படுக்கையறை காட்சியில் நடிக்கும் போது என் உணர்வு இப்படி இருக்கும்..! - ஒப்பனாக பேசிய சஞ்சனா நடராஜன்..!

படுக்கையறை காட்சியில் நடிக்கும் போது என் உணர்வு இப்படி இருக்கும்..! – ஒப்பனாக பேசிய சஞ்சனா நடராஜன்..!

தமிழ், தெலுங்கு படங்களில் நடித்திருக்கும் சஞ்சனா நடராஜன் 2013 ஆம் ஆண்டு ராஜ் டிவியில் நிகழ்ந்த தமிழ் பேசும் கதாநாயகிகளின் வரிசையில் பங்கேற்றார். இந்த போட்டியில் இவர் மிகச்சிறந்த தமிழ் பேசும் முன்னணி நடிகைக்கான முதல் பரிசை தட்டிச் சென்றார்.

சஞ்சனா நடராஜன்..

தனுஷ் நடிப்பில் வெளிவந்த ஜகமே தந்திரம் என்ற படத்தில் ஒரே ஒரு பாடலில் ஓவர் நைட்டில் ஒபாமா ஆன இவர் அண்மையில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளி வந்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படத்தில் எஸ் ஜே சூர்யாவின் நாயகியாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

மேலும் இவர் ஏற்கனவே நோட்டா, கேம் ஓவர், சர்பட்டா பரம்பரை ஆகிய படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் தன் சிறிய நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.


சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி வகை வகையாக உடைகளை அணிந்து ரசிகர்களை கவரக்கூடிய வகையில் புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிட்டு மெர்சலாக்குவார்.

படுக்கையறை காட்சியில் உணர்வு..

அந்த வகையில் சமீப காலமாக அதீத கவர்ச்சி உள்ள புகைப்படங்களை வெளியிட்டு புதிய பட வாய்ப்புக்காக காத்திருக்கிறார் என கூறலாம். இவர் 2014 ஆம் ஆண்டு வெளி வந்த நெருங்கி வா முத்தமிடாதே என்ற படத்தில் துணை கதாநாயகியாக அறிமுகமாகி இருக்கிறார்.

இந்நிலையில் பிரபல நடிகை சஞ்சனா நட்ராஜன் படுக்கை அறை மற்றும் ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்கும் போது இவருக்கு ஒரு விட கூச்ச உணர்வு இருக்கும் அந்த கூச்ச சுவாபத்தை எப்படியாவது போக்கிவிட வேண்டும் என நினைத்து உத்வேகத்தோடு நடிப்பாராம்.


அத்தோடு அது போன்ற காட்சிகளை ஒரே டேக்கில் நடித்து முடித்து விட வேண்டும் என்று எண்ணி இருப்பார். ஆனால் ஸ்டார்ட், கேமரா, ஆக்சன் என்று சொன்னதும் அந்த கூச்ச உணர்வு கட்டுக்கடங்காமல் வந்துவிடும்.

இதனைப் போலத்தான் சார் பட்டா பரம்பரை திரைப்படத்தில் கலையரசனோடு நடித்த லிப்லாக் முத்தக் காட்சியில் நிறைய கேக்குகள் வாங்கிய பிறகு தான் ஓகே செய்தார்கள் என்று தற்போது ஓப்பனாக பேசி இருக்கிறார்.


அதுமட்டுமல்லாமல் இவர் படுக்கையறை காட்சிகள் நடிக்கும் போது என் உணர்வு இப்படி இருக்கும் என்று பேசிய பேச்சானது இணையத்தில் வைரலாக பரவி ரசிகர்களின் மத்தியில் அதிக அளவு பேசப்படுகிறது.

இன்னும் சில ரசிகர்கள் எவ்வளவு கூச்ச சுபாவத்தோடு இருப்பவர் இது போன்ற காட்சிகளில் எப்படி நடித்தார் என்பதை கேட்டு இருக்கிறார்கள். எனினும் இன்று இருக்கும் சினிமா உலகில் நிலைத்து நீடித்து நிற்க இது போன்ற காட்சிகளில் நடிக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அப்படி நடித்தால் தான் திரைப்பட வாய்ப்புகள் கிடைப்பதோடு திரை உலகில் நிலைத்து நிற்க முடியும்.