Rachitha Mahalakshmi
Rachitha Mahalakshmi

“மீண்டும் தனியாக இருக்கேன்..” – சீரியல் நடிகை ரச்சிதா மகாலட்சுமி கண்ணீர்..! – இது தான் காரணமாம்..!

சமீபத்தில் நடந்து முடிந்த பிக் பாஸ் ஆறாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட ரச்சிதா மகாலட்சுமி ரசிகர் மத்தியில் இன்னும் பிரபலமானார் உடன் இவருடன் போட்டியாளராக கலந்து கொண்ட ஷிவின் கணேசன் என்பவரும் இவரும் மிகவும் நெருக்கமான நண்பர்களாக இந்த பிக் பாஸ் வீட்டில் இருந்தார்கள்.

இருவரும் நெருக்கமாக இருந்தது மட்டுமல்லாமல் பல்வேறு விஷயங்களுக்கு ஒருவருக்கொருவர் ஆதரவாகவும் இருந்து வந்தனர். இந்த நெருக்கம் பிக் பாஸ் வீட்டிற்கு வெளியேயும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

Rachitha Mahalakshmi
Rachitha Mahalakshmi

அதன் ஒரு பகுதியாக பிக் பாஸ் வீட்டில் இருக்கும் பொழுது ஷிவின் கணேசனுக்கு கண்டிப்பாக பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு சீரடி சாய்பாபா கோவிலுக்கு நான் உன்னோடு வருகிறேன் என்று கூறியிருந்தார் மற்றும் சத்தியம் செய்து கொடுத்திருந்தார்.

இந்நிலையில், தற்போது இந்த சத்தியத்தை நிறைவேற்றும் மூலமாக ஷிவின் கணேசனுடன் சீரடி சாய்பாபா கோவிலுக்கு விஜயம் செய்து தரிசனத்தை செய்து விட்டு வந்திருக்கிறார்.

Rachitha Mahalakshmi
Rachitha Mahalakshmi

மட்டுமில்லாமல் அப்போது எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் ஆகிய சிலவற்ற இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களுடன் தங்களுடைய மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டிருக்கிறார் ரச்சிதா மகாலட்சுமி.

கடந்த இரண்டு வருடங்களாக தன்னுடைய காதல் கணவர் தினேஷ் என்பவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார் ரச்சிதா மகாலட்சுமி என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வப்போது இவருடைய இரண்டாவது திருமணம் குறித்து தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

ஆனால் இது குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர் தகவலும் வெளியாகவில்லை. இந்நிலையில், கர்நாடகாவை சேர்ந்த தொழிலதிபரும் ரச்சிதா மகாலட்சுமியின் குடும்ப நண்பருமான ஒருவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்ற தகவலும் வெளியாகி இருக்கின்றது.

Rachitha Mahalakshmi
Rachitha Mahalakshmi

தொடர்ந்து ரச்சிதா மகாலட்சுமியின் திருமணம் குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாவது வாடிக்கை என்றாலும் கூட தற்போது ரச்சிதா மகாலட்சுமி எந்த ஒரு மறுப்பு அறிவிப்பும் வெளியிடாமல் இருப்பது ஒருவேளை இந்த தகவல் உண்மையாக இருக்குமோ..? என்ற ஒரு கேள்வியையும் ரசிகர்கள் மத்தியில் வேலை செய்திருக்கிறது. இணையத்தில் வைரல் ஆகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

கடந்த சில மாதங்களாக தன்னுடைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களுடன் குதுகலமாக இருந்த ரச்சிதா மகாலட்சுமி தற்போது தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் சோகமான பதிவு ஒன்றை எழுதியுள்ளார்.

Rachitha Mahalakshmi
Rachitha Mahalakshmi

அதில் அவர் கூறியுள்ளதாவது, தனியாக பயணிக்க ஆர்வமுடன் இருங்கள், சில நேரங்களில் உங்களுடன் இருந்த பலர் உங்களுனேயே இருக்க போவதில்லை என்று பதிவிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள், நீங்க என்னசொன்னாலும் நாங்க உங்களை விட போவதில்லை. எங்கள் அன்பு உங்களை சுற்றி எப்போதும் இருக்கும் என்று கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

   

--Advertisement--