“எரிச்சலா இருக்கு..” – கதறி அழும் DD-யை விளாசும் ரசிகர்கள்..! – யார் மேல தப்பு.. வைரலாகும் வீடியோ..!

சின்னத்திரை தொகுப்பாளினியாக ஏராளமான ரசிகர்களை தன் வசம் வைத்திருப்பவர் DD என்கின்ற திவ்யதர்ஷினி.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தாண்டி விருது விழாக்கள், திரைப்பட இசை விழாக்கள் மற்றும் சினிமா சார்ந்த விழாக்கள் ஆகியவற்றை தொகுத்து வழங்கி வருகிறார்.

அவருடைய காலில் அறுவை சிகிச்சை செய்திருக்கின்ற காரணத்தினால் அவரால் நீண்ட நேரம் நிற்க முடியாது.

ஆனாலும் கூட சேரில் அமர்ந்து கொண்டு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார் திவ்யதர்ஷினி.

இந்நிலையில், சமீபத்தில் நடந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாடகர் பிரதீப் ஜெய் பீம் திரைப்படத்தில் இடம் பெற்ற தலைகோதும் இளங்காத்து என்ற பாடலை பாடினார்.

அப்போது உணர்ச்சிவசப்பட்ட திவ்யதர்ஷினி கண்ணீர் விட்டு கதறி அழுத காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள் DD-யின் செயல்களைப் பார்த்தால் எரிச்சலாக இருக்கிறது என்று கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

என்னதான் உணர்ச்சிவசப்பட்டாலும் பாடலின் தொடக்கத்திலேயே எப்படி இந்த அளவுக்கு உணர்ச்சிவசப்பட முடியும் என DD-யை விளாசி வருகின்றனர்.

இன்னும் சில ரசிகர்கள், DD பாடலில் இடையில் தான் உணர்ச்சி வசப்பட்டிருப்பார் என்றும் எடிட்டர் DD-yயின் ரியாக்ஷனை பாடலின் தொடக்கத்திலேயே தூக்கி வைத்து விட்டார். இது DD-யின் தவறு அல்ல என்றும் கூறி வருகின்றனர்.

   

--Advertisement--