இதனால் தான் இளமை ஊஞ்சல் படத்தில் நடிக்க சம்மதிச்சேன்.. வெக்கமே இல்லாமல் கூறிய கிரண்..!

இதனால் தான் இளமை ஊஞ்சல் படத்தில் நடிக்க சம்மதிச்சேன்.. வெக்கமே இல்லாமல் கூறிய கிரண்..!

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி படங்களில் நடித்த கிரண் ராத்தோடு தமிழில் ஜெமினி படத்தில் மானசா என்ற கதாபாத்திரத்தை செய்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

இதையும் படிங்க: “கூட பொறந்த தம்பியே ஒரு முறை என்னை..” எந்த பொண்ணுக்கும் இது நடக்ககூடாது.. ஓப்பனாக கூறிய ஷகீலா..!

இதனை அடுத்து தமிழில் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் அதிக அளவு வந்து சேர்ந்தது. அந்த வரிசையில் பல தமிழ் படங்களை நடித்து இவர் தனது ரசிகர் வட்டாரத்தை அதிகரித்துக் கொண்டார்.

நடிகை கிரண்..

நடிகை கிரண் நடிப்பில் வெளி வந்த வில்லன், அன்பே சிவம், திவான், பரசுராம், தென்னவன், திருமலை, நியூ போன்ற படங்கள் இவரது நடிப்புத் திறனை வெளிப்படுத்தியது.

--Advertisement--

ஜெமினி திரைப்படத்தில் ஓ போடு பாடலுக்கு இவர் ஆடிய ஆட்டத்தை பார்த்து தமிழகமே குலுங்கியது என்று கூறலாம். அந்த அளவு இளசுகளின் மனசை சுண்டி இழுத்த இவர் ஒரு மிகப்பெரிய நடிகையாக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

மேலும் 2004 ஆம் ஆண்டு வெளி வந்த சின்னா என்ற திரைப்படத்தில் சிவகாமி என்ற சிறப்பு தோற்றத்தை செய்தார். இதனை அடுத்து 2006 ஆண்டு திமிரு படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்த இவருக்கு பட வரத்துக்கள் குறைய ஆரம்பித்தது.

இதனை அடுத்து ஐட்டம் பாடல்களுக்கு நடனம் ஆடிய இவர் எப்படியும் சினிமாவில் நடித்து விட வேண்டும் என்பதற்காக பல்வேறு வகையான முயற்சிகளை செய்தார். எனினும் இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. 

இளமை ஊஞ்சல்..

இதனை அடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி வண்ண வண்ண புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திணற வைப்பார். அத்தோடு தனக்கு என்று ஒரு செயலியை உருவாக்கி அதன் மூலம் கல்லா கட்டி வரும் நடிகை கிரண் அண்மை பேட்டி ஒன்றில் சுவாரஸ்யமான தகவல்களை கூறியிருக்கிறார்.

அதுவும் இளமை ஊஞ்சல் படத்தின் நடிப்பதற்காக தனக்கு பெரிய சம்பளம் கொடுக்கப்பட்டது என்றும், வெறும் பணத்திற்காக மட்டும் தான் அந்த படத்தில் தான் நடிக்க ஒப்புக்கொண்டேன். அது மோசமான படம் என்று எனக்கு தெரியும்.

வெட்கம் இல்லாமல் பேசிய கிரண்..

அது மட்டும் அல்லாமல் நடிகை நமிதா உள்ளிட்ட சில முன்னணி நடிகைகள் அந்த படத்தில் நடிக்க சொல்லியிருந்தார்கள். ஆனால் அவர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்ததை அடுத்து எந்த தயக்கமும் இல்லாமல் நான் நடிக்க சம்மதம் தெரிவித்தேன்.

இதையும் படிங்க: இந்த உடம்பை வச்சிகிட்டு போடுற ட்ரெஸ்ஸா இது.. கவர்ச்சியில் நடிகைகளை ஓரம் கட்டும் அகிலா ஆனந்த்..!

இதற்கு காரணம் அந்த படத்தில் நடிப்பதால் மிகப் பெரிய சம்பள தொகை கிடைக்கும் என்பதால் மறுக்காமல் படத்தில் நடித்து கொடுத்தேன் என்று நடிகை கிரண் கூறியிருக்கிறார்.

மேலும் பணத்துக்காக தான் இந்த படத்தில் நடித்தேன் என்று வெட்கமில்லாமல் கூறிய கிரணின் பேச்சானது இணையதளங்களில் வைரலாக பரவி வருவதோடு இதை சொல்ல நான் ஏன் வெட்கப்பட வேண்டும் என்ற பதிவையும் செய்திருப்பதை அடுத்து கிரணின் நடவடிக்கைகள் பற்றி ரசிகர்கள் அனைவரும் பேசி வருகிறார்கள்.

இதனை அடுத்து பணம் பாதாளம் வரை பாயும் பணம் என்றால் பிணமும் வாயை பிளக்கும் என்ற பழமொழிகள் நடிகை கிரணுக்கு கட்டாயம் பொருந்தும் என்று ரசிகர்கள் அவர்களுக்குள் பட்டிமன்றம் போட்டு பேசி வருகிறார்கள்.