“படுக்கையறையில் கால்களை பிடித்து தரதரவென இழுத்துக்கிட்டு போய்..” சாய்பல்லவி பேச்சு..

“படுக்கையறையில் கால்களை பிடித்து தரதரவென இழுத்துக்கிட்டு போய்..” சாய்பல்லவி பேச்சு..

1992 ஆம் ஆண்டு மே மாதம் ஒன்பதாம் தேதி பிறந்த நடிகை சாய் பல்லவி ஒரு மிகச்சிறந்த நடன கலைஞராக திகழ்ந்தவர். இதனை அடுத்து தென்னிந்திய மொழிகள் பலவற்றில் நடித்து தனக்கு என்று ஒரு ரசிகர் வட்டாரத்தை வைத்திருப்பவர்.

இதையும் படிங்க: ப்ளீஸ்.. இதை பண்ணாதிங்க.. காலை வாரிய கணவன்.. DD குறித்து ரகசியம் உடைத்த பிரியதர்ஷினி..

இவரது நடிப்பில் 2015 ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வசூலை வாரி குவித்த மலையாள திரைப்படமான பிரேமம் திரைப்படத்தில் இவர் மலர் டீச்சர் ஆக நடித்து பலரையும் தன் பக்கம் ஈர்த்துக் கொண்டவர்.

சாய் பல்லவி..

இதனை அடுத்து இவருக்கு தெலுங்கு படத்தில் நடிக்க கூடிய வாய்ப்புகள் கிடைத்தது தெலுங்கு படத்தில் நடித்து வந்த இவ தமிழ் படங்களிலும் நடிக்க ஆரம்பித்தார். தற்போது டாக்டர் படிப்பை முடித்துவிட்டு இந்திய திரைப்படங்களில் நடித்து முன்னணி நாயகி ஆக மாறி இருக்கிறார்.


இவர் 2008 ஆம் ஆண்டு தமிழ் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் நடந்த உங்களில் யார் அடுத்த பிரபுதேவா என்ற நிகழ்ச்சிகள் பங்கேற்று தனது அற்புத நடனத்திறனை வெளிப்படுத்தினார்.

இதனை அடுத்து இவருக்கு தமிழில் மாரி மற்றும் மாரி 2 படங்களில் தனுசுக்கு ஜோடியாக நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது இந்த வாய்ப்பை சரியான முறையில் இவர் பயன்படுத்திக் கொண்டார்.

சகோதரியோடு டாம் அண்ட் ஜெர்ரி சண்டை..

இவருக்கு ஒரு சகோதரி இருக்கிறார் படுகர் இனத்தைச் சேர்ந்த இவர்கள் கோயமுத்தூரை பூர்வீகமாக கொண்டவர்கள். இந்த சகோதரியோடு அடிக்கடி நடக்கும் டாம் அண்ட் ஜெர்ரி சண்டையைப் பற்றி அண்மை பேட்டி ஒன்று பகிர்ந்து இருக்கிறார்.

மேலும் சகோதரி தன்னுடைய ஆடைகளை எடுத்து அவர் போடும் போது சற்று கடுப்பாகி அம்மாவிடம் கூறுவார் என்று சொன்ன சாய் பல்லவி, படுக்கை அறையில் அமர்ந்திருந்தாலோ, படுத்திருந்தாலோ கால்களை பிடித்து தரதரவென்று இழுத்துக்கிட்டு போய்விடுவாள் என்ற பரபரப்பான விஷயத்தை கூறியிருக்கிறார்.


அவரின் சகோதரி எப்படி கால்களை தரவரவென்று இழுத்துச் செல்வாரோ அதுபோல சரியான சமயத்தில் இவரும் சகோதரியின் காலை பிடித்து தரதரவென்று இழுத்துப் போகக் கூடிய குணம் கொண்டவர் என்றும் இருவரும் டாம் அண்ட் ஜெர்ரி போல அடிக்கடி சண்டை இட்டுக் கொள்வார்கள். மேலும் அந்த சந்தோஷம் வேறு எதிலும் கிடைக்காது என்றும் கூறியிருக்கிறார்.

மேலும் அந்தப் பேட்டியில் இது போன்று நீங்கள் உண்மையாக நடந்து கொள்வீர்களா என்பதை தொடர்ந்து கேட்ட தொகுப்பாளர்களிடம் சத்தியமாக நாங்கள் இப்படித்தான் என்று சிரித்த முகத்துடன் சாய்பல்லவி கூறியதை அடுத்து எந்த பேட்டியானது தற்போது பரபரப்பாக ரசிகர்களின் மத்தியில் பேசப்படுகிறது.


எவ்வளவு தான் சகோதரர்கள் மற்றும் சகோதரிகள் சண்டை போட்டுக் கொண்டாலும் அவர்கள் இல்லாத ஒரு நிமிடம் ஏற்படும் தவிப்பு பற்றி வார்த்தைகளால் விவரிக்க முடியாது அது போல பெரிய நிலையில் நடிகையாக இருந்தாலும் தன் சகோதரியோடு இதுபோன்ற சின்ன, சின்ன சேட்டைகளில் ஈடுபடும் சாய் பல்லவியை பெருமையாக அவரது ரசிகர்கள் பேசி வருகிறார்கள்.

ஓபன் டாக்..

அது மட்டுமல்லாமல் தனது சகோதரி யோடு நிகழும் சண்டையை ஓபன் ஆக கூடிய சாய் பல்லவிக்கு பாராட்டுக்கள் குவிவதோடு மட்டுமல்லாமல் எங்க வீட்டிலும் நாங்க இப்படித்தான் நீங்களும் அப்படித்தானே என்று பலரும் பல்வேறு வகையான விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார்கள்.

அடுத்து சிலர் சிவகார்த்திகேயனின் பாடலான உன்னோடு தான் வாழனும் என்ற பாடலை பாடி வருகிறார்கள்.

இதையும் படிங்க: நெசமாவே ட்ரெஸ் போட்டிருக்கியாமா.. நீச்சல் உடையில் பூர்ணிமா ரவி தாறு மாறு கிளாமர்..