என் புருஷன் கிட்ட நான் இதை சொல்லிட்டேன்.. நித்யா ராம் ஓப்பன் டாக்..!

என் புருஷன் கிட்ட நான் இதை சொல்லிட்டேன்.. நித்யா ராம் ஓப்பன் டாக்..!

சீரியல் நடிகை நித்யா ராம் பல சீரியல்களில் நடித்து, ரசிகர்களின் மனம் கவர்ந்தவர். தமிழில் நந்தினி என்ற தொடர் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். இவர் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பிற மொழிகளிலும் பல சீரியல்களில் நடித்திருக்கிறார்.

சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்துக்கொண்ட நித்யா ராம், ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ளார். அங்கு ஓராண்டு மட்டுமே இருக்க முடிவு செய்த நிலையில், அங்கு கோவித் காரணமாக 4 ஆண்டுகளுக்கு மேல் இருக்க நேரிட்டது என நித்யா ராம் கூறியுள்ளார்.

அதுபற்றி ஒரு நேர்காணலில் நடிகை நித்யா ராம் கூறியதாவது. ஆஸ்திரேலியாவில் நான் இருந்த இந்த 4 ஆண்டுகளும் மிகவும் சந்தோஷமான அனுபவமாக இருந்தது. ஆஸ்திரேலியா மிக அழகான நாடு. புதுசா கல்யாணம் ஆன அனுபவம், அந்த அனுபவம் தனியாக இருந்தது.

திருமண அனுபவம் வேறு மாதிரியானது. அது திரும்பவும் வராது. கோவித் ஆரம்பித்துவிட்டதால், ஆஸ்திரேலியாவை விட்டு தமிழ்நாட்டுக்குள் வர முடியவில்லை.

ஒரு வருஷம் என்ற திட்டத்தில்தான் அங்குபோனேன். ஒரு வெகேஷனலாக தான் நினைத்தேன். புது இடங்களில் நிறைய கத்துக்கலாம் என்று நினைத்தேன். ஆனால் இங்கு வரவில்லை. அங்கு 4 ஆண்டுகள் இருக்க வேண்டியதா போச்சு.

ஆனால் என் நடிப்பை நான் ரொம்ப மிஸ் பண்ணினேன். தினமும் அதுக்காக பீல் பண்ணினேன். என் கணவர் கிட்ட ஓப்பனா சொல்லிட்டேன். நான் மறுபடியும் போன உடனே நடிக்க ஆரம்பிச்சுடுவேன். எனக்கு ரொம்ப போரா இருக்கு என்றேன்.

அவர் எனக்கு ரொம்ப ஆதரவா, ஒத்துழைப்பு தருகிறார். உண்மையில் ரொம்ப நல்ல விதமாக, என் வாழ்க்கைக்கு உதவுகிறார் என்று கூறியிருக்கிறார் நித்யா ராம்.