ரஜினி கூட ரகசிய கல்யாணம்.. கண்ணீர் விடும் பிரபல நடிகை.. என்ன நடந்தது..?

சினிமா துறையைப் பொறுத்தவரை நடிகர் நடிகைகளை பற்றிய வதந்தி செய்திகள் தொடர்ந்து வெளியான வண்ணம் தான் இருக்கிறது.

அது இது இப்போது மட்டும் இல்லை அந்த காலத்தில் நடித்த நடிகைகளே பல்வேறு காதல் விஷயங்களில் பொய்யான செய்திகள் வெளியாகி அவர்களின் வாழ்க்கையை சீரழித்து விட்டதை நம்மளால் பார்க்க முடிகிறது.

நடிகை கவிதா:

அந்த லிஸ்டில் இருப்பவர் தான் நடிகை கவிதா. இவர் 1976 ஆம் ஆண்டு ஓ மஞ்சு என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார்.

தொடர்ந்து ரவுடி ராக்கம்மா, ஆட்டுக்கார அலமேலு, காற்றினிலே வரும் கீதம், அந்தமான், நட்சத்திர நாயகன், நாடோடி தென்றல், உழைப்பாளி, அரண்மனை காவலன், மண்ணுக்கு மரியாதை,

--Advertisement--

அவதார புருஷன் பல்வேறு திரைப்படங்களில் நடித்து 70ஸ் முதல் 90 வரை பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டார் இவர் ஹீரோயினாக பல படங்களில் நடித்துவிட்டு,

அதன் பிறகு அமராவதி, ரட்சகன், நாம் இருவர் நமக்கு இருவர்,அவள் வருவாளா, பூவெல்லாம் கேட்டுப்பார், கூடி வாழ்ந்தால் கோடி நன்மை, உள்ளிட்ட பல படங்களில் குணசேத்திர வேடங்களிலும் நடித்து பெரும் புகழ்பெற்றார்.

இதனிடையே வயது ஆனதால் அவரது மார்க்கெட் பின்னர் சீரியல்களை தலை காட்ட ஆரம்பித்து தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து பெரும் புகழ் பெற்றார்.

வாழ்க்கை புரட்டிப்போட்ட வதந்தி செய்தி:

தற்போது சீரியல்களில் நடித்து வரும் அவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் ஒரு வதந்தி செய்தியால் தனது வாழ்க்கையே புரண்டு போனது பற்றி மிகுந்த வேதனையோடு தெரிவித்து இருக்கிறார்

நான் சினிமாவில் பீக்கில் வளர்ந்து கொண்டிருந்த நேரம் அது தொடர்ச்சியாக அடுத்தடுத்த திரைப்படங்களில் கமிட்டாகி பிரபலமான நடிகையாக பலராலும் பார்க்கப்பட்ட சமயம் அது.

அந்த சமயத்தில் தான் எனது வாழ்க்கையை திருப்பி போடும் படி ஒரு வதந்தி செய்து வெளியாகி வாழ்க்கையே காலி செய்து விட்டது.

ஆம் நான் அந்த சமயத்தில் பிரபல நடிகரான மோகன் பாபுவுடன் ஒரு படத்தில் நடித்துக்கொண்டிருந்தேன். ஷூட்டிங் ஸ்பாட்டில் ஷூட்டிங்கிற்காக தயாராகி மேக்கப் போட்டுக் கொண்டிருந்தபோது,

ரஜினியுடன் ரகசிய கல்யாணம்:

அந்த படத்தின் மேக்கப் மேன் என்னிடம் ஒரு பத்திரிக்கையை எடுத்து வந்து காண்பித்தார். அதில் எனக்கும் ரஜினிக்கும் ரகசியமாக திருமணம் ஆகிவிட்டதாக செய்தி வெளியாக இருந்து அதை பார்த்ததும் நான் பேரதிர்ச்சி அடைந்துவிட்டேன்.

உடனே மோகன் பாபுவிடம் அந்த பத்திரிகையை காட்டி ஷூட்டிங்கில் இருந்த எனது நண்பர்கள் தோழிகள் உள்ளிட்ட அனைவரும் அந்த பத்திரிகை அலுவலகத்திற்கு நேராக சென்று ஏன் இப்படி பொய்யான செய்திகளை போடுகிறீர்கள் என சண்டை போட்டோம்.

அதற்கு அவர்கள் தவறு நடந்து விட்டது. நாங்கள் அதை திருத்தி எழுதுகிறோம் என சொன்னார்கள். ஆனால், அதற்குள் அந்த செய்தி காட்டு தீ போல் பரவி மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது.

இது என்னுடைய வீட்டிற்கு தெரியவர என்னை வீட்டில் இருந்து வந்து விசாரிக்க ஆரம்பித்து விட்டார்கள். அதன் பிறகு திரைப்பட வாய்ப்புகளும் குறைய துவங்கியது.

கண்ணீர்விட்டு கதறும் நடிகை கவிதா:

எனது மார்க்கெட் கொஞ்சம் கொஞ்சமாக சறுக்க ஆரம்பித்தது. ஒரு வதந்தி செய்தியால் எனது சினிமா வாழ்க்கையை இப்படி பாழானது என அந்த பேட்டியில் நடிகை கவிதா மிகுந்த வருத்தத்தோடு கூறியிருக்கிறார்.

தன்னுடைய 11 வயதில் இருந்து நடிக்க ஆரம்பித்த நடிகை கவிதா தற்போது 52 வயதாகியும் தொடர்ந்து சீரியல்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.