“தன் கருமுட்டையை வெளியில் எடுத்து..” நடிகை மிருணாள் தாகூர் செய்யும் வேலையை பாருங்க..!

இப்போதெல்லாம் சினிமா நடிகைகள் என்ன மாதிரியான முடிவெடுப்பார்கள் என்பதே சற்று அதிர்ச்சியை தரக்கூடியதாக இருக்கிறது. ஏனெனில் சில நடிகைகள் திருமணம் செய்து கொள்வதில்லை, காலம் முழுவதும் முரட்டு சிங்கிளாகவே வாழ்ந்து விடுகின்றனர்.

சில நடிகைகள் 45 வயதில், திருமணம் செய்து கொள்கின்றனர். சில நடிகைகள் திருமணமே செய்யாமல், லிவிங் டு ரிலேஷன்ஷிப் என்ற பெயரில், ஆண் நண்பர்களுடன் வாழ்க்கை நடத்துகின்றனர்.

வாடகைத்தாய் குழந்தைகள்

இன்னும் சில நடிகைகள் வாடகை தாய் மூலம் குழந்தைகளை பெற்றுக் கொள்கின்றனர்.

இப்போது அடுத்த கட்டமாக, தங்கள் கருமுட்டைகளை இளமையாக இருக்கும் போது ப்ரீசரில் எடுத்து வைத்துக் கொண்டு, பல ஆண்டுகள் ஆன பிறகு 45 வயதில், 50 வயதில் கூட குழந்தைகள் பெற்றுக் கொள்ளும் ஒரு மனநிலைக்கு அவர்கள் மாறியுள்ளனர்.

மிருணாள் தாகூர்

நடிகை மிருணாள் தாகூருக்கு 31 வயது ஆகிறது. தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். துவக்கத்தில் மராத்தி மொழி படங்களில் நடித்து சினிமாவில் அறிமுகமானவர் மிருணாள் தாகூர்.

--Advertisement--

லவ் சோனியா படத்தில்..

கடந்த 2010 ஆம் ஆண்டு லவ் சோனியா என்ற இந்தி படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். அடுத்ததாக கிருத்திக் ரோஷன் ஹீரோவாக நடித்த சூப்பர் 30 என்ற படத்தில் மிருணாள் தாகூர் நடித்து பிரபலமானார்.

தெலுங்கில் துல்கர் சல்மான், ராஷ்மிகா மந்தனா நடித்த சீதாராமம் படம் மிகப்பெரிய ஒரு வரவேற்பை பெற்றுத் தந்த படமாகவும், ரசிகர்கள் மத்தியில் நல்ல ஒரு அடையாளத்தை தந்த படமாகவும் மிருணாள் தாகூருக்கு அமைந்தது.

குறிப்பாக சீதாராமம் படத்தில் நூர்ஜகான் என்ற கதாபாத்திரத்தில் பெரிய வசதியான வீட்டு பெண்ணாக, ஒரு அற்புதமான நடிப்பை வழங்கியிருந்தார் நடிகை மிருணாள் தாகூர்.

சீதாராமம்

சீதாராமம் படத்தின் வெற்றியை தொடர்ந்து, தெலுங்கு திரை உலகில் மிருணாள் தாகூர் முன்னணி நடிகையாக மாறியிருக்கிறார். கடந்த ஆண்டு நடிப்பில் வெளியான ஹாய் நானா என்ற படத்தில் நடிகர் நானியுடன் அவர் நடித்திருந்தார்.

அதைத் தொடர்ந்து இந்த ஆண்டில் விஜய் தேவரகொண்ட ரெட்டியுடன் ஃபேமிலி ஸ்டார் என்ற படத்தில் மிருணாள் தாகூர் நடித்தார். ஆனால் அந்த படம் தோல்வியை சந்தித்தது.

தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் தொடர்ந்து நடித்து வரும் மிருணாள் தாகூர் அடுத்ததாக நடித்து வரும் இந்தி படம் பூஜா மேரி ஜான் என்ற ஒரு தகவல் உள்ளது ஆனால் இது அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிவிக்கப்படவில்லை.

கருமுட்டைகளை பாதுகாத்து…

இந்நிலையில் சினிமா பிரபலங்கள் மற்றும் இளம்பெண்கள் தங்கள் கருமுட்டைகளை உரிய வயதில் பாதுகாத்து 40 வயதுக்கு மேல் திருமணம் செய்யும்போது குழந்தை பெற்றுக் கொள்ளும் முடிவை தற்போது எடுத்து வருகின்றனர்.

பல நடிகைகள் அப்படி செய்யாத காரணத்தால், வயதான நிலையில் திருமணம் செய்யும்போது, அவர்களுக்கு குழந்தைப்பேறு இல்லாத நிலை உருவாகிறது. மேலும் வாடகை தாய் மூலமாக குழந்தை பெற்றுக் கொள்ளும் நிலையும் ஏற்படுகிறது.

ராம்சரண் மனைவி உபாசனா

அதனால் தெலுங்கு பட நடிகர் ராம்சரணனின் மனைவி உபாசனா, இதே போல் தனது கருமுட்டைகளை பிரீஸ் செய்து வைத்திருந்தார். திருமணம் ஆகி 10 ஆண்டுகளுக்கு பிறகு, தற்போது பாதுகாத்து வைத்திருந்த அந்த கருமுட்டைகளை பயன்படுத்தி, பெண் குழந்தையை பெற்றுக் கொண்டார்.

அதே முடிவு

அதேபோன்ற முடிவை எடுக்க, 31 வயதாகும் மிருணாள் தாகூரும் தற்போது முடிவு செய்திருப்பதாக பேட்டி ஒன்றில் வெளிப்படையாக பேசியுள்ளார்

இப்படி தனது கருமுட்டையை வெளியில் எடுத்து வைக்கும் முடிவுக்கு நடிகை மிருணாள் தாகூர் வந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் பலத்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.