தூக்கில் பிணமாக மீட்கபட்ட முன்னணி தயாரிப்பாளர்..அதிர்ச்சி தகவல்..!

திரை உலகில் திரைப்படங்கள் எடுப்பதற்கு தயாரிப்பாளர்கள் முக்கிய அச்சாணியாக திகழ்கிறார்கள். அந்த வகையில் தற்போது கன்னட திரை உலகில் தயாரிப்பாளராக வலம் வந்த சௌந்தர்யா ஜெகதீஷ் என்பவரின் மரணம் திரை உலகை உலுக்கியுள்ளது.

இதையும் படிங்க: என்னுடன் படுக்கையை பகிற வேண்டுமா..? மோசமான கேள்வி காலா பட நடிகை நச் பதிலடி..!


யாருமே எதிர்பாராத அளவு இந்த சம்பவம் நிகழ்ந்திருப்பதாக திரையுலகப் பிரபலங்கள் பலரும் பல்வேறு வகையான கருத்துக்களை முன் வைத்து வருவதோடு அன்னாரது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்தித்து வருகிறார்கள்.

முன்னணி தயாரிப்பாளர்..

சௌந்தர்யா ஜெகதீஷின் இந்த செயலானது திரை உலக மக்களின் மத்தியில் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் ஒரு முன்னணி தயாரிப்பாளர், தொழில் அதிபராகவும் விளங்கியவர்.

அந்த வகையில் இவர் கன்னடத்தில் பப்பு, மஸ்து, மஜா மதி, ராம் லீலா, சிநேகிதிரு, ஆகிய படங்களை தயாரித்திருக்கிறார். இவர் பெங்களூருவில் உள்ள லக்ஷ்மி லே அவுட்டில் வாசித்து வந்திருக்கிறார்.


இந்நிலையில் நேற்று அதிகாலை 4:00 மணி அளவில் சவுந்தர்யா ஜெகதீஷ் என்ன காரணத்துக்காக இந்த உலகை விட்டு சென்றார் என்பது தெரியவில்லை.

மேலும் இந்த சம்பவம் குறித்து அதிகாலை நாலு மணிக்கு செய்திகள் வெளி வர ஆரம்பித்துவிட்டது. ஆனால் இந்த விஷயம் அவருடைய குடும்பத்தாருக்கு காலை 9:30 மணியளவில் தான் தெரிய வந்துள்ளது.

அதிர்ச்சியில் உறைந்த குடும்பம்..

இந்த நிகழ்வுக்குப் பிறகு அவரை மருத்துவமனைக்கி அழைத்து சென்றார்கள். எனினும் விஷயம் கைமீறி சென்று விட்டது. அவர் இறந்து சில மணி நேரங்கள் ஆகிவிட்டது என்று மருத்துவர்கள் கை விரித்து விட்டார்கள்.


இந்த உலகை விட்டு வெறுத்து செல்வதற்கு காரணம் என்ன என்ற ரீதியில் காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள். அந்த விசாரணையில் உண்மை எப்போது வெளி வரும் என்று ரசிகர்கள் சோகத்தோடு காத்திருக்கிறார்கள்.

அதிர்ச்சியில் திரையுலகம்..

மேலும் சமீப காலமாக சௌந்தர்யா ஜெகதீஷ் மன உளைச்சலில் இருந்ததாகவும், அதற்காக மாத்திரைகளை எடுத்து வந்ததாகவும் அவரது குடும்பத்தார் கூறுகிறார்கள்.

இதனை அடுத்து இவரது இந்த விவாகாரம் தற்போது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு ரசிகர்கள் மத்தியிலும் திரை துறை மத்தியிலும் பெருத்த இடியை தந்துள்ளது.

அத்தோடு தூக்கில் பிணமாக மீட்கப்பட்ட முன்னணி தயாரிப்பாளரின் நிலையை பார்த்து அனைவரும் வாயடைத்து விட்டதோடு மனிதனின் வாழ்க்கை இவ்வளவு தானா? என்ற கேள்வியையும் எழுப்பி உள்ளது.

திரை துறையை பொறுத்த வரை இது போன்ற அவலங்கள் தொடர் கதையாக மாறுவதற்கு காரணம் அவர்களின் மன உளைச்சல் என்று அறிந்து கொண்ட பலரும் இது போன்ற மன உளைச்சலில் இருந்து வெளிவர வேண்டும்.


இதையும் படிங்க: இணையத்தில் லீக் ஆன GOAT First Single பாடல்.. ரசிகர்கள் படக்குழு அதிர்ச்சி..!

அதற்காக ஆன்மீகம் சார்ந்த விஷயங்களில் ஈடுபடுவதோடு யோகா போன்றவற்றை எப்போதும் செய்வது சிறப்பாக இருக்கும் என்ற கருத்தை வலியுறுத்தி இருக்கிறார்கள்.

தற்போது இணையத்தில் காட்டுத் தீயாய் பரவி வரும் இந்த விஷயத்தை தெரிந்து கொள்ளாத நண்பர்களுக்கும் ஷேர் செய்து இது குறித்து பேசும் பொருளாகி பேசி வருகிறார்கள்.