இந்த பிரபல நடிகர் 2 முறை என்னை அழைத்தார்.. தயங்கி தயங்கி ஓப்பனாக கூறிய பெப்சி உமா..!

இந்த பிரபல நடிகர் 2 முறை என்னை அழைத்தார்.. தயங்கி தயங்கி ஓப்பனாக கூறிய பெப்சி உமா..!

பொதுவாழ்க்கையில் குறிப்பாக ஊடகத்துறையில் சினிமாவில் இருப்பவர்கள் மக்கள் மனங்களில் இடம்பிடித்து விட்டால், எப்போதும் அவரை பற்றி பேச்சு வந்தாலும், அவரது பெயரை சொன்னாலும், அடடா அவரா, எனக்கு அவரை ரொம்ப பிடிக்குமே என்று சிலர் கூறியபடி அவர்களை பற்றி சுவாரசியமாக பேசுவது உண்டு. அப்படிப்பட்ட பிரபலங்களில் முக்கியமானவராக, மக்கள் மனம் கவர்ந்தவர் பெப்ஸி உமா என்கிற உமா மகேஸ்வரி

பெப்ஸி உமா

கடந்த 1990களில் டிவி நிகழ்ச்சிகளில் மிக பிரபலமானது பெப்ஸி உங்கள் சாய்ஸ். இதில் வரும் பெப்ஸி உமாவை பார்ப்பதற்கு என்றே டிவி முன் திரண்ட கூட்டம் அதிகம். அதுவும் அவரது தேன்மதுர குரலில் கொஞ்சி பேசுகிற அழகை பலரும் ரசித்து ரசித்து கேட்பர்.

வாரக்கணக்கில், மாதக்கணக்கில் ஏன் ஆண்டுக்கணக்கில் கூட அவரிடம் அந்த நிகழ்ச்சியில் பேச விரும்பி மெனக்கெட்டவர்கள் அதிகம். அந்த நிகழ்ச்சி மட்டுமின்றி திரை நட்சத்திரங்களை நேர்காணல் செய்த வகையிலும் பெப்ஸி உமா ரசிகர்களின் மனம் கவர்ந்த ஒருவராக இருந்தார்.

அழகான தமிழ் உச்சரிப்பு

பெப்ஸி உமாவின் அழகான தமிழ் உச்சரிப்பும், பேசுகிற இனிமையான தொனியும், வார்த்தைகளை அவர் தேர்ந்தெடுத்த பேசுகிற விதமும் விரைவில் மனதை கொள்ளை கொண்டு விடும். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் 15 ஆண்டுகளுக்கு மேலாக ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு குறையாத ஒரு பிரபலமாக இருந்தவர்தான் பெப்ஸி உமா.

அவரது அழகான தோற்றமும், வசீகரிக்கும் முகமும் பலரும் அவரை ரசிக்க வைத்தது. அவரை எப்படியாவது சினிமாவில் நடிக்க வைத்துவிட வேண்டும் என பலரும் விரும்பினர். அவர் நினைத்திருந்தால் சினிமாவில் ஒரு பெரிய ரவுண்டு வந்திருக்க முடியும். ஆனால் அவர் சினிமா பக்கம் செல்வதில்லை என்பதில் மிகவும் உறுதியாக இருந்தார்.

ஷாருக்கான் ஜோடியாக

அந்த வகையில் இந்திப்பட இயக்குனர் சுபாஷ் கய், ஷாருக்கானுடன் நடிக்க வைக்க ஒப்பந்தம் பேச பெப்ஸி உமாவின் வீட்டுக்கே வந்திருக்கின்றனர்.

அரைமணி நேரத்தில் பேசி உங்களை சம்மதிக்க வைக்கிறேன் என்று சவால்விட்டு வந்த அவர்களை, ஒரு மணி நேரம் பேசி, நான் நிச்சயமாக உங்கள் படத்தில் நடிக்க மாட்டேன். நடிப்பதற்கு விருப்பம் இல்லை என்று திருப்பி அனுப்பியவர்தான் பெப்ஸி உமா.

இதையும் படியுங்கள்: கவுண்டமணி குறித்து பலரும் அறியாத 10 மர்மங்கள்..

அதுமட்டுமின்றி, தமிழ் சினிமாவின் சூப்பர் ரஜினிகாந்தே, பெப்ஸி உமாவுடன் ஜோடியாக நடிக்க மிகவும் ஆசைப்பட்டு இருக்கிறார்.

எப்படியாவது தன்னுடன் அவரை நடித்து வைக்க வேண்டும் என்பதற்காக ரஜினிகாந்தே நேரடியாக போன் செய்து, பெப்ஸி உமாவை அழைத்திருக்கிறார். இதுகுறித்து ஒரு நேர்காணலில் பெப்ஸி உமா வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

ரஜினிகாந்த்

நான் சினிமாவில் நடிக்காததற்கு வருத்தப்பட்டதே கிடையாது. ரஜினி கூப்பிட்டு யாரும் மாட்டேன்னு சொல்ல மாட்டாங்க. ரஜினி சார் என்னை பர்சனலா முத்து படத்துல நடிக்கவும், இன்னொரு படத்துல நடிக்கவும் என்னை கூப்பிட்டார். நான் முடியாதுன்னு சொன்னேன்.

இதையும் படியுங்கள்: சீரியலில் மட்டும் தான் குடும்ப குத்துவிளக்கு.. இணையத்தில் சன்னிலியோனை மிஞ்சும் மான்யா ஆனந்த்..!

அவர் மிகப்பெரிய நடிகர். அவர்கிட்ட முடியாதுன்னு சொல்றதே ஒரு தயக்கத்தோட தான் சொன்னேன்.

அவரே எங்கிட்ட சொல்வார்.இந்த மாதிரி நான் கூப்பிட்டும் நீங்க முடியாதுன்னு சொல்லிட்டீங்க. அப்படீன்னு அவரே என்கிட்ட சொல்லியிருக்கார், என்று பிரபல நடிகரான ரஜினிகாந்த் 2 முறை என்னை அழைத்தார் என்று தயங்கி தயங்கி அந்த விஷயத்தை ஓப்பனாக கூறியிருக்கிறார் பெப்சி உமா.