பாத்தீங்களா.. செல்லத்துக்கு எதுவுமே தெரிய.. ரசிகர் கேட்ட விவகாரமான கேள்வி.. பிரியங்கா மோகன் வெகுளித்தனமான பதில்..

பாத்தீங்களா.. செல்லத்துக்கு எதுவுமே தெரிய.. ரசிகர் கேட்ட விவகாரமான கேள்வி.. பிரியங்கா மோகன் வெகுளித்தனமான பதில்..

தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வரும் பிரியங்கா மோகன் 2019 ஆம் ஆண்டு கன்னட திரைப்படமான ஒந்த் கதே ஹெல்லா என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்.

இதனை அடுத்து இவருக்கு தெலுங்கில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைக்க 2019 ஆம் ஆண்டு கேங் லீடர் எனும் திரைப்படத்தில் நடித்து அசத்தினார்.

நடிகை பிரியங்கா மோகன்..

கன்னடம் மற்றும் தெலுங்கு மொழியில் பட்டையை கிளப்பிய பிரியங்கா மோகனுக்கு தமிழில் நடிக்கக்கூடிய வாய்ப்பு வந்து சேர்ந்தது. அந்த வகையில் இவர் 2021 ஆம் ஆண்டு நெல்சன் திலிப் குமார் இயக்கிய சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார்.


இதையும் படிங்க: பணம் வேணாம்.. இதை கொடுத்தால்.. ஆடையின்றி நடிக்க தயார்.. ஆண்ட்ரியா பேச்சை கேட்டீங்களா..

தமிழைப் பொறுத்த வரை தனது முதல் படத்திலேயே முன்னணி நடிகரோடு இணைந்து நடித்த இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. அந்த வகையில் சூர்யா நடித்து இயக்குனர் பாண்டியராஜன் இயக்கிய எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார்.

மேலும் மீண்டும் சிவகார்த்திகேயனோடு ஜோடி போட்டு டான் படத்தில் நடித்த இவர் அண்மையில் பொங்கல் ரிலீஸ் ஆக வெளி வந்த கேப்டன் மில்லர் திரைப்படத்தில் தனுஷுக்கு இணையாக நடித்து பாராட்டுதல்களை பெற்றிருக்கிறார்.

ரசிகர் கேட்ட போட்டோ..

சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய பிரியங்கா மோகன் அடிக்கடி வண்ண வண்ண உடைகளை உடுத்தி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.


அதுமட்டுமல்லாமல் நேரம் கிடைக்கும் போது நேரலையில் ரசிகர்களோடு பேசி மகிழ்ந்து வரும் இவர் அண்மையில் ரசிகர் ஒருவர் நேரலையில் கலந்துரையாடிய போது கேட்டிருந்த விவகாரமான கேள்வியை புரிந்து கொள்ளாமல் வெள்ளந்தித்தனமாக பதில் அளித்து இருப்பது பலரையும் கவர்ந்துள்ளது.

வெகுளியாய் இருக்கும் பிரியங்கா..

அந்த வகையில் தன்னுடைய இன்ஸ்டால் பக்கத்தில் ரசிகர்களோடு கலந்துரையாடிய நடிகை பிரியங்கா மோகனிடம் குறிப்பிட்ட ரசிகர் ஒருவர் விவகாரமான கேள்வியை எழுப்பினார். அது என்ன கேள்வி என்றால் மேடம் உங்களுடைய நகங்களை பார்க்க வேண்டும். தயவு செய்து புகைப்படத்தை அனுப்புங்கள் என்று கேட்டுக்கொண்டார்.

இதனை அடுத்து இந்த கேள்வியின் உள் அர்த்தம் என்ன என்பதை புரிந்து கொள்ளாத பிரியங்கா மோகன் வெகுளித்தனமாக நிஜமாகவா? என்று வெட்கப்பட்டு கொண்டு தன்னுடைய நகங்களின் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் பார்த்தீர்களா? செல்லத்துக்கு.. எதுவுமே தெரியல.. என்று கலாய்த்து தள்ளி இருக்கிறார்கள்.


இந்த விஷயம் தான் தற்போது இணையத்தில் மிகப்பெரிய பேசும் பொருளாக ரசிகர்களின் மத்தியில் பேசப்படுவதோடு மட்டுமல்லாமல் பிரியங்கா மோகனின் வெகுளித்தனமான செயலை பலரும் பல்வேறு வகைகளில் விமர்சனங்களை செய்து வருகிறார்கள்.

இன்னும் சில ரசிகைகள் இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்களை பார்த்து நான் ஒரு மேனியும் பொழுதொரு வண்ணமும் இவரது அழகு கூடிக் கொண்டே செல்கிறது இதன் ரகசியம் என்ன என்பதை கேட்டிருக்கிறார்கள்.

அத்தோடு கேப்டன் மில்லர் படத்தில் இவரது நடிப்பு சிறப்பாக இருந்தது என்று பலரும் இவருக்கு பாராட்டுக்கள் தெரிவித்து வருவதோடு, புதிய பட வாய்ப்புகளும் விரைவில் கிடைக்கும் என்று கூறியிருப்பது அவரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதையும் படிங்க: சித்தார்த் செய்த தரமான சம்பவம் – கோடி ரூபா கொடுத்தும் வேலைக்கு ஆகல..

   

--Advertisement--