Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Tamil Cinema News

கெத்தாக வாழ்ந்த கண்ணதாசன் தன்னுடைய இறப்பு எப்படி இருக்க ஆசைப்பட்டார் என தெரியுமா..?

மூன்று மனைவி, 15 குழந்தைகள் என கெத்தாக வாழ்ந்த கண்ணதாசன் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியமே இல்லை.

ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் ஒரு மிகப்பெரிய ஆளுமையாக இருந்ததோடு மட்டுமல்லாமல் பல பாடல்களைத் தந்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று இடம் பிடித்த அற்புதக் கலைஞர்.


ஒரு காலத்தில் கடவுளை நம்பாமல் இருந்த இவர் இந்து மதம் பற்றி புத்தகங்களை எழுதி நாத்திகம் பேசி வரும் அனைவருக்கும் சவுக்கடி கொடுக்கும்படி வாழ்ந்து காட்டியவர்.

அப்படிப்பட்ட கவிஞர் கண்ணதாசன் தன்னுடைய இறப்பு எப்படி இருக்க வேண்டும் என்று எண்ணினார் என்பது பற்றி இந்த கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

கவிஞர் கண்ணதாசன்..

கண்ணதாசன் எழுதிய பாடல்கள் அத்தனையுமே கற்பனையால் உருவானது என்பதை விட அவர் அனுபவத்தால் எழுதிய வரிகள் என்று சொல்லலாம். அந்த அளவு காதல் ரசம் ஆக இருந்தாலும், சரி தத்துவமாக இருந்தாலும் சரி அவர் பாடலுக்கு ஈடு இணையாக எதையும் சொல்லி விட முடியாது.

--Advertisement--

இவர் தமிழில் நான்காயிரத்துக்கும் மேற்பட்ட கவிதைகள் 5000-க்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள் கட்டுரைகள் என எழுதிய மிகப் பெரிய ஜாம்பவான். தமிழ் அன்னை இவர் நாவில் தாண்டவம் ஆட கூடிய வகையில் இவரது தமிழ் புலமையை பலரும் பாராட்டி இருக்கிறார்கள்.


இவர் சண்டமாருதம், திருமகள், திரை மொழி, தென்றல், தென்றல் திரை, முல்லை போன்ற இதழ்களின் ஆசிரியராக இருந்தவர். தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்ததோடு மட்டுமல்லாமல் 1980-இல் சாகித்திய அகாடமி விருதை வென்றவர்.

கெத்தாக வாழ்ந்த கண்ணதாசன்..

தமிழ்நாட்டில் காரைக்குடியில் பிறந்து வளர்ந்த இவர் நாட்டுக்கோட்டை நகரத்தார் மரபில் வந்தவர். இவரை 7000 ரூபாய்க்கு தத்து கொடுத்ததை அடுத்து தத்துப் பிள்ளையாக வளர்ந்த இவர் எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர்.

இதனை அடுத்து பல புத்தகங்களில் கதைகளை எழுதி வந்த இவர் திரைப்படங்களில் பாடல்களை எழுத ஆரம்பித்ததை அடுத்து அரசியலிலும் ஈடுபட்டு இருக்கிறார்.


குறிப்பாக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்த இவர் சில கருத்து வேற்றுமை காரணமாக அந்தக் கட்சியை விட்டு வெளியேறினார்.

இறப்பு பற்றிய ஆசை..

இவர் தன் வீட்டில் இருந்த கருங்காலி கட்டிலில் தான் தன் உயிரை விட வேண்டும் என்று ஆசைப்பட்டார். அத்தோடு உயிரோடு இருந்தபோதே தனக்கான இரங்கல் பாவை எழுதி வைத்துக் கொண்ட முதற்கவிஞராகவும் விளங்குகிறார்.

திரைப்படங்களில் பாடல் ஆசிரியராக இருந்ததோடு மட்டுமல்லாமல் வசனம் எழுதிய திரைப்படங்களும், திரைக்கதை வசனம் எழுதிய திரைப்படங்களும், தயாரித்த திரைப்படங்களும் இன்று வரை இவர் பெயர் சொல்லக் கூடிய வகையில் உள்ளது.

இறுதியாக மூன்றாம் பிறை என்ற திரைப்படத்திற்கு கண்ணே கலைமானே என்ற பாடல் வரிகளை எழுதி இருந்தார். இன்று வரை இந்த பாடல் வரிகள் இளைஞர்களின் மத்தியில் ஃபேமஸான வரிகளாக திகழ்கிறது.


இந்த நிலையில் கருங்காலிக் கட்டிலில் தன் உயிர் பிரிய வேண்டும் என்று கவிஞர் கண்ணதாசன் விருப்பப்பட்ட விஷயமானது தற்போது இணையங்களில் வேகமாக பரவி வருவதோடு தன் இறப்பு குறித்து கவிஞர் கண்ணதாசருக்கு இப்படி ஒரு ஆசை இருந்ததா? என்ற விஷயத்தை பலருக்கும் பகிர்ந்து உள்ளது.

அடுத இந்த விஷயத்தை அறிந்து கொண்ட ரசிகர்கள் அனைவரும் கண்ணதாசனின் வித்தியாசமான ஆசையை நினைத்து ஆச்சரியம் அடைந்திருக்கிறார்கள்.

Continue Reading
 

More in Tamil Cinema News

Trending Now

To Top