Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Shock : மாமனார் வீட்டில் நடிகை சமந்தா அனுபவித்த கொடுமைகள்..! போட்டு உடைத்த நண்பர்..!

பொதுவாக தமிழ் சினிமாவில் தமிழ் நடிகைகள் முன்னணி நடிகைகளாக முன்னேறுவது என்பது குதிரை கொம்பு என்றுதான் கூற வேண்டும். ஆனால், அப்படியான சூழ்நிலையிலும் சென்னையில் பிறந்து சென்னையில் வளர்ந்த நடிகை சமந்தா தமிழ் சினிமாவின் உச்ச நடிகையாக முன்னேறினார்.

தமிழ் தெலுங்கு என இரண்டு மொழியிலும் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார் யார் கண் பட்டதோ தெரியவில்லை நடிகை சமந்தா தன்னுடைய மார்க்கெட் உச்சத்தில் இருக்கும் பொழுது திடீரென பிரபல நடிகர் நாக சைதன்யா-வை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

மார்க்கெட் உச்சத்தில் இருக்கும் பொழுது எதற்காக நடிகை சமந்தா திடீரென திருமணம் செய்து கொண்டார். நடிகைகள் தங்களுடைய மார்க்கெட் உச்சத்தில் இருக்கும் பொழுது திருமணம் செய்து கொள்ள மாட்டார்கள்.. ஏனென்றால் அது அவர்களுக்கு மிகப்பெரிய மைனஸ் பாயிண்டாக பார்க்கப்படும் என்றெல்லாம் நடிகை சமந்தா குறித்து அவருடைய ரசிகர்கள் பலரும் கருத்துக்களை தெரிவித்தனர்.

ஆனால் திருமணத்திற்கு பிறகு தான் நடிகை சமந்தாவின் ஓட்டம் சூடு பிடித்தது. திருமணத்திற்கு பிறகு இவர் நடிப்பில் வெளியான பல படங்கள் இவருக்கு வெற்றி படங்களாக அமைந்தன.

[irp posts=”62530″ ]

--Advertisement--

தொடர்ந்து பட வாய்ப்புகளும் வந்து கொண்டிருந்தது. இது நடிகை சமந்தாவின் தனித்திறமை என்று கூறலாம். ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் தன்னுடைய காதல் கணவரை விவாகரத்து செய்வதாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடிகை சமந்தா அறிவித்தார். இது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

தன்னுடைய மார்க்கெட் உச்சத்தில் இருக்கும் பொழுது திருமணம் செய்து கொண்ட நடிகை சமந்தா அதே போல தன்னுடைய மார்க்கெட் உச்சத்தில் இருக்கும் போது விவாகரத்தும் செய்து விட்டார் தற்பொழுது மயோசைட்டி சென்ற ஒரு விசித்திரமான நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார் நடிகை சமந்தா.

இவர் விரைவில் இந்த நோயிலிருந்து குணமாக வேண்டும் என்று அவருடைய ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் நடிகை சமந்தா இவருடைய கணவர் வீட்டில் அனுபவித்த கொடுமைகள் குறித்து அவருடைய நெருங்கிய நண்பர் ஒருவர் சில திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டு இருக்கிறார்.

அவர் கூறியதாவது நடிகர் நாக சைதன்யாவின் குடும்பத்தினர் அந்த குடும்பத்தில் உள்ள ஆண்களின் உண்மையான குணத்தை மறைக்கக் கூடியவர்கள் அவர்கள் தான் பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு காரண கர்த்தாவாக இருப்பவர்கள். வன்முறை என்பது மனதளவில் மட்டும் கிடையாது.

உடல் அளவிலும் கூட சித்ரவதை மற்றும் விமர்சனம் செய்து செய்வது என கடுமையான தொந்தரவுகளை கொடுப்பவர்கள் என்று தன்னுடைய இணைய பக்கத்தில் எழுதி இருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் நடிகை சமந்தா அவருடைய மாமனார் வீட்டில் அனுபவித்த கொடுமையை தான் இவர் இப்படி சூசகமாக எழுதியிருக்கிறார் என்று கூறுகிறார்கள்.

[irp posts=”63049″ ]

Continue Reading
 

More in

Trending Now

To Top