எனக்கு சக்களத்தியா வர பாக்குறியாடி.. நயன்தாராவை கிழித்து தொங்கவிட்ட பிரபல நடிகரின் மனைவி..!

நடிகை நயன்தாரா தற்பொழுது இயக்குனர் விக்னேஷ்-ஐ திருமணம் செய்து கொண்டு வாடகை தாய் மூலம் இரண்டு குழந்தைகளுக்கு தாயுமாகி இருக்கிறார். இதற்கு முன்பு நடிகர்கள் சிம்பு மற்றும் நடிகர் பிரபுதேவா ஆகிய இதுவரையும் அடுத்தடுத்து காதலித்து பிரிந்தவர் நடிகை நயன்தாரா என்பது ஊர் அறிந்த விஷயம்..

ஆரம்பத்தில் நடிகர் சிம்புவின் காதல் வலையில் விழுந்த நடிகை நயன்தாரா தன்னை முழுதாக நடிகர் சிம்புவுடன் ஒப்படைத்தார். ஆனால் நடிகர் சிம்பு வல்லவன் திரைப்படத்தில் தான் கண்ட இன்பம் இந்த வையமும் பெற வேண்டும் என்று புகுந்து விளையாடி இருந்தார்.

ஆனாலும் கூட சிம்புவை காதலித்து வந்தார் நடிகை நயன்தாரா நாட்கள் செல்ல செல்ல இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சிம்புவை பிரிந்தார். கிட்டத்தட்ட நயன்தாராவும் சிம்புவும் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்றெல்லாம் கூட தகவல்கள் வெளியானது.

உச்சகட்டமாக நடிகர் சிலம்பரசனின் தந்தை டி ராஜேந்தர் நயன்தாரா எனக்கு மருமகளாக வந்தால் நான் பாக்கியம் செய்தவன் நான் அவர்களுடைய காதலுக்கு தடையாக இருக்க மாட்டேன் என்று கூறியிருந்தார்.

அதன் பிறகு நடிகை நயன்தாரா காதலித்த நடிகர் பிரபுதேவா இந்த காதல் பொதுவெளியில் மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்தது. நடிகர் பிரபுதேவாவின் பெயரை கையில் டாட்டுவாக போட்டுக் கொள்ளும் அளவுக்கு வெறித்தனமாக காதலித்தார் நடிகை நயன்தாரா.

ஒரு பெரிய நடிகையாக இருப்பவர் ஏற்கனவே திருமணம் ஆகி இரண்டு குழந்தைகளுடன் வசித்துக் கொண்டிருக்கும் குருவிக்கூடு ஒன்றை காதல் என்ற பெயரில் கலைப்பது எவ்வளவு பெரிய கேவலம் என்று நடிகை நயன்தாராவை வளரும் விமர்சனம் செய்தனர்.

ஆனால், இதையெல்லாம் நயன்தாரா கண்டு கொள்ளவே இல்லை. இந்த நேரத்தில் நடிகை நயன்தாராவின் பெயர் ஏகத்துக்கும் டேமேஜ் ஆனது. நீங்கல் காதலிக்க வேறு ஆளே கிடைக்கவில்லையா..? ஒரு குடும்பத்தை கெடுத்து தான் உங்கள் காதலை வளர்த்துக் கொள்ள வேண்டுமா..? என்றெல்லாம் நயன்தாராவை விட்டு விளாசினார்கள் ரசிகர்கள்.

உச்சகட்டமாக நடிகர் பிரபுதேவாவின் மனைவி மீடியாக்களில் பேட்டி கொடுத்து நயன்தாராவின் பெயரை ஏகத்துக்கும் டேமேஜ் ஆக்கினார். ஆனால், நடிகை நயன்தாரா அதற்கெல்லாம் அசரவே இல்லை.

ஒரு கட்டத்தில் நடிகர் பிரபுதேவாவிற்காக மதம் மாறினார் நடிகை நயன்தாரா. மேலும் சினிமாவில் இருந்து ஓய்வு பெற போவதாக எல்லாம் அறிவித்தார். இடைப்பட்ட காலத்தில் நடிகர் பிரபுதேவா நயன்தாராவிடம் இருந்து கோடிக்கணக்கான பணத்தை பெற்று பல்வேறு சொத்துகளில் தன்னுடைய பெயரில் முதலீடு செய்திருக்கிறார் என்றெல்லாம் தகவல் வெளியாகின. ஆனால் அது எந்த அளவுக்கு உண்மை என தெரியவில்லை.

இப்படி நயன்தாராவும் பிரபுதேவா நெருக்கமாக இருந்தனர். திருமணம் செய்து கொள்வதற்காக தன்னுடைய மனைவியை பிரிவதற்காக விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடினார் பிரபுதேவா.

இப்போதுதான் இந்த விவகாரம் சூடு பிடித்தது. உச்சகட்ட கடுப்பில் ஆழ்ந்த பிரபுதேவாவின் மனைவி நயன்தாரா வசித்துக் கொண்டிருந்த அப்பார்ட்மென்ட்க்கு சென்று கத்தி கூச்சல் போட்டு கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி நயன்தாராவை சாடி இருக்கிறார்.

அப்போது பிரபுதேவா உடைய மனைவியின் உறவினர்களும் உடன் இருந்திருக்கின்றனர். இரண்டு குழந்தைகளின் எதிர்காலம் என்ன ஆவது..? என்னுடைய வாழ்க்கை என்ன ஆவது..? என்னுடைய வாழ்க்கையை சிதைத்து விட்டு தான் உனக்கு ஒரு வாழ்க்கை வேண்டுமா.? எனக்கு சக்களத்தியாகும் வாழ்க்கை தான் உடைய திருமண வாழ்க்கையா..? என்று வாய்க்கு வந்தபடி நயன்தாராவை வருத்தெடுத்து இருக்கிறார்.

இதனால் மனம் நொந்து போன நடிகை நயன்தாரா பிரபுதேவாவை பிரிந்து விடலாம் என்ற முடிவெடுத்து அதற்குண்டான வேலைகள் இருந்திருக்கிறார். அதேபோல பிரபுதேவாவை புரிந்து விட்டார். கையில் பிரபு என டாட்டு போட்டிருந்த அவர் அதனை பாசிட்டிவிட்டி என மாற்றி டாட்டு போட்டுக் கொண்டார்.

அதன் பிறகு நானும் ரவுடிதான் திரைப்படத்தில் நடிக்கும் பொழுதே விக்னேஷ் உடன் காதல் வயப்பட்டு தற்போது வாடகை தாயின் மூலம் இரண்டு குழந்தைகளுக்கு தாயாகி இருக்கிறார். நயன்தாராவின் திருமணத்தை தமிழ்நாடே கொண்டாடிக் கொண்டிருந்தது.

ஆனால் அவருடைய திருமணத்தை பார்த்து வயிறு எறிந்த ஒரு குடும்பமும் இருந்தது. அதுதான் நடிகர் பிரபுதேவாவின் குடும்பம். ஆனால், நடிகை நயன்தாரா தான் தற்போது லேடி சூப்பர் ஸ்டார் என்று தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்டு கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது என பிரபல நடிகர் பயில்வான் ரங்கநாதன் தன்னுடைய வீடியோ ஒன்றை கடுமையான விமர்சனங்களை முன் வைத்திருக்கிறார்.

   

--Advertisement--