நடிகையுடன் ரூமுக்குள் கமல்.. பஞ்சாயத்து பேச வந்து.. முகம் சுழித்த நண்பர்.. கெஞ்சிய முதல் மனைவி வாணி கணபதி..

நடிகையுடன் ரூமுக்குள் கமல்.. பஞ்சாயத்து பேச வந்து.. முகம் சுளித்த நண்பர்.. கெஞ்சிய முதல் மனைவி வாணி கணபதி..

நடிகர் கமல்ஹாசனுக்கு உலகநாயகன் என்ற பட்டப் பெயர் உண்டு. அதற்கு சற்றும் குறை சொல்ல முடியாத அளவுக்கு உண்மையிலேயே அவர் நடிப்பில், கலைத்துறையில், திறமையில், தனது ஆற்றலில் கமல்ஹாசன் உலக நாயகன்தான்.

கமல்ஹாசன்

ஆனால் தனது சினிமா வாழ்க்கையில் சிறந்த கலைஞனாக பெயர் வாங்கிய கமல்ஹாசன், சொந்த வாழ்க்கையில் அன்று முதல் இன்று வரை கடுமையான விமர்சனங்களை அவர் சந்தித்துக் கொண்டே இருக்கிறார்.

அதனால்தான் நடிகராக கமல்ஹாசனை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் ரசிகர்கள், மக்கள் நீதிமய்யம் கட்சி தலைவராக அவரை பார்க்கும்போது, அறிமுகமற்ற நபரை போல விலகி நடக்கிறார்கள்.

வாணி கணபதி திருமணம்

நடிகர் கமல்ஹாசனுக்கு 1978ம் ஆண்டில் வாணி கணபதி என்பவருடன் திருமணம் நடந்தது. இவர் மிகப்பெரிய டான்சர். நல்ல அழகி. முதலில் கமல்ஹாசன் தன்னுடன் நடித்த நடிகை ஸ்ரீவித்யாவை தான் காதலித்தார். அவரை திருமணம் செய்யவும் ஆசைப்பட்டார்.

ஆனால் ஸ்ரீவித்யா அம்மா, அந்த திருமணத்துக்கு சம்மதிக்கவில்லை. அந்த ஸ்ரீவித்யா, பிற்காலத்தில் விஜய், அஜீத், சூர்யா போன்றவர்களுக்கு அம்மாவாக நடித்த ஸ்ரீவித்யா தான். அபூர்வ சகோதரர்கள் படத்தில் குள்ள கமல் அப்புவுக்கும் அம்மாவாக நடித்திருப்பார்.

சரிகாவுடன்…

வாணி கணபதியுடன் 10 ஆண்டுகள் வாழ்க்கை நடத்திய நிலையில், சரிகாவுடன் கமலுக்கு நட்பு ஏற்பட்டது. இதையறிந்த கமலின் மனைவி வாணி, மிகவும் வருத்தப்பட்டுள்ளார்.

சமீபத்தில் ஒரு நேர்காணலில் குணா படத்தின் டைரக்டரும், இளம் வயதில் இருந்தே கமலின் நெருங்கிய நண்பருமான சந்தானபாரதி இதுபற்றி அவரே கூறியிருக்கிறார்.

இதையும் படியுங்கள்: அம்மாவை மிஞ்சிய அழகில் ஐஸ்வர்யா ராயின் மகள்.. ஊரு கண்ணே பட்டுடும்.. சுத்தி போடுங்க..

சந்தான பாரதி

கமலின் நெருங்கிய நண்பரான சந்தான பாரதியிடம், சரிகாவுடன் கமல் பழக்கம் குறித்து கூறிய வாணி கணபதி, உங்கள் நண்பர் செய்வது சரியில்லை, கொஞ்சம் எடுத்துச்சொல்லி புரிய வையுங்கள், என்று வாணி கணபதி கூறியிருக்கிறார்.

அதன்பின்பு சந்தான பாரதி, நடிகர் கமலின் அண்ணன் சந்திரஹாசனை அழைத்துக்கொண்டு இதுபற்றி பேச கமலை சந்திப்பதாக ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்றுள்ளனர்.

மேக்கப் ரூமுக்குள்…

அப்போது கமல் அவர்கள் இருவரையும் தனது மேக்கப் ரூமுக்கு அழைத்து சென்றிருக்கிறார். அந்த மேக்கப் ரூமுக்குள் சரிகா இருந்திருக்கிறார். இதைப் பார்த்த சந்தான பாரதியும், சந்திரஹாசனும் அதிர்ந்து போயிருக்கின்றனர்.

நான் இந்த விஷயத்தை பற்றித்தானே பேச வந்தேன். ஆனால் இங்கே நிலமை வேற மாதிரி இருக்கிறதே என, எதுவுமே பேசுவதற்கு தோன்றாமல், வாணி கணபதி சொன்ன விஷயத்தை பற்றி பேசாமல் சென்றிருக்கிறார்.

இதையும் படியுங்கள்: சுற்றி 300 பேர் இருக்கும் போது.. முதன் முறையாக அது கிழிந்தது.. அலறிக்கொண்டு ஓடினேன்.. ஷகீலா கூறிய பகீர் தகவல்..

மீண்டும் திருமணம்

அதன்பிறகு பெரிய பிரச்னைகள் எல்லாம் நடந்த நிலையில், சரிகாவை தனது வீட்டுக்கே கூட்டிக்கிட்டு வந்த கமல், அவரை 1998ம் ஆண்டில் திருமணமும் செய்துக்கொண்டார்.

நான் எப்போதுமே என் நண்பர் கமல் பக்கம்தான். அதனால் அவரை எப்போதுமே நான் விட்டுக்கொடுக்க மாட்டேன் என்று அந்த நேர்காணலில் சந்தானபாரதி கூறியிருக்கிறார்.

எதுவுமே பேச தோன்றாமல்

முதல் மனைவி வாணி வீட்டில் இருந்த நிலையில், நடிகை சரிகாவுடன் மேக்கப் ரூமுக்குள் கமல் இருந்திருக்கிறார்.

இந்த சூழ்நிலையில் பஞ்சாயத்து பேச வந்து, முகம் சுளித்த கமலின் நண்பர் சந்தானபாரதி, தன்னிடம் கெஞ்சிய வாணி கணபதி பற்றி எதுவுமே பேச தோன்றாமல் திரும்பிச் சென்றிருக்கிறார். அந்த அளவுக்கு கமல்ஹாசன் சொந்த வாழ்க்கையில் நெறிமுறை தவறி இருந்திருக்கிறார்.