படுக்கைக்கு கூப்டா.. அதை குடுத்து ஓகே சொல்வேன்.. ஆனால்.. சீரியல் நடிகை பாப்ரி கோஷ் பகீர்..!

படுக்கைக்கு கூப்டா.. அதை குடுத்து ஓகே சொல்வேன்.. ஆனால்.. சீரியல் நடிகை பாப்ரி கோஷ் பகீர்..!

திரையுலகில் வாய்ப்புகளை பெற வேண்டும் என்பதற்காக அட்ஜஸ்ட்மென்ட்கள் அதிகரித்து உள்ளது. இந்த அட்ஜஸ்மெண்டுகள் ஆரம்ப காலத்தில் இருந்து இன்று வரை தொடர் கதையாக தான் உள்ளது என கூறலாம்.

அந்த வகையில் திரைப்படங்களில் நடிக்கும் நடிகைகள் மட்டுமல்லாமல், சின்னத்திரை நடிகைகளும் இதற்கு விதிவிலக்கு அல்ல என்று சொல்லக்கூடிய வகையில் தற்போது சின்னத்திரையில் கொடி கட்டி பறக்கும் நடிகையான பாப்ரி கோஷ் பகீர் தகவலை கூறுகிறார்.

பாப்ரி கோஷ் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, பெங்காலி போன்ற மொழிகளில் நடித்து தனக்கு என்று ஒரு ரசிகர் படையை கொண்டு இருப்பவர். தமிழில் இவர் நாயகி, பாண்டவர் இல்லம், பூவே உனக்காக, சித்தி 2, வானத்தைப்போல உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்தவர்.

சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் தொகுப்பாளர் பாப்ரி கோஷிடம் சின்னத்திரை மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் நடக்கும் அட்ஜஸ்ட்மென்ட்கள் குறித்து பல்வேறு விதமான கேள்விகளை கேட்டிருந்தார்.

அந்தக் கேள்விக்கு பதில் அளித்த அவர் அட்ஜஸ்ட்மென்ட் பண்ணி தான் பட வாய்ப்பு கிடைக்கும் என்று சொன்னால் அவரிடம் நாம் ஏதும் மறுத்து பேசக்கூடாது என்று கூறியதை கேட்டு அனைவரும் அதிர்ச்சியானார்கள்.

--Advertisement--

மேலும் தன்னிடம் பட வாய்ப்புக்காக யாராவது படுக்கைக்கு அழைத்தால் உடனே ஓகே என்று சொல்லி விடுவேன். பின்பு என்ன செய்வேன் தெரியுமா? என்ற பீடிகையை போட்டார். அட.. அப்படி என்ன தான் செய்வார் என்று யோசித்து கொண்டு இருந்த வேளையில் அவர் சொன்ன பதில் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

அந்த பதிலில் அவர் யார் என்னை படுக்கைக்கு அழைத்தார்களோ? அவர்களுடைய வீட்டுக்கு முதலில் சென்று அவருடைய மனைவி, குழந்தைகள், பெற்றோர் முன்னால் அவருக்கு முத்தம் கொடுத்து எனக்கு பட வாய்ப்பு கொடுத்ததற்காக மிக்க நன்றி என கூறுவேன்.

பிறகு இந்த வாய்ப்பு எப்படி கிடைத்தது தெரியுமா? நான் படுக்கைக்கு வர சம்மதம் தெரிவித்ததை அடுத்த தான் கிடைத்தது என்று அனைவர் முன்பும் அதற்கு ஓகே சொல்வேன் என்ற கருத்தைக் கேட்டு அனைவருக்கும் பகீர் என்று ஆகிவிட்டது.

இவரது இந்த பதிலை சற்றும் எதிர்பாராத அனைவரும் இவரது புத்தி சாதுரியத்தை வியந்து பாராட்டு இருப்பதோடு, இப்படி போல்டான பெண்கள் இருக்கும் போது இது போன்ற அட்ஜஸ்ட்மெண்ட்களை எதிர்த்து போராடி திரைத்துறையில் அட்ஜஸ்ட்மென்ட் இல்லாமல் செய்ய முடியும்.

பாப்ரி கோஷ் பேசிய இந்த பகீர் பேச்சு தான் தற்போது இணையத்தில் வைரலாகிய பேச்சாக மாறிவிட்டது.