விவாகரத்தில் முடிந்த முதல் திருமணம்.. சரண்யா பொன்வண்ணன் வாழ்க்கை ரகசியம்..

விவாகரத்தில் முடிந்த முதல் திருமணம்.. சரண்யா பொன்வண்ணன் வாழ்க்கை ரகசியம்..

நடிகை சரண்யா பொன்வண்ணன், கேரளாவை சேர்ந்தவர். அவரது ஒரிஜினல் பெயர் ஷீலா. அவரது தந்தை ராஜூ மலையாளத்தில் 80க்கும் மேற்பட்ட படங்களை இயக்கிய டைரக்டர்.

ஆரம்பத்தில் இருந்தே சரண்யாவை, நீ சினிமாவில் நடிக்க ஆசைப்படக் கூடாது. கண்ணுக்கு மை போடக் கூடாது. நடனம் கற்றுக்கொள்ளக் கூடாது என பல கண்டிசன்களுடன் வளர்த்துள்ளார்.

அப்பாவின் கண்டிப்புகளுக்கு கட்டுப்பட்ட வளர்ந்த அவர், கல்லூரிக்கு சென்றுவரும் போது, பஸ்சில் அவரை பின்தொடர்ந்த ஒரு புகைப்பட கலைஞர் அவரது நீண்ட கூந்தலை பார்த்து, புகைப்படங்கள் எடுத்துள்ளார்.

அந்த புகைப்படங்களை பார்த்த மலையாள இயக்குநர்களின் உதவியால், மணிரத்னம் இயக்கும் ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு வந்திருக்கிறது.

நாயகன் படத்தில் அறிமுகம்

அது நடிகர் கமல்ஹாசன் நடித்த நாயகன் படம்தான். அதில் நடிக்க மாடர்ன் டிரஸ் போட மாட்டேன். பாத்ரூமில் குளியல் காட்சியில் நடிக்க மாட்டேன், முத்தக்காட்சியில் நடிக்க மாட்டேன் என்று கண்டிசன் போட்டுதான் நடிக்க ஒப்புக்கொண்டு இருக்கிறார்.

அதன்பிறகு பல படங்களில் நடித்த நடிகை சரண்யா, கருத்தம்மா படத்தில் நடித்த போது, பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த பொன்வண்ணன், சரண்யாவை விரும்பியிருக்கிறார்.

இதையும் படியுங்கள்: பப்லு முதல் மனைவி யார் தெரியுமா.. 9 ஆண்டு காதலுக்கு செய்த துரோகம்.. வேதனை பக்கங்கள்..

60 ஆண்டுகள் கால்ஷீட் கொடுங்க

அதன்பிறகு, புதிய படம் எடுக்கிறேன், உங்க கால்ஷீட் வேண்டும் என்று போனில் கேட்ட பொன்வண்ணிடம், எத்தனை நாட்கள் என சரண்யா கேட்டிருக்கிறார்.

60,70 ஆண்டுகள் கால்ஷீட் வேண்டும் என்று கேட்க, அவர் திருமணம் செய்துக்கொள்ள கேட்கிறார் என்பதை புரிந்துக்கொண்டார் சரண்யா.

பொன்வண்ணனுடன் திருமணம்

அதன்பிறகு, பாரதிராஜா சரண்யா வீட்டுக்குச் சென்று, அவரது குடும்பத்தினரிடம் பேசி சம்மதம் வாங்கிய நிலையில் பொன்வண்ணன், சரண்யா திருமணம் 1995ம் ஆண்டில் நடந்துள்ளது.

திருமணத்துக்கு பின் சில ஆண்டுகள் நடிக்காமல் இருந்த சரண்யா, ராம் படத்தில் 2000ம் ஆண்டில் நடித்தார்.

அதன்பின் ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற படத்தில் நடித்தார். பிறகு தொடர்ந்து பல படங்களில் அம்மா கேரக்டரில் பிஸியாக நடித்து வருகிறார் சரண்யா பொன்வண்ணன்.

முதல் திருமணம்

இந்நிலையில், நடிகை சரண்யா, பொன்வண்ணனை செய்தது 2வது திருமணம்தான். அதற்கு முன்பே நடிகர் மற்றும் இயக்குநருமான ராஜசேகர் என்பவரை திருமணம் செய்துள்ளார்.

இதையும் படியுங்கள்: விவாகரத்து.. சக்காளத்தியான தோழி.. முதுகில் குத்திய மகள்.. பறிபோன வாழ்க்கை .. மஞ்சு வாரியர் மறுபக்கம்..

இவர் பல சீரியல்களில் நடித்தவர். வைரமுத்து எழுதிய இது ஒரு பொன்மாலைப் பொழுது பாடல் காட்சியில், நிழல்கள் படத்தில் நடித்தவர்தான் அந்த ராஜசேகர்.

ஆறு மாதங்கள் மட்டுமே அவருடன் குடும்பம் நடத்திய சரண்யா, அவரை விட்டு பிரிந்து விட்டார். விவாகரத்து செய்துவிட்டார். அதன்பிறகே சரண்யா, பொன்வண்ணனை திருமணம் செய்திருக்கிறார்.

இப்படித்தான் விவாகரத்தில் முடிந்திருக்கிறது சரண்யாவின் முதல் திருமணம்.. சரண்யா பொன்வண்ணன் வாழ்க்கை ரகசியம், பல பேருக்கு தெரியாமல் இப்போதுதான் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.