ப்ளீஸ்.. இதை பண்ணாதிங்க.. காலை வாரிய கணவன்.. DD குறித்து ரகசியம் உடைத்த பிரியதர்ஷினி..

ப்ளீஸ்.. இதை பண்ணாதிங்க.. காலை வாரிய கணவன்.. DD குறித்து ரகசியம் உடைத்த பிரியதர்ஷினி..

விஜய் டிவிகளில் அதிக அளவு நடக்கும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கக்கூடிய மிகச்சிறந்த தொகுப்பாளினியாக விளங்கியவர் திவ்யதர்ஷினி என்கின்ற டிடி. ஒரு காலகட்டத்தில் டிடி இல்லாத ஷோவே இல்லை என்று கூறக்கூடிய அளவு இவரது ஆதிக்கம் விஜய் டிவி எங்கும் பரவி இருந்தது.

இதையும் படிங்க: தகாத உறவு.. அழிந்து போன சொத்து.. இறக்கும் போது அது இல்லை.. ஸ்ரீவித்யா குறித்து பிரபல நடிகர்..

விஜய் டிவியில் தொகுப்பாளினியாக செயல்பட்ட இவர் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். எனினும் இவருக்கு ஒரு சிறப்பான மணவாழ்க்கை அமையாததை அடுத்து பல்வேறு விதமான சர்ச்சைகளுக்கு உள்ளாகி வருகிறார்.

DD..

தமிழ்நாட்டைச் சேர்ந்த இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் புகழடைந்தார். அண்ணா ஆதார்ஸ் கல்லூரியில் இளங்கலை முதுகலை படிப்பை முடித்த இவர் என்பில் படிப்பை முடித்துவிட்டு பேராசிரியராக பணியாற்றி இருக்கிறார்.


இவர் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிகளில் ஜோடி நம்பர் ஒன், சூப்பர் சிங்கர், பாய்ஸ் வித் கேர்ள்ஸ், ஹோம் ஸ்வீட் ஹோம், சூப்பர் சிங்கர் டி 20 போன்ற நிகழ்ச்சிகள் பெருமளவு ரசிகர்களின் மனதில் இடம் பிடித்ததோடு காபி வித் டிடி மூலம் பிரபலமான தொகுப்பாலினியாக உருவெடுத்த இவருக்கு 2013 ஆம் ஆண்டு சிறந்த தொகுப்பாளினிக்கான விருதினை விகடன் வழங்கியது.

ரகசியத்தை உடைத்த பிரியதர்ஷினி..

டிடி உடன் பிறந்தவர்கள் இருவர். அதில் ஒருவர் பிரியதர்ஷினி இவரும் ஆரம்ப காலத்தில் தொகுப்பாளியாக இருந்ததோடு மட்டுமல்லாமல் சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். இவரது தம்பி விமான ஓட்டியாக விளங்குகிறார்.

இந்நிலையில் இவர் 2014 ஆம் ஆண்டு தனது நீண்ட கால நண்பரான ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் காதலித்து திருமணம் செய்து கொண்டார். எனினும் இவரது மண வாழ்க்கை திருப்தி அளிக்காத சூழ்நிலையில் இருவரும் 2017 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்கள்.


இந்சூழ்நிலையில் தற்போது தொடர்ந்து நடக்க முடியாமல் சிரமப்பட்டு வரும் டிடி வீல்சேரில் தான் எங்கும் சென்று வருகிறார். இதனால் விஜய் டிவி இவருக்கு தற்போது வேலை ஏதும் தராமல் விஜய் டிவியில் இருந்து விலக்கி விட்டார்கள்.

இந்த சங்கடகரமான சூழ்நிலையிலும் மனம் தளராத டிடி வீல்சேரிலேயே பல நிகழ்ச்சிகளை செய்வதற்கு வெளி நாடுகள் வரை சென்று வருகிறார். உதாரணத்திற்கு தற்போது ஹரிஹரனோடு இலங்கையில் நடந்த நிகழ்ச்சிக்கு வீல்சேரில் செல்லும் போது தனது சகோதரியின் மகன் இவருக்கு பாதுகாப்பாக சென்று இருக்கிறார்.

ஆனால் அவரைத் தவறாக சித்தரித்து டிடி தற்போது பிரபல தொழில் அதிபர் ஒருவருடன் தொடர்பு இருப்பதாக கிசுகிசுக்கள் கசிந்த வண்ணம் இருப்பதால் மன துயரில் சகோதரிகள் இருவரும் இருக்கிறார்கள்.

ஏற்கனவே தன் கணவனால் பாதிக்கப்பட்ட டிடி தற்போது இது போன்ற பேச்சுக்கள் எழுந்து இருப்பதால் ப்ளீஸ் இதை பத்தி பேசாதீங்க.. இப்படி பேசாதீங்க.. என் கணவன் தான் காலை வாரி விட்டுவிட்டார். ரசிகர்கள் நீங்களாவது எனக்கு ஆறுதலாக இருக்க வேண்டாமா என்பது போல பேசி இருக்கிறார்.


இதையும் படிங்க: மெட்டி ஒலி விஜி இறப்புக்கு காரணம் இது தான்.. குண்டை தூக்கி போட்ட சக நடிகை வனஜா..!

மேலும் தற்போது டிடியின் நிலைமை எப்படி இருக்கிறது என்பதை சிறப்பாக பிரியதர்ஷினி விளக்கி இருப்பதோடு சொந்த மகனையே தவறாக சித்தரிக்க கூடிய விஷயத்தைப் பற்றி இருவரும் மனம் உருகி பேசி இருக்கிறார்கள்.

இப்படி கொளுத்திப் போட்டவர்கள் பற்றி பிரபல நடிகர் பயில்வான் ரங்கநாதன் இவ்வாறு தவறாக பேசக்கூடாது என்பது போன்ற பாணியில் பேசி இருப்பது இணையத்தில் வைரவலாக மாறிவிட்டது.

   

--Advertisement--