பூ நடிகையுடன் சிவகார்த்திகேயன் காதல்.. தனுஷ் கூறிய தகவல்..!

பூ நடிகையுடன் சிவகார்த்திகேயன் காதல்.. தனுஷ் கூறிய தகவல்..!

திரை உலகில் தற்போது முன்னணி நடிகர்களின் வரிசையில் இருக்கும் சிவ கார்த்திகேயன் ஆரம்ப நாட்களில் விஜய் டிவியில் தொகுப்பாளராக பணி புரிந்து மக்கள் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.

இதனை அடுத்து நடிகர் தனுஷ் நடிப்பில் வெளி வந்த 3 திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தை ஏற்று நடித்த இவர் மெரினா திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆனார்.

நடிகர் சிவகார்த்திகேயன்..

இதனை அடுத்து தமிழ் திரைப்படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு இவருக்கு வந்து சேர்ந்தது. அந்த வகையில் எதிர்நீச்சல் படத்தில் நடித்து மாபெரும் கிட் கொடுத்ததை அடுத்து இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது.


இதையும் படிங்க: அப்பா முக்கியமா..? அம்மா முக்கியமா..? பேரனின் பதிலை கேட்டு குலை நடுங்கிப்போன ரஜினி குடும்பம்..!

அந்த வகையில் தனுஷ் தயாரிப்பில் உருவான காக்கி சட்டை படத்தில் சிவகார்த்திகேயன் நடித்தார். இதன் பிறகு இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்ற வில்லை.

இதற்கு என்ன காரணம் என்று தெரியாத நிலையில் ஏராளமான கிசுகிசுக்கள் வெளிவந்தது. இவை அனைத்தும் உண்மையானது அல்ல நாங்கள் இருவரும் நல்ல உறவில் தான் இருக்கிறோம் என்று அறிவித்ததை அடுத்து அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

பூ பட நடிகையுடன் காதலா?

மேலும் தனுஷ் நடிப்பில் வெளி வந்த மரியான் திரைப்படம் பற்றி உங்களுக்கு நினைவில் இருக்கிறதா? இந்த படத்தில் வரும் ஒரு காட்சியில் அப்பன் சாமி மற்றும் மகன் சாமி என்ற பெயரைக் கொண்ட நடிகர் பூ நடிகையுடன் காதலா? என்ற வசனம் வரும்.


இந்த வசனம் குறித்து சிவகார்த்திகேயனுடன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தனுஷ் மரியான் படத்தில் நான் சொன்ன கிசு கிசு வசனம் சிவகார்த்திகேயனை பற்றி தான். ஏனென்றால் அப்பன் சுவாமி என்றால் அது சிவனை குறிக்கும்.

அதாவது சிவாவை குறிக்கும் மகன் சாமி என்பது முருகரைக் குறிக்கும் அதாவது கார்த்திகையனை தான் முருகன் என்கிறோம். எனவே அந்த பெயர் கொண்ட நடிகர் பூ நடிகையுடன் காதலா என்று சிவகார்த்திகேயனை மனதில் வைத்து தான் அந்த வசனத்தை கூறினேன் என்று கூறினார்.

கிசுகிசு சொன்ன தனுஷ்..

இதை அடுத்து நிகழ்ச்சி தொகுப்பாளினி அந்தப் பூ நடிகை யார்? என்று கேள்வி கேட்க அதற்கு சிவகார்த்திகேயன் மரியான் படத்தில் நடித்த நடிகை தான் என்று நகைச்சுவையோடு கூறினார். ஆனால் அது அப்படியெல்லாம் எந்த நடிகையும் நினைக்கவில்லை. சும்மா தான் வசனத்துக்காக கூறியது என்று தனுஷ் கூறியதை அடுத்து அனைவருக்கும் சப்பு என ஆகிவிட்டது.


இதையும் படிங்க: சூர்யாவா இருந்தா என்ன..? கேட்டதை வைங்க.. ராஷ்மிகா போட்ட ஸ்ட்ரிக்ட் ஆர்டர்.. அடி ஆத்தி..

இதனை அடுத்து பூ நடிகை உடன் சிவகார்த்திகேயன் காதலில் இருக்கிறாரா? என்ற ரீதியில் அவரது ரசிகர்கள் அனைவரும் கேள்வி மேல் கேள்வி கேட்டு வருவதோடு இந்த விஷயம் வெறும் வதந்தி தான் என்பதை உரக்கக் கூறி வருகிறார்கள்.

மேலும் இணையத்தில் வைரலாக இருக்கும் இந்த பேட்டியானது ரசிகர்களால் அதிகளவு பார்க்கப்படக்கூடிய பேட்டியில் ஒன்றாக மாறிவிட்டது.

   

--Advertisement--