தயாரிக்க வேண்டும் என்பதில் மிகுந்த ஆர்வமாக இருக்கிறார்.

ஆனால், தமிழ் சினிமாவை பொறுத்தவரை மிகப் பெரிய தயாரிப்பு நிறுவனங்கள், பல படங்களை தயாரித்து கடைசியில் பெருத்த நஷ்டத்தை சிக்கி தவித்து, இப்போது பல தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது தயாரிப்பு நிறுவனங்களையே மூடிவிட்டன என்பது தான் உண்மை.

உதாரணமாக ஏவிஎம் நிறுவனம், ஜெமினி ஸ்டுடியோ, சிவாஜி பிலிம்ஸ், ஜிவி பிலிம்ஸ் உள்ளிட்ட பல நிறுவனங்கள் இப்போது இல்லை.

--Advertisement--

அதனால், தனது மூத்த மருமகன் தனுஷை படம் தயாரிக்க வேண்டாம், டைரக்ட் செய்ய வேண்டாம் என்று நடிகர் ரஜினிகாந்த் பலமுறை வலியுறுத்தியும் அவர் கேட்கவில்லை.

ரஜினிகாந்த் சொத்து

நடிகர் ரஜினிகாந்த் ஒரு படத்தில் நடித்தால், 150 கோடி சம்பளம் என்றால் அந்த பணம் முழுமையாக அவரது மனைவி லதா ரஜினிகாந்த் கைக்கு வந்துவிடும். உடனடியாக ஒரு சொத்தாக, அதை மாற்றி விடுவார்கள். இதுதான் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. அப்படி இதுவரை சேர்த்த வகையில் 5000 கோடி ரூபாய்க்கு மேல் ரஜினிக்கு சொத்து உள்ளது. கேளம்பாக்கத்தில் 40 ஏக்கரில் பண்ணை வீடு உள்ளது.

ஆனால் நடிகர் தனுஷ் சம்பாதிக்கும் எந்த பணமும், அவரது மனைவி ஐஸ்வர்யா கட்டுப்பாட்டில் இல்லை. தனுஷ் எவ்வளவு சம்பாதிக்கிறார், என்ன செலவு செய்கிறார் என்று எதுவும் தெரியாது.

தனுஷ்

இந்நிலையில் நடிகர் தனுஷ்க்கு 200 கோடி ரூபாய் வரை கடன் உள்ளது. இப்படி தொடர்ந்து தனுஷ் சினிமா தயாரிப்பு, டைரக்சன் இறங்கினால் இன்னும் 20 ஆண்டுகளில் அது பல்லாயிரம் கோடி கடனை ஏற்படுத்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், நடிகர் தனுஷ் உடன் ஐஸ்வர்யா இருந்தால், ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்கு பிறகு, தனுஷ் படும் கடன்களுக்கு ஐஸ்வர்யா தான் பொறுப்பாக முடியும்.

ஐஸ்வர்யா – சௌந்தர்யா

ரஜினியின் வாரிசுதாரராக உள்ள ஐஸ்வர்யா, சௌந்தர்யா இருவருக்கும் ஆளுக்கு 2500 கோடி ரூபாய், 3000 கோடி ரூபாய் ரஜினியின் சொத்துகள் வரும் என்ற நிலையில், நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் சேர்ந்து வாழ்ந்தால், அந்த சொத்து முழுவதையும் நடிகர் தனுஷ் படம் கடனுக்கே கட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு ,தெருவுக்கு வர வேண்டியதுதான்.

இதை முன்கூட்டிய தெளிவாக அறிந்துக்கொண்ட லதா ரஜினிகாந்த் தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து என்ற முடிவை எடுத்துள்ளார்.

லதா ரஜினிகாந்த் எடுத்த முடிவு

நடிகர் தனுஷூடன் வாழ்ந்தால் இருக்கிற மொத்த சொத்தையும் அழித்து விடுவார். தனஷை விவாகரத்து செய்துவிட்டால், 2500 கோடி ரூபாய் சொத்து உனக்கு இருக்கும். குழந்தைகளும் ரஜினியின் பேரன்கள் என்ற செல்வாக்குடன் இருப்பார்கள் என்று லதா ரஜினிகாந்த் சொல்ல, அதற்கு ஐஸ்வர்யாவும் ஒத்துக் கொண்டிருக்கிறார்.

மொத்த சொத்தையும்…

இதற்கிடையே சௌந்தர்யா தனது முதல் கணவரை பிரிந்து, விவாகரத்து செய்து தனியாக இருந்த நிலையில், அவரையும் தனது இரண்டாவது மனைவியாக்கிக் கொண்டு மொத்த சொத்தையும் அபகரித்து விடலாம் என்று கணக்கு போட்டு அதற்கான வேலைகளிலும், தனுஷ் ஈடுபட்டு இருக்கிறார்.

ஒரு கட்டத்தில் அதை புரிந்து கொண்ட லதா ரஜினிகாந்த், உடனடியாக அவருக்கு வேறு ஒரு வரன் பார்த்து 2வது திருமணம் செய்து வைத்து தனுஷிடமிருந்து சௌந்தர்யாவை காப்பாற்றி இருக்கின்றார்.

கள்ளக்காதலின் நாயகன்

கள்ளக்காதலின் நாயகன் அமலாபால், சமந்தா, திரிஷா, சுருதிஹாசன் என பலருடன் காதல் மன்மத லீலைகளை காட்டி வந்தவர் என்பதும் பலரும் அறிந்ததுதான். இந்த சூழ்நிலையில்தான் இந்த விவாகரத்துக்கு லதா ரஜினிகாந்த், ரஜினிகாந்த் முழு சம்மதம் தெரிவித்து இந்த விவாகரத்து நடக்கிறது.

விவகாரத்துக்கு அடித்தளமாக அமைந்தது

ரஜினியின் சொத்தை முழுமையாக அடைய ரஜினியின் 2வது மகளையும் விடவில்லை தனுஷ். படத்தயாரிப்பு, இயக்கம் என பல வகையில் பணத்தை செலவு செய்ய தொடங்கினார். இதுவே விவாகரத்துக்கு அடித்தளமாக அமைந்து விட்டது என பிரபல பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் அவர்கள் பகீர் தகவல்களை இந்த நேர்காணலில் வெளியிட்டுள்ளார்.