கோடி ரூபாய் குடுத்தாலும் நான் இதை பண்ண மாட்டேன்.. ஆனா இவங்க.. விளாசும் கங்கனா ரனாவத்..!

கோடி ரூபாய் குடுத்தாலும் நான் இதை பண்ண மாட்டேன்.. ஆனா இவங்க.. விளாசும் கங்கனா ரனாவத்..

ஹிந்தி திரைப்பட நடிகையான கங்கனா ரனாவத் மிகச்சிறந்த மாடல் அழகியாக திகழ்ந்தவர். இவர் 2006-ஆம் ஆண்டு முதல் ஹிந்தி திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

இதையும் படிங்க: நடிகை சத்யராஜின் மகள் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ..! அடப்பாவிங்களா..!


இவர் கேங்ஸ்டர் படத்தில் நடித்ததற்காக சிறந்த ஃபிலிம் பேர் விருதை அறிமுக நடிகைக்காக பெற்று ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்துக் கொடுத்தவர்.

நடிகை கங்கனா ரனாவத்..

தமிழ் திரைப்படமான தாம் தூம், தலைவி,சந்திரமுகி 2 போன்ற படங்களில் நடித்த பாலிவுட் நடிகையான கங்கனா ரனாவத் சமீபத்தில் நடந்து முடிந்த அம்பானியின் திருமணத்திற்கான கொண்டாட்டங்களுக்கு சென்ற பாலிவுட் நடிகர் மற்றும் நடிகைகள் பற்றி சில கருத்துக்களை வெளியிட்டு ஒரு குட்டி சுனாமியை ஏற்படுத்தியிருக்கிறார்.

இந்தத் திருமண விழாவில் கலந்து கொண்ட பாலிவுட் பிரபலங்கள் பலரும் நடனமாடி அசத்தியதோடு இந்த திருமணத்தை வெகு சிறப்பான முறையில் கொண்டாடினார்கள். ஆனால் இந்த திருமணத்திற்கு கங்கனா செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அம்பானி வீட்டு கல்யாண பற்றிய விமர்சனம்..

அண்மையில் அம்பானி வீடு நடந்த கல்யாணம் பற்றி அமளி துமலியாக இணையங்களில் செய்திகள் வெளி வந்து பலரையும் ஆச்சரியத்தில் தள்ளியது.

இது குறித்து சமூக வலைத்தளத்தில் கங்கனா வெளியிட்டுள்ள பதிவானது தற்போது வைரலாக மாறிவிட்டது. இந்த பதிவில் பின்னணிப் பாடகி லதா மகேஷ்கர் எத்தனை கோடிகள் கொடுத்தாலும் திருமண விழாக்களில் பாடமாட்டேன் என்று கூறியது போல நானும் ஒரு கொள்கையோடு செயல்படுகிறேன் என்ற கருத்தை பதிவு செய்து இருக்கிறார்.

கோடி கொடுத்தாலும் நோ சொன்ன கங்கனா ரனாவத்..

எனவே தான் பல கோடிகளைப் பெற்றுக் கொண்டு அம்பானி வீட்டுக்கு கல்யாணத்துக்கு சென்ற பாலிவுட் நடிகர் மற்றும் நடிகைகளை பற்றி கழுவி ஊற்றி இருக்கும் இவர் பல திருமண விழாக்களில் நடனமாட எனக்கு அழைப்பு கிடைத்த போதும் அதையெல்லாம் மறுத்து விட்டேன்.


மேலும் விருது நிகழ்ச்சிகளில் கூட நான் நடனம் ஆடுவது இல்லை. நல்ல முறையில் பணத்தை உடைத்து சம்பாதிக்க வேண்டும் என்பதை இன்றைய தலைமுறை புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இதை சொல்கிறேன் என கூறி இருக்கிறார்.

இதனை அடுத்து இணையத்தில் வைரலாகி இருக்கும். இவரது இந்த பேச்சானது ரசிகர்களின் மத்தியில் அம்பானியின் வீட்டில் திருமணத்தில் கலந்து கொள்ளாது குறித்துக்கான பதிலா இது என்று கேட்டிருக்கிறார்கள்.

அத்தோடு சில பாலிவுட் நடிகர்கள் பணத்தைப் பெற்றுக் கொண்டு விருந்தினர் என்ற பெயரில் திருமணத்திற்கு சென்றிருக்கிறார்கள். இதெல்லாம் எவ்வளவு பெரிய அசிங்கம் தெரியுமா? என்று விளாசி தள்ளிய இவரது பேச்சை கேட்ட ரசிகர்கள் பலரும் இவருக்கு ஆதரவு தெரிவித்து வந்தாலும் உங்களுக்கு அழைப்பு வரவில்லை என்ற கடுப்பில் தான் இப்படி பேசுகிறீர்களா? என்று கலாய்க்கவும் செய்திருக்கிறார்கள்.


இதையும் படிங்க: காதலிச்சேன்… ஆனா, கல்யாணம் பண்ணிக்க முடியல.. இது தான் காரணம்.. நடிகை மும்தாஜ் ரகசிய பக்கங்கள்..!

இந்நிலையில் இவரது பேச்சு தான் தற்போது இணையங்களில் வைரலாக மாறி ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறிவிட்டது. இதனைத் தொடர்ந்து ரசிகர்கள் பலரும் கலவை ரீதியான விமர்சனங்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்கள்.