Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Tamil Cinema News

உடலுறவில் உச்சம் அடைந்தது போல மனைவி நடிக்க காரணம் இது தான்..! – RJ ஆனந்தி ஓப்பன் டாக்..!

பிரபல தொகுப்பாளினி RJ ஆனந்தி The Book Show என்ற ஒரு யூட்யூப் சேனலை நிர்வகித்து வருகிறார். இந்த சேனலில் பல்வேறு புத்தகங்களை பரிந்துரை செய்தும், அதுகுறித்த ஒரு முகவுரையை வழங்கும் விதமாகவும் சுவாரஸ்யமான காணொளிகளை பதிவேற்றி வருகிறார்.

அந்த வகையில், சமீபத்தில் எழுத்தாளர் லதா எழுதிய Toilet Seat என்ற புத்தகத்தின் தமிழ் பதிப்பான கழிவறை இருக்கை என்ற புத்தகத்தை பற்றியும், அதில் கூறப்பட்டுள்ள தகவல்களில் சாராம்சம் பற்றியும் வெளிப்படையாக பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

அதில், ஆண் பெண் உடலுறவு.. ஆண்கள் பலரும் பெண்களில் அந்த உறுப்பை தங்களில் விந்தணுவை கழிக்கும் கழிப்பறையாக மட்டுமே பயன்படுத்திகிறார்கள் என்பதால் தான் இந்த புத்தகத்திற்கு கழிப்பறை இருக்கை என தலைப்பு வைத்துள்ளார் லதா என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், இந்த புத்தகத்தில் ஒரு ஆய்வு முடிவும் வெளியிடப்பட்டுள்ளது. அந்த ஆய்வின் படி 72% பெண்கள் தங்கள் துணையுடன் உறவில் இருக்கும் போது உச்சம் அடைந்தது போல நடிக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.

உச்சம் அடையவில்லை என்றால், உச்சம் அடையவில்லை.. நான் சந்தோஷமாகவில்லை என்று சொல்லிவிட்டு போய்விடலாமே.. எதற்காக 72% பெண்கள் உச்சம் அடைந்தது போல நடிக்க வேண்டும் என்ற கேள்வி உங்களுக்கு எழலாம்.

--Advertisement--

அதற்கும காரணம் இருக்கிறது, பொதுவாக பெண்கள் உச்சம் அடையவில்லை என்று கணவரிடம் கூறினால் அதனால் மோசமான பின் விளைவுகள் ஏற்படும் என பயப்படுகிறார்கள்.

ஒருவேளை, நான் உச்சம் அடையவில்லை என்று கூறினால், நாம் வேறு யாருடனாவது உச்சம் பெற முயர்சி செய்வோம் என கணவர் நினைத்துவிடுவாரோ..? அல்லது, உச்சம் என்றால் என்ன என்று உனக்கு எப்படி தெரியும்..? வேறு யாருடனாவது இதற்கு முன்பு உச்சம் அனுபவித்திருக்கிறாயா.? என்று சந்தேகப்படுவாரோ.. போன்ற காரணங்களால் பெண்கள் உச்சம் அடைந்தது போல நடிக்கிறார்கள் என்று அந்த புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது என RJ ஆனந்தி கூறியுள்ளார்.

கணவன் மனைவி இருவரும் அன்யோன்யமாக இருப்பது என்பது பசி போலத்தான். பசிக்கும் போது அதை தணித்துவிட வேண்டும். இல்லையென்றால் அதன் மீதே தான் முழு எண்ணமும் இருக்கும். எனவே, கணவன், மனைவி இருவரும் மனம் விட்டு பேச வேண்டும்.

உடலுறவு சார்ந்த அறிவு அவர்களுக்கு எப்படி வந்தது என யோசிப்பதை விட்டுவிட்டு.. ஒருவர் ஒருவரின் ஆசைகளை புரிந்து கொள்வதிலும் அதனை நிறைவேற்றுவதிலும் கவனத்தை செலுத்தினால் இல்லறம் நல்லறமாக இருக்கும் என்று கழிப்பறை இருக்கை கூறுவதாக RJ ஆனந்தி வெளிப்படையாக பதிவு செய்துள்ளார்.

Continue Reading
 
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Tamil Cinema News

Trending Now

To Top