கோடிக்கணக்கில் சொத்து இருந்தும் சாமியார் ஆன முன்னணி நடிகை.. யாரு காரணம் தெரியுமா..?

கோடிக்கணக்கில் சொத்து இருந்தும் சாமியார் ஆன முன்னணி நடிகை.. யாரு காரணம் தெரியுமா..?

காதலிக்க நேரமில்லை படத்தில் அறிமுகமானவர் நடிகை காஞ்சனா. இதில் நடிகர் முத்துராமனுக்கு ஜோடியாக நடித்திருப்பார். ரவிச்சந்திரன், பாலையா, நாகேஷ், சச்சு, விஎஸ் ராகவன் உள்ளிட்டோர் நடித்த இந்த படத்தை ஸ்ரீதர் இயக்கியிருந்தார். மிகப்பெரிய வெற்றிப் படம். இப்போதைய தலைமுறையும் விரும்பி பார்க்கும் ஒரு படமாக இருக்கிறது.

காஞ்சனா

இந்த படத்தில் கதாநாயகியாக நடித்த காஞ்சனா குறித்து பல முக்கிய தகவல்களை, யாரும் அறியாத பல விஷயங்களை நடிகர் பயில்வான் ரங்கநாதன் கூறியிருக்கிறார். அதில் அவர் கூறும் தகவல்கள் பல ஆச்சரியங்களை ஏற்படுத்துகிறது.

கலர் படம் காஞ்சனா

நடிகை காஞ்சனா குறித்து, நடிகர் மற்றும் பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் வீடியோ ஒன்றில் கூறியதாவது,

நடிகை காஞ்சனாவுக்க கலர் படம் காஞ்சனா என்றே அன்று ஒரு பெயர் உண்டு. எம்ஜிஆர் சிவாஜி நடித்த பல படங்களில் நடித்திருக்கிறார். எம்ஜிஆருக்கு ஜோடியாக நடித்தார். சிவாஜிக்கும் ஜோடியாக நடித்தார். ஜெமினி கணேசனுக்கும் ஜோடியாக நடித்தார். கருத்துள்ள படங்களிலும் காஞ்சனா நடித்தார். கவர்ச்சியாகவும் சில படங்களில் நடித்தார்.

விமான பணிப்பெண்

துவக்கத்தில் விமானப் பணிப்பெண்ணாக, அதாவது ஏர்ஹோஸ்டலாக இருந்தவர் காஞ்சனா. அவர் ஏர்ஹோஸ்டலாக இருந்த நேரத்தில்தான் அவரது அழகையும், வாட்டசாட்டமாக உடல் அழகையும், திறமையும் பார்த்து டைரக்டர் ஸ்ரீதர் அவருக்கு, காதலிக்க நேரமில்லை என்ற படத்தில் நடிக்கும் வாய்ப்பை அளித்தார். அந்த படத்தில் தான் காஞ்சனா அறிமுகமானார்.

இதையும் படியுங்கள்: உள்ள இருக்குறது எல்லாமே பளிச்சுன்னு தெரியுது.. பொதுவெளியில் ஸ்ருதிஹாசன்.. வைரல் பிக்ஸ்..!

சொத்துகளை எல்லாம்…

நடிப்பில் கொடி கட்டி பறந்தவர் காஞ்சனா. ஒரு மில் அதிபருக்கு மனைவியானார். ஒரு காலகட்டத்தில் அவரது சொத்துகள் எல்லாம் பறிபோனது. அவரது சொந்தக்காரர்களே, காஞ்சனாவின் சொத்துகளை எல்லாம் கபளீகரம் செய்துவிட்டு ஓடி விட்டனர்.

கோவிலில் பணி…

இதுகுறித்து காஞ்சனா, கோர்ட்டில் வழக்குப் போட்டார். வழக்கிலும் ஜெயித்தார். வழக்கு தொடர்ந்த நேரத்தில் காஞ்சனா மிகவும் கஷ்டத்தில் இருந்தார். வறுமையில் இருந்தார். அப்போது அவர் கோவிலில் பணி செய்தார். சமூக சேவைகளை செய்து, கோவிலில் தன் பசியாற்றினார்.

இதையும் படியுங்கள்: இத்தா தண்டி உடம்புக்கு.. இத்துணூண்டு ட்ரெஸ்ஸா.. இணையத்தை கதற விடும் நடிகை எஸ்தர்..!

திருப்பதி கோவிலுக்கு…

அதன்பிறகு கோடிக்கணக்கான சொத்துகள் அவருக்கு திரும்ப வந்து சேர்ந்தது. மீண்டும் வந்த சொத்துகள் அனைத்தையும் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு எழுதி வைத்து விட்டார். பிறகு பெண் சாமியாராக வாழ்ந்தவர்தான் கலர் பட நாயகி கனவு நாயகி காஞ்சனா என்று அந்த வீடியோவில் கூறியிருக்கிறார் நடிகர் பயில்வான் ரங்கநாதன்.

சொந்தக்காரர்கள்தான்

கோடிக்கணக்கில் சொத்து இருந்தும் சாமியார் ஆன முன்னணி நடிகை காஞ்சனா, அதற்கு காரணம் அவரது சொத்துகளை அபகரித்த சொந்தக்காரர்கள்தான் என்ற உண்மையை சொல்லியிருக்கிறார் பயில்வான் ரங்கநாதன்.