நடிகை தேர்வில் இதுக்கு தனியா ஒரு ஆப்ஷன் இருக்கு.. பகீர் கிளப்பிய ரேஷ்மா பிரசாத்..!

சின்னத்திரை சீரியல் நடிகையான நடிகை ரேஷ்மா பிரசாத் நடிகைகளை தேர்வு செய்வதற்கு என்று தனியாக ஒரு ஆப்ஷன் இருப்பதாக சொல்லி தற்போது பகீர் நிலையை பலர் மத்தியிலும் கிளப்பி விட்டு இருக்கிறார்.

இவர் பாரதி கண்ணம்மா பகுதி 2 சீரியலில் ஹீரோயினியாக நடித்தவர். அண்மைக் காலமாக சினிமாவில் வாய்ப்புக்காக நடக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பற்றி பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்துள்ள நிலையில் அது பற்றி அண்மை பேட்டி ஒன்றில் ரேஷ்மா பிரசாத் பேசியிருக்கிறார்.


நடிகை ரேஷ்மா பிரசாத்..

நடிகை ரேஷ்மா பிரசாத் விஜய் டிவியில் சக்திவேல் என்ற சீரியலில் மீனா என்ற கதாபாத்திரத்தில் அற்புதமாக நடித்ததை அடுத்த தான் பாரதி கண்ணம்மா சீரியலில் பகுதி இரண்டில் நடிக்க ஆரம்பித்தார்.

மேலும் இவர் நடித்த நான் பிழை நீ மழலை என்ற குறும்படம் ரசிகர்களின் மத்தியில் பிரபலமானது. இந்நிலையில் அண்மை பேட்டி ஒன்றில் பேசிய இவர் சின்ன கேரக்டர் ரோலாக இருந்தால் கூட அட்ஜஸ்ட்மென்ட்க்கு ஓகே வா என்று ஓப்பன் ஆக கேட்பது குறித்து பேசி இருக்கிறார்.


வாய்ப்பு வேணும்னா அட்ஜஸ்ட்மென்ட்..

மேலும் சீரியல் மட்டுமல்லாமல் திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்றால் கட்டாயம் அட்ஜஸ்ட்மென்ட்கள் அதிக அளவு நடப்பதாக தெரிவித்திருக்கக்கூடிய இவர் நிறைய ஆடிஷன்களுக்கு சென்ற சமயத்தில் அங்கு இந்த கேரக்டரை நீங்கள் செய்ய வேண்டும் என்றால் அவரை அட்ஜஸ்ட் செய்தால் போதும்.

ஈசியா வாய்ப்பை வாங்கி விடலாம் என்ற பேச்சுக்களை தொடர்ந்து கேட்டு இருக்கிறார். இதனால் ஒரு கட்டத்தில் ஆடிஷனுக்கே போக வேண்டாம் என்று முடிவு எடுத்து விட்டதாக கூறிய இவர் ப்ரோபைலில் கூட அட்ஜஸ்ட்மென்ட்க்கு எஸ் நோ என்று ஆப்ஷனெல்லாம் தந்திருக்கிறார்கள் என்று சொன்னதை கேட்டு ரசிகர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்கள்.


அது மட்டுமல்லாமல் அட்ஜஸ்ட்மென்ட்க்கு நோ என்று அனுப்பிய பிறகு அந்த ப்ரோபைலை கூட படித்துப் பார்க்காமல் கால் செய்து அட்ஜஸ்ட்மென்ட்க்கு ஓகே வா என்று கேட்கக் கூடிய அளவு மோசமான சம்பவங்களை பார்த்து விட்டதாக வேதனையோடு சொல்லி இருக்கிறார்.

இப்படித்தான் வாய்ப்பு வருது..

இப்படி தான் பல நடிகைகளுக்கு பட வாய்ப்புகள் வழங்கப்படுகிறது. திறமையின் பேரில் வாய்ப்புகள் கிடைப்பது என்பது குதிரைக்கொம்பாக உள்ளது.

மேலும் பெரிய பெரிய ஹீரோயின் கதாபாத்திரத்திற்கு தான் அட்ஜஸ்ட்மென்ட் நடக்கும் என நினைக்காதீர்கள். சின்ன, சின்ன குண சித்திர கதாபாத்திரத்திற்கு கூட இந்த வேலை திரை மறைவில் நடந்து கொண்டு தான் இருக்கிறது.

திரை உலக பின்புலத்தைக் கொண்டிருக்கும் நடிகைகளுக்கு மட்டும் இந்த விஷயம் விதிவிலக்கு என்றும் நீங்கள் நம்பக் கூடாது. எனவே எங்கு சென்றாலும் அட்ஜஸ்ட்மென்ட் தான்.

அட்ஜஸ்ட்மென்ட் இல்லாத இடமே இல்லை என்று சொல்லக்கூடிய வகையில் வாய்ப்பு வேண்டும் என்றால் அட்ஜஸ்ட்மென்ட் பண்ண தான் வேண்டி இருக்கிறது.


எனவே தான் எனக்கு வாய்ப்பு கிடைக்கிறதோ? இல்லையோ ?அட்ஜஸ்ட்மென்ட் செய்து தான் வாய்ப்பு பெற வேண்டும் என்ற அவசியம் இல்லை என்று நான் ஒதுங்கி விட்டேன்.

எனவே தான் திரைப்பட வாய்ப்புகளை விடுத்து சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன். என்னுடைய பட வாய்ப்புக்காக படுக்கையை பகிர்ந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்று ரேஷ்மா பிரசாத் கொடுத்த பேட்டியானது வைரலாக இணையங்களில் வலம் வருகிறது.

மேலும் இந்த விஷயத்தை ரசிகர்கள் அவர்களுக்குள் பேசி வருவதோடு மட்டுமல்லாமல் அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து ஒரு மிகப்பெரிய லெவலில் இந்த விஷயத்தை பேசும் பொருளாக மாற்றி விட்டார்கள்.

   

--Advertisement--