பட வாய்ப்பிற்காக அந்த தப்பை பண்ணேன்.. வெளிப்படையாக கூறிய மாளவிகா மேனன்..!

பட வாய்ப்பிற்காக அந்த தப்பை பண்ணேன்.. வெளிப்படையாக கூறிய மாளவிகா மேனன்..!

மலையாள மங்கையான மாளவிகா மேனன் ஆரம்ப காலங்களில் மலையாள படங்களில் முக்கிய படங்களில் நடித்து அசத்தியவர். இதனை அடுத்து தான் இவருக்கு தமிழில் நடிக்கக்கூடிய வாய்ப்பு வந்து சேர்ந்தது.

மாளவிகா மேனன்..

அந்த வகையில் 2011 ஆம் ஆண்டு என்டே கண்ணன் என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமான இவர் நித்ரா, ஹீரோ போன்ற மலையாள படங்களில் நடித்திருக்கிறார்.


தமிழைப் பொறுத்த வரை இவன் வேற மாதிரி என்ற திரைப்படத்தில் நடித்த இவரது நடிப்புக்கு பெருமளவு வரவேற்பை ரசிகர்கள் தந்ததை அடுத்து விழா, பிரம்மன், நிஜமா நிழலா போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.

இதனை அடுத்து அண்மையில் இவர் பட வாய்ப்பு பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு தனது அனுபவத்தை மிகச் சிறப்பான முறையில் பகிர்ந்து இருக்கிறார்.

பட வாய்ப்புக்காக..

திரைப்படங்களில் சின்ன, சின்ன கேரக்டர் ரோல்களை செய்த இவர் தமிழில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளி வந்த இவன் வேறு மாதிரி படத்தில் ஹீரோயினி தங்கையாக நடித்திருக்கிறார்.


அடுத்து சமீபத்து பேட்டியில் கலந்து கொண்டு இவர் பேசுகையில் 2011 ஆம் ஆண்டு இவர் சினிமாவில் அறிமுகமாகிவிட்ட விஷயத்தை சொல்லி இருந்ததோடு, மேலும் சினிமா வாய்ப்புகள் இவருக்கு பெரிதாக கிடைக்கவில்லை என்பதையும் கூறினார்.

இந்நிலையில் தனக்கு சினிமாவில் தொடர்ந்து நல்ல வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்று நினைத்த இவர் தான் செய்த தவறுகள் காரணத்தால் தான் பட வாய்ப்புகள் பறி போய் உள்ளது என்பதை கூறி அதை அடுத்து இது என்ன இப்படி சொல்றாங்க என்று பலரும் யோசித்தார்கள்.


இவர் கதை கேட்கும் போது தன்னுடைய கதாபாத்திரத்திற்கு முக்கியமில்லாதது போல ஒரு விதமான பிரம்மை இவருக்கு ஏற்படுமாம். இதனை அடுத்து கதை குறித்தும் திரைக்கதை குறித்தும் தனக்கு சரியான புரிதல் இல்லாததால் பல படங்களை தவற விட்டு விட்டாராம்.

அந்த தவற விட்ட படங்கள் திரையரங்குகளுக்கு வந்து நல்ல முறையில் ஓடும் போது தான் தான் அந்த படத்தை தவற விட்டோமே என்ற எண்ணமும் ஏக்கமும் ஏற்படுமாம்.

இதனை அடுத்து நாட்கள் செல்ல செல்ல கதை திரைக்கதை இவற்றை புரிந்து கொள்ளக்கூடிய அனுபவமும் பக்குவமும் அவருக்கு கிடைத்துள்ளது. அதனால் ஆரம்பத்தில் செய்த தவறை தற்போது திருத்துக் கொண்டிருப்பதாக கூறியதோடு மட்டுமல்லாமல் இதை சொல்வதில் எந்த விதமான பயமும் தயக்கமும் இல்லை என்ற கருத்தை கூறியிருக்கிறார்.


அடுத்து இவரது பேச்சில் உண்மை இருப்பதாக ரசிகர்கள் பலரும் பேசி வருவதோடு மட்டுமல்லாமல் ஆரம்பத்தில் எல்லோருக்கும் இது போன்ற ஒரு சுணக்கமான நிலை இருக்கும். அதனால் நாள் சொல்ல செல்ல அனுபவத்தினால் சரியாகிவிடும் என்ற கருத்தை கூறியிருக்கிறார்கள்.

இந்த பேச்சு தான் தற்போது இணையத்தில் வைரலாக மாறிவிட்டது. எந்த துறையில் இருந்தாலும் அந்த துறையில் ஜொலிப்பவர்களுக்கு இது போன்ற சங்கடங்கள் ஆரம்பத்தில் ஏற்படுவது இயற்கை தான் ஆனால் அதை அவர்கள் வெளிப்படையாக சொல்ல விரும்ப மாட்டார்கள்.

அந்த வகையில் மாளவிகா மேனன் பட வாய்ப்புக்காக தான் செய்த தவறை பற்றி வெளிப்படையாக பேசி இருப்பது பலர் மத்தியிலும் வரவேற்பை பெற்றுள்ளது.

   

--Advertisement--