“யாருக்குமே இந்த கொடுமை நடக்க கூடாது..” என் அம்மாவே இதை செய்தார்.. நடிகை ஷகீலா ஓப்பன் டாக்..!

மலையாள திரைப்படத்துறை என்றாலே சகிலாவின் ஆபாச படங்கள் தான் என்று ஒரு காலம் இருந்தது. அந்த அளவுக்கு நடிகை சகிலா மலையாளத்தில் பல்வேறு ஆபாச திரைப்படங்களில் நடித்து,

அந்த திரை துறையை வேறு மாதிரி கோணத்தில் மாற்றி வைத்திருந்தார். குறிப்பாக 90ஸ் காலகட்டத்தில் கொடி பறந்த நடிகையாக மலையாளத்தில் பார்க்கப்பட்டார்.

நடிகை ஷகீலா:

இவரது திரைப்படம் வெளியாகிறது என்றாலே திரையரங்கில் கூட்டம் அலைமோதி கொள்ளும் அந்த அளவுக்கு இவர் மிகப்பெரிய மார்க்கெட் வைத்திருந்தார்.

இதையும் படியுங்கள்: கிருத்திகா உதயநிதி குடும்பம் பற்றி பலரும் அறியாத ரகசிய உண்மைகள்..!

மலையாள சினிமாவில் மோகன்லால், மம்முட்டி போன்ற மிகப்பெரிய நட்சத்திரங்களின் படங்கள் சகிலாவின் படங்கள் வெளியாகும் தினத்தில் வெளி வந்தால் சல்லி பைசாக்கு கூட தேறாது

எல்லோரும் சகிலாவின் படத்திற்கு தான் படையெடுத்து போவார்கள். இதனால் மலையாள சினிமா உலகமே திணறிப்போனது.

மலையாள சினிமாவை ஆட்கொண்ட ஷகீலா:

ஷகிலாவை ஏதாவது செய்ய வேண்டும் ஒரு வழி செய்து அவரை இந்த பக்கமே வரக்கூடாது என திட்டமிட்டு ஒட்டுமொத்த மலையாள திரைப்பட நடிகர்களும் இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் ஒன்று கூடி,

சகிலாவின் திரைப்படங்களுக்கு தடை விதித்தார்கள்.ஷகிலாவின் படங்கள் எடுக்கவோ இயக்கவோ கூடாது என எல்லோரும் சேர்ந்து ஒரு முடிவு செய்து அவரை சில மலையாள சினிமா பக்கமே தலைகாட்டி விடாமல் துரத்தி அடித்தார்கள்.

இதையும் படியுங்கள்: Good Bad Ugly அஜித்திற்கு வில்லனாகும் சென்சேஷனல் நடிகர்.. எகிறும் எதிர்பார்ப்பு..!

சென்னையில் வந்து தஞ்சம் அடைந்த ஷகிலா இங்கு கிடைக்கும் ஒரு சில தமிழ் திரைப்படங்களில் கவர்ச்சியான ரோல்களில் நடித்து வந்தார். பின்னல் வாய்ப்புகளே கிடைக்காமல் போனது.

அதன் பிறகு தான் விஜய் தொலைக்காட்சியில் ஒளி பரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று தனது வேறு ஒரு முகத்தை காட்டி மக்களின் கவனத்தை எடுத்தார் ஷகிலா.

இந்நிலையில் நடிகை சகிலா சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது அம்மாவை குறித்து பல விஷயங்கள் பகிர்ந்து கொண்டார்.

அம்மாவால் தற்கொலை முயற்சி:

அதாவது என் கைகளில் பல இடங்களில் நான் கிழித்துக்கொண்டு காயமாக இருக்கிறது. அதற்கான காரணம் என் அம்மா மட்டும்தான்.

என் அம்மாவால்தான் நான் இது போன்ற செய்து கொண்டேன் எனக்கூறி பகீர் கிளப்பியுள்ளார். ஏதேனும் காதல் தோல்வியா கைகளை இப்படி கிழித்திருப்பார் என நினைத்து தொகுப்பாளர் கேட்டார்.

ஆனால் அவர் அம்மாதான் எல்லாவற்றிற்கும் முழுக்க காரணம் என கூறி சகிலா அதிர வைத்துள்ளார். அதற்கான என்ன காரணம் என கேட்டதற்கு,

நான் யாரிடமே பொதுவாக பொய் சொல்லவே மாட்டேன். பொய் சொல்லும் பழக்கம் எனக்கு தெரியாது குறிப்பாக என் அம்மாவிடம் சுத்தமாக பொய் சொல்லவே மாட்டேன்.

இதையும் படியுங்கள்: Good Bad Ugly அஜித்திற்கு வில்லனாகும் சென்சேஷனல் நடிகர்.. எகிறும் எதிர்பார்ப்பு..!

ஆனால் நான் அன்றாடம் நடக்கும் விஷயங்களை அம்மாவிடம் கூறும்போது அது அத்தனையுமே பொய் என்று அவர் நினைத்துக் கொள்வார்.

அதனால் எனக்கு அவரிடம் எப்படி புரிய வைப்பது எனத் தெரியாமல் நான் மிகுந்த மன உளைச்சலில் கைகளை கிழித்துக்கொள்வேன் என ஷகிலா அந்த பேட்டி மிகுந்த வருத்தத்தோடு தெரிவித்து இருக்கிறார்.