Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Tamil Cinema News

கல்யாணத்துக்கு பிறகு இளம் நடிகருடன் உறவு.. புருஷனை கழட்டி விட்ட அம்மா நடிகை..!

சினிமா துறையில் நடிகைகள் சிலர், தகாத உறவுகளில் ஆர்வம் காட்டுகின்றனர். குறிப்பாக கணவன், வளர்ந்த பிள்ளைகள் இருந்தாலும் இளம் நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கும்போது, அவர்கள் மீது ஏக்கம் கொள்கின்றனர்.

எப்படியாவது கொஞ்சிப் பேசி அவர்களை தங்கள் வலைக்குள் விழ வைத்து விடுகின்றனர். சில வாலிப நடிகர்கள் ஆண்ட்டி பிரியர்களாக இருப்பதால், 10 வயது 15 வயது தன்னை விட மூத்தவர்களாக இருந்தாலும், அனுபவம் மிக்க அவர்களிடம், தங்களை ஒப்படைக்க அவர்களும் தயங்காமல் சம்மதித்து விடுகின்றனர்.

மகுடி வாசித்த பாம்பு

இதையடுத்து, அவர்களுடன் தொடர்ந்து டேட்டிங்கில் ஈடுபடும் மூத்த நடிகைகள், தங்களது வித்தைகளை காட்டி, மகுடி வாசித்த பாம்பு போல இளம் நடிகர்களை தங்களது கண்ட்ரோலில் வைத்துக் கொள்கின்றனர்.

சிலர் தொடர்ந்து தங்களது சந்தோஷத்தை, கொண்டாட்டங்களை தொடர்கின்றனர்.

ஆனால் திருமணமாகி பல ஆண்டுகளாகி, கணவர் இருந்தும், வளர்ந்த பிள்ளைகள் இருந்தும், அரைசதம் வயது கடந்தும் இப்படி தகாத உறவு, திருட்டுத்தனம், ஒழுக்கம் கெட்ட வாழ்க்கை வாழ்கிறோமே என்ற எந்த குற்ற உணர்வும் அவர்களுக்கு ஏற்படுவதில்லை.

--Advertisement--

சந்தோஷம் மட்டுமே

அதற்கு முக்கிய காரணம் சினிமாவில் நடிப்பது போலவே, நிஜ வாழ்க்கையிலும் அவர்கள் நடிப்பதுதான். அவர்களை பொறுத்தவரை சந்தோஷம் மட்டுமே பிரதானமாக இருக்கிறது. வேறு எதைப் பற்றியும் அவர்கள்
பொருட்படுத்துவதில்லை.

மதுபான நடிகை

கடந்த 1990களில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தபோது தன்னை அறிமுகப்படுத்திய இயக்குனரின் மகனை திருமணம் செய்து கொண்டவர் அந்த மதுபான நடிகை.

சினிமாவில் அறிமுகமான ஆரம்பத்தில், கவர்ச்சி காட்டேரியாக இருந்த அவர் ஒரு கட்டத்தில், குடும்பப்பாங்கன கதாபாத்திரங்களில் நடிக்கும் அளவுக்கு இறங்கி வந்தார்.

அதன் பிறகு அவருடைய மார்க்கெட் சரியத் தொடங்கியதும், மீண்டும் கிளாமர் களம் புகுந்து இளம் நடிகர்களுடன் கவர்ச்சி குத்தாட்டம் போடத் தொடங்கினார்.

இளம் நடிகர் ஒருவருடன்…

இப்படி இருந்த நடிகை இளம் நடிகர் ஒருவருடன் காதல் வயப்பட்டு அவருடன் டேட்டிங் செய்து வந்தார் என்று கூறப்பட்டது.

இதில் கொடுமையான விஷயம் என்னவென்றால் அந்த நடிகரின் வயதில் தனக்கொரு மகன் இருக்கிறார் என்பதை மறந்து விட்டு, இளம் நடிகருடன் தகாத உறவில் இருக்கிறார் நடிகை என்பதுதான்.

கணவரை கழட்டி விட்டார்

இதில் மற்றொரு கொடுமை என்னவென்றால், தன்னுடைய கணவரை கழட்டி விட்டு தற்போது தனியாக வசித்துக் கொண்டிருக்கிறார் அம்மணி. ஆனால், கணவரை பிரிந்து பல ஆண்டுகளாகியும், தற்போது வரை கணவரை பிரிந்து விட்டதை வெளியில் பகிரங்கமாக அறிவிக்காதவர் அந்த நடிகை என்பது குறிப்பிடத்தக்கது.

வேலையை பார்க்கிறேன்

இதற்கு முக்கிய காரணம் தன்னுடைய பாதுகாப்புக்கு என்று நினைக்கிறாராம். சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியிருந்த அவர், நானும் என் கணவரும் தனியாகத்தான் இருக்கிறோம். ஆனால், தொடர்பில் இருக்கிறோம். அவர் அவருடைய வேலையை பார்க்கிறார். நான் என்னுடைய வேலையை பார்க்கிறேன். அப்போது வரும் போதெல்லாம் என்னை பார்த்து விட்டு செல்வார் என்று பட்டும் படாமல் பேசி இருந்தார்.

ஆனால், கடந்த ஏழு ஆண்டுகளுக்கு மேலாக கணவரை பிரிந்து தான் வாழ்ந்து வருகிறார் இந்த அம்மா நடிகை என்பது குறிப்பிடத்தக்கது.

காதல் வானில் சிறகடித்து…

இந்நிலையில், இளம் நடிகருடன் வேறுபட்டுள்ள உறவால் காதல் வானில் சிறகடித்து பறந்து வருகிறார் என்றும், திரைப்படங்களில் இளம் நடிகைகளுக்கு இணையான கவர்ச்சி கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார் என்றும் கூறுகிறார்கள் விவரம் அறிந்த வட்டாரங்கள்.

கல்யாணத்துக்கு பிறகு இளம் நடிகருடன் உறவு வைத்துக்கொண்டு, புருஷனை கழட்டி விட்ட அம்மா நடிகை பற்றிய கிசுகிசு, கோலிவுட் வட்டாரத்தில் வேகமாக பரவி வருகிறது.

Continue Reading
 

More in Tamil Cinema News

Trending Now

To Top