“நடுரோட்ல நிக்க வச்சி இதை பண்ணனும்…” – மீண்டும் சர்ச்சையை கிளப்பிய மன்சூர் அலிகான்..!

நடிகர் மன்சூர் அலிகான் லியோ திரைப்படத்தில் நடித்த பொழுது நடிகை திரிஷாவுடன் கற்பழிப்பு காட்சி இருக்கும் என்று எதிர்பார்த்ததாகவும் ஆனால் அப்படி எதுவும் இல்லை என்று பேசியது மிகப்பெரிய கண்டனத்திற்கு உள்ளானது.

பல திரைப்பிரபலங்கள் இதற்கு கண்டனம் தெரிவித்திருந்தனர். மேலும் நடிகர்கள் மன்சூர் அலிகான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதனை அடுத்து மன்சூர் அலிகான் திரிஷாவிடம் மன்னிப்பு கேட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

இந்நிலையில், மீண்டும் தற்போது சர்ச்சையை கிளப்பி விட்டு இருக்கிறார். சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் கூறியிருப்பதாவது. தவறு செய்யாத நான் எதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும்..? நான் பேசிய வீடியோவை முழுமையாக மீண்டும் பாருங்கள்.

அதில் நான் பேசி பேசியது தவறு என்றால் நீங்கள் என்னை நடுரோட்டில் நிற்க வைத்து கல்லால் அடிக்க வேண்டும்.

நீங்கள் அதை செய்வீர்களா…? நான் பேசுவது தவறு என்று கூற முடியுமா..? என சர்ச்சை கிளப்பி இருக்கிறார்.

காவல் நிலையத்துக்கு சென்று சில கேள்விகளுக்கு பதில் கொடுத்தேன். வீட்டிற்கு வந்ததும் அவர்கள் கேட்ட கேள்விகளை நினைத்து எனக்கு இரவு முழுவதும் தூக்கம் வரவில்லை.

நான் திரிஷாவிடம் என்னை மரணித்து விடுங்கள் என்றுதான் சொன்னேன். ஆனால், அது மன்னித்து விடு என்றாகி விட்டது என பேசியுள்ளார் மன்சூர்.

   

--Advertisement--