Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Tamil Cinema News

கல்யாணம் பண்ணி ஒரு மாசம் அதை பண்ணல.. காரணம் இது தான்.. ரகசியம் உடைத்த நளினி..!

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் பிரபல நடிகையாக பார்க்கப்பட்டு வந்தவர் தான் நடிகை நளினி. இவர் 80க்களில் பிரபலமான நடிகையாக தமிழ் சினிமாவில் வளம் வந்து கொண்டிருந்தார்.

இவர் தமிழை தவிர்த்து மலையாளம் மொழி திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். குறிப்பாக மலையாளத்தில் மோகன்லால் .மம்முட்டி போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தவர் தமிழில் விஜயகாந்த் சத்யராஜ் மோகன் உள்ளிட்ட பல ஹீரோக்களுடன் நடித்திருக்கிறார்.

நடிகை நளினியின் திரைவாழ்க்கை:

நளினி தொடர் ஹிட் படங்களில் நடித்து தனக்கான மார்க்கெட்டை தக்க வைத்துக் கொண்டிருந்தபோதே பிரபல நடிகரான ராமராஜனை காதலித்து ரகசியமாக வீட்டை விட்டு ஓடி சென்று திருமணம் செய்து கொண்டார்.

நளினியின் இந்த காதலுக்கு பெற்றோர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததால் பெற்றோர்களை எதிர்த்து ராமராஜனை கரம் பிடித்தார். நளினி பல்வேறு போராட்டங்களை அப்போது சந்தித்துதான் ராமராஜனை திருமணம் செய்து கொண்டதாக பல பேட்டிகளில் கூறியிருக்கிறார்.

--Advertisement--

இவ்வளவு கடுமையாக காதலித்து காதல் திருமணம் செய்து கொண்ட இவர்கள் வெகு சில வருடங்கள் வாழ்ந்த பிறகு கடந்த 2000ம் ஆண்டு ஒருவருக்கு ஒருவர் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்கள்.

காதல் கல்யாணம், கடைசியில் விவாகரத்து:

விவாகரத்து பெற்றாலும் ஒருவரை ஒருவர் இழிவாக பேசிக்கொள்ளாமல் தரம் குறைவாக பேசிக்கொள்ளாமல் மிகுந்த மரியாதையோடு அதே காதலோடு இருந்து வருவது தான் பலருக்கும் மிகப்பெரிய ஆச்சர்யத்தை கொடுத்திருக்கிறது.

குறிப்பாக இவ்வளவு காதலோடு இருந்த இவர்கள் ஏன் விவாகரத்து செய்தார்கள் என்ற கேள்விதான் பலர் மனதிலும் தோன்றுகிறது. அந்த அளவுக்கு இவர்கள் ஒருவர் மீது ஒருவர் மிகுந்த மரியாதை வைத்து பேட்டிகளில் பேசி வருவது வழக்கமாக பார்த்து வருகிறோம்.

நடிகை நளினி பள்ளி படிப்பை படிக்கும் போது சினிமாவில் நடிக்க வந்து விட்டதால் தொடர்ந்து அவருக்கு படிப்பை தொடர முடியவில்லை.

இதனால் திருமணம் செய்து கொண்ட பிறகு அவருக்கு திரைப்படங்களிலும் நடிக்கும் வாய்ப்புகள் பரிபோனது. அந்த நேரத்தில் குழந்தை குட்டி என செட்டில் ஆகினார்.

இவருக்கு அருணா மற்றும் அருண் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். சமீபத்தில் கூட நளினியின் மகள் அருணா பேட்டி ஒன்றில் தனது தாய் தந்தை விவாகரத்து குறித்தும் அவர்கள் இன்றளவும் வைத்திருக்கும் காதல் குறித்தும் அவர்கள் ஒருவருக்கொருவர் வைத்திருக்கும் மரியாதை குறித்தும் பல விஷயங்களை பகிர்ந்து பேசினார்.

சேர்ந்து வாழ மறுக்கும் நளினி – ராமராஜன்:

மகன் மகள் இருவருக்குமே திருமணம் நடந்து விட்டது. மகளின் திருமணத்தில் ராமராஜன் கலந்துகொண்டு அவர்களை சிறந்த தந்தையாக திருமணம் செய்து வைத்து மணமக்களை வாழ்த்திய புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகியது.

இந்த அளவுக்கு ஒற்றுமையான மனதோடு இருந்து வருகிறார்கள் நளினி மற்றும் ராமராஜன் ஜோடி. இப்படி இருக்கும் இவர்கள் இதுவரை எந்த ஒரு இடத்திலும் தங்கள் ஏன் விவாகரத்து செய்து கொண்டோம் என்பதற்கான காரணத்தை தெரிவிக்கவே இல்லை .

அவ்வளவு ஏன் பெற்ற மகள் மகன்களுக்கு கூட அவர்கள் ஏன் விவாகரத்து செய்தார்கள் என்று காரணம் தெரியாது என அவர்கள் பேட்டியில் கூறி இருக்கிறார்கள்.

ஏனென்றால் அது அவர்களின் சுதந்திரம் அவர்களை ஏன் எதற்காக என்று கேட்டு தொந்தரவு செய்து மன உளைச்சலுக்கு ஆளாக்க நாங்கள் விரும்பவில்லை என மகள் அருணா பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.

இதில் நடிகை நளினி சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது வாழ்க்கையில் நடந்த ஒரு சுவாரசியமான விஷயத்தை கூறி ரகசியத்தை உடைத்திருக்கிறார்.

கண்களை மூடி தான் அதை செய்தார்:

அவர் கூறியதாவது, எனக்கும் ராமராஜனுக்கும் கல்யாணம் திருட்டுத்தனமாக தான் நடந்தது எங்கு திருமணம் நடந்தது கூட எனக்கு தெரியாது ஏனென்றால் என்னுடைய முகத்தை மூடித்தான் அழைத்துச் சென்றார்கள்.

திரும்ப அழைத்து வரும்போது முகத்தை மூடித்தான் அழைத்து வந்தார்கள். கல்யாணம் முடிந்து ஒரு மாதம் வரை நாங்கள் சென்னைக்கு வரவில்லை.

ஏனென்றால் எங்களுக்குள் இருந்த பயம்தான் காரணம். எங்களுக்கு ஏதேனும் நடந்துவிடும் என்ற பயம் இருந்து கொண்டே இருந்தது.

எங்களுடைய திருமணத்தில் எங்கள் வீட்டில் மிகப் பெரிய எதிர்ப்பு இருந்தது அதெல்லாம் தாண்டி தான் ராமராஜன் அவர்களை நான் திருமணம் செய்து கொண்டேன் என பேசி இருக்கிறார் நடிகை நளினி.

Continue Reading
 

More in Tamil Cinema News

Trending Now

To Top