முதல் கணவரை பிரிந்த நடிகை சரண்யா..! இவரால் தான் பொண்வண்ணனை மறுமணம் செய்தாராம்..!

முதல் கணவரை பிரிந்த நடிகை சரண்யா..! இவரால் தான் பொண்வண்ணனை மறுமணம் செய்தாராம்..!

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 1987ல் வெளிவந்த நாயகன் படத்தில்தான் நடிகை சரண்யா அறிமுகமானார். முதல் படத்திலேயே நடிகர் கமலுக்கு ஜோடியாக நடித்தவர்.

அடுத்தடுத்த படங்களில் நடித்த சரண்யா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். மனசுக்குள் மத்தாப்பூ, கருத்தம்மா போன்ற படங்களில் நடித்த இவர், ஒரு கட்டத்தில் நடிப்பில் இருந்து சில ஆண்டுகள் விலகி இருந்தார்.

அதன்பிறகு அம்மா கேரக்டர்களில் நடிக்க துவங்கி, இப்போது மிக பிஸியான அம்மா நடிகையாக இருக்கிறார்.

இப்போதைய இளம் நடிகர்களில் உதயநிதி ஸ்டாலின், தனுஷ், சிவகார்த்திகேயன், சூர்யா, சசிக்குமார், விமல், மாஸ்டர் ராகவா லாரன்ஸ் போன்றவர்களின் அம்மாவாக தொடர்ந்து நடித்து வருகிறார்.

இதில் வேலையில்லா பட்டதாரி, களவாணி படங்களில் இவரது அம்மா கேரக்டர் பேசப்பட்டது. தென்மேற்கு பருவக்காற்று படத்தில் விஜய் சேதுபதி அம்மாவாக ஒரு பண்பட்ட நடிப்பை தந்திருப்பார் சரண்யா.

சரண்யா, மலையாளப் பட தயாரிப்பாளரின் மகள். இவர் இயக்குநர் ராஜசேகர் என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக, அவரை விட்டு விலகிவிட்டார்.

இதையடுத்து கருத்தம்மா படத்தில் நடித்த போது பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக இருந்த நடிகர் பொன்வண்ணன், சரண்யாவை திருமணம் செய்துக்கொண்டார்.

இதற்கான ஏற்பாடுகளை செய்தவர் பாரதிராஜா. அவர்தான் சரண்யாவின் பெற்றோரிடம் பேசி சரண்யா, பொன்வண்ணன் திருமணத்தை நடத்தியிருக்கிறார்.

முதல் கணவரை பிரிந்த சரண்யா, பாரதிராஜாவால் தான் பொன்வண்ணனை மறுமணம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது அவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.