Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

ப்பா.. பதின்ம வயசில் பருவ மொட்டாக.. சீரியல் நடிகை பிரவீனா..! – வைரல் போட்டோஸ்..!

பிரபல மலையாள நடிகையான பிரவீனா குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர். கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் நடித்து வரும் இவர் தற்போது சின்னத்திரை நடிகைகளாக வளம் வந்து கொண்டிருக்கிறார்.

முன்னதாக திரைப்படங்களிலும் ரசிகர்களால் மறக்க முடியாத பல கதாபாத்திரங்களை ஏற்று நடத்தி இருக்கிறார். குறிப்பாக வசந்தியும் லட்சுமியும் நானும் என்ற மலையாள திரைப்படத்தில் நடித்த பிறகு நடிகை பிரவீனா சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

1998 ஆம் ஆண்டு முதல் சீரியல்களில் நடித்து வரும் இவர் கேரள அரசின் சிறந்த நடிகைக்கான மாநில விருதுகளை இரண்டு முறை வென்றிருக்கிறார். பின்னணி பாடகியாகவும் நடன கலைஞராகவும் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி இருக்கும் இவர் தற்போது சீரியல் அம்மா அத்தை போன்ற குணச்சித்திர வேடங்களை ஏற்று நடத்தி வருகிறார்.

மலையாளம் மட்டுமல்லாமல் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் கவனம் செலுத்தி வரும் இவர் கடைசியாக நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான வாத்தி திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இந்த படத்தில் நடிகர் தனுஷின் அம்மாவாக தோன்றியிருக்கிறார் நடிகை பிரவீனா. சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய இவர் நடிகர் மம்முட்டி உடனான தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார் .

--Advertisement--

அதில் அவர் கூறியதாவது திரைப்படங்களில் நடிக்கும் போது எப்போதுமே நான் செலெக்ட்டிவாகத்தான் இருப்பேன். எனக்கு ஏற்ற நல்ல கதாபாத்திரங்கள் வந்தால் மட்டும் தான் நடிப்பேன் என்று கூறியிருக்கிறார்.

நான் தியேட்டருக்கு சென்று பல ஆண்டுகள் ஆகிவிட்டது. இதுவரை 150 படங்களில் நடித்திருக்கிறேன். அவற்றில் வெறும் 4 திரைப்படங்களில் தான் திரையரங்குகளில் பார்த்திருக்கிறேன்.

ஆனால், வாத்தி திரைப்படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவல எனக்குள் இருந்தது. இதனால் இரவு படப்பிடிப்பு முடிந்ததும் தியேட்டருக்கு போய் படத்தை பார்க்க விரும்பினால். என்னுடைய நேரம் எனக்கு டிக்கெட் கிடைக்கவில்லை.

இந்நிலையில், மம்முட்டி குறித்து பேசிய பிரவீனா அவரைப் பற்றி பேசுவதற்கு ஒரு நாள் போதாது. அவருடன் 45 படங்களில் நடித்திருக்கிறேன். மிகவும் நல்ல மனிதர் நான் பார்த்த மனிதர்களில் சிறப்பான மனிதர்.

அவருடைய சிபாரிசின் பேர் பல படங்கள் எனக்கு கிடைத்திருக்கின்றன. நான் உனக்கு பட வாய்ப்புகள் கிடைக்கும் பொழுது போன் செய்கிறேன். ஆனால், நீங்களும் பட வாய்ப்புகளை தேட வேண்டும். அதே சமயம் யார் நல்லவர்.. யார் கெட்டவர் என்பதை புரிந்து கொண்டு திரைப்படங்களை ஏற்று நடிக்க வேண்டும் என்று எனக்கு பல நேரங்களில் அறிவுரை கொடுத்து இருக்கிறார் என்று கூறியிருக்கிறார்.

இந்நிலையில் இவருடைய பதின்ம வயதில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சில இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. இதனை பார்த்து ரசிகர்கள் சீரியல் நடிகை பிரவீனாவா…? இது என்று வாயை பிளந்து இருக்கின்றன.

Summary in English : Social media has made it easier than ever for celebrities to connect with their fans, but it has also opened the door to potentially embarrassing photos being shared without consent. Recently, photos of actress Praveena from her younger days have gone viral on social media.

Continue Reading
 

More in

Trending Now

To Top