Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

“ஞாபக சக்தியை அதிகரிக்கும் சூரிய வழிபாடு..!” – என்னென்ன நன்மைகள் தெரியுமா?

இந்த உலகத்தில் ஜீவராசிகள் நல்ல முறையில் இருப்பதற்கு மிக முக்கியமான காரணமாக இருக்கக்கூடியவர் சூரிய பகவான் என்று கூறலாம். இவரின் ஒளியை நம்பி தான் எல்லா பணிகளும் நடைபெறுகிறது.

அந்த வகையில் சூரிய பகவானை வழிபடுவதின் மூலம் எண்ணற்ற நன்மைகள் நமக்கு கிடைக்கிறது. குறிப்பாக உங்கள் மனம் புத்துணர்வு அடைவதோடு மன அமைதியும் கிடைக்கிறது.

அது மட்டுமல்லாமல் அதிகாலை நேரத்தில் ஐந்து நிமிடம் மன அமைதியோடு எந்த ஒரு சிந்தனையும் இல்லாமல் சூரியனை தியானம் செய்யும்போது உங்கள் ஞாபக சக்தி அதிகரிப்பதாக கூறுகிறார்கள்.

இந்த சூரிய வழிபாடானது ரிக்வேத காலத்திற்கு முன்பு இருந்தே ஏற்பட்டு உள்ளது. சூரிய வழிபாட்டின் மூலமும் சூரிய ஒளியின் மூலமும் சரும சம்பந்தப்பட்ட வியாதிகள் அனைத்தும் நிவர்த்தியாவதாக கூறியிருக்கிறார்கள்.

ஞாயிற்றுக்கிழமைகளில் சூரிய வழிபாடு செய்வது மிகவும் நல்லது. குறிப்பாக சூரிய நமஸ்காரம் செய்து சூரியனை வழிபடுவதின் மூலம் உடலில் எத்தகைய நோய்கள் இருந்தாலும் அதனை சரி செய்யக்கூடிய ஆற்றல் சூரிய நமஸ்காரத்திற்கு உள்ளது.

--Advertisement--

சூரிய நமஸ்காரம் செய்த பிறகு ஓம் சூர்யா ஐயன நமக என்ற மந்திரத்தை மூன்று முறை உச்சரித்து வாருங்கள். இதன் மூலம் நீங்கள் செய்கின்ற காரியங்கள் அனைத்தும் வெற்றியடையும்.

உங்களது சுகபோக வாழ்வுக்கு இந்த சூரிய வழிபாடு துணை செய்யும். சூரிய வழிபாடை நீங்கள் செய்வதன் மூலம் அதிர்ஷ்டம் மட்டுமல்லாமல் ராஜயோகம், பட்டம், பதவி பணம் நில புலன்கள் அனைத்தும் உங்களைத் தேடி வரும்.

சூரிய வழிபாடை செய்து வருபவர்களுக்கு அதிகாரம், ஆட்சி, ஆளுமை போன்றவை ஏற்படும்.மேலும் சூரிய வழிபாட்டை மேற்கொள்வதன் மூலம் உங்கள் கண்களுக்கு ஒளி அதிக அளவு கிடைக்கும்.

 ஆத்ம பலம், தேகபலம் அதிகரிக்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும். நிர்வாக திறன் ஏற்படும். முகத்தில் தேஜஸ் இருக்கும். பேச்சு ஆற்றல், நம்பிக்கை, ஆக்கப்பூர்வமான சிந்தனைகள் போன்றவை உருவாகும்.

எனவே நீங்கள் சூரிய வழிபாட்டை நித்தமும் மேற்கொண்டு எனக்கு நன்மைகளை பெற ஆதித்ய ஹிருதய ஸ்லோகத்தை படியுங்கள்.

Continue Reading
 

More in

Trending Now

To Top