சிவகார்த்திகேயன் பேசிய ஆபாச பேச்சு..! இது தான் ஆதாரம்..! பொதுவெளியில் போட்டு உடைத்த பிரபலம்..!

நடிகர் சிவகார்த்திகேயன் இசையமைப்பாளர் இமான் மற்றும் இசையமைப்பாளர் இமானின் முதல் மனைவி மோனிகா ஆகியோரின் சர்ச்சை ஓய்ந்த பாடில்லை. இந்த விவகாரம் நடிகர் சிவகார்த்திகேயனின் சினிமா வாழ்க்கைக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறி வருகிறது.

ஆனால் சிவகார்த்திகேயன் இது பற்றி வாயே திறக்காமல் மௌனியாக இருக்கிறார். மறுபக்கம் இவர் வாய் திறக்காமல் இருப்பது தான் நல்லது அதிகபட்சம் ஆறு மாதம் ஒரு வருடத்தில் இந்த வருஷத்தை மக்கள் மறந்து விடுவார்கள்.

சிவகார்த்திகேயன் இரண்டு படங்கள் ஹிட் கொடுத்து விட்டால் இதெல்லாம் மறந்து போய்விடும் என்று சிவகார்த்திகேயனுக்கு ஆதரவு தெரிவிக்கும் ரசிகர்களும் இருக்கிறார்கள்.

ஆனால், எத்தனை ஆண்டுகள் ஆனாலும் சிவகார்த்திகேயனை இந்த பிரச்சனை தொடர்ந்து கொண்டே தான் இருக்கும். அவர் வேறு ஏதாவது ஒரு சிறு விஷயத்தில் சிக்கினால் கூட இந்த விஷயத்தை எடுத்து வந்து அவரை காலி செய்து விடுவார்கள்.

எனவே சிவகார்த்திகேயன் இந்த விவகாரத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பது தான் சிறந்தது என கூறும் ரசிகர்களும் இருக்கிறார்கள். இது காலத்தின் பிடியில் இருக்கிறது. நடிகர் சிவகார்த்திகேயன் காலத்தின் பிடியில் சிக்கி இருக்கிறார்.

--Advertisement--

என்னதான் அமைதியாக இருக்கிறார்… எந்த பிரச்சினையும் குறித்தும் வாய் திறக்காமல் இருக்கிறார்… மக்கள் மறந்து விடுவார்கள்.. என்றாலும் கூட காலத்தின் கடுமையான பிடியில் நடிகர் சிவகார்த்திகேயன் சிக்கி இருக்கிறார் என்பதுதான் உண்மை.

சிவகார்த்திகேயன் செய்யக்கூடிய சிறு தவறு கூட அவருக்கு மிகப்பெரிய வில்லங்கமாக மாறிவிட வாய்ப்பு இருக்கிறது. அவர் சரி என நினைத்து செய்யக்கூடிய விஷயங்கள் தவறாக செல்வதற்கு வாய்ப்பு இருக்கின்றன.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க.. சிவகார்த்திகேயன் இசையமைப்பாளர் இமானின் மனைவியுடன் பேசிய ஆபாச பேச்சுக்கள் குறித்து பிரபல ஊடகவியலாளர் வலைப்பேச்சு அந்தணன் அவர்கள் சமீபத்திய பேட்டி ஒன்றில் பெரிய குண்டை தூக்கி போட்டு இருக்கிறார்.

சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட வலைப்பேச்சு அந்தணன், நடிகர் சிவகார்த்திகேயனின் ஆபாச பேச்சுக்கள் அடங்கிய வாட்ஸ் அப் சேட் மற்றும் ஆடியோக்கள் ஆகியவை ஆதாரங்களாக இருக்கின்றன. அவற்றை நான் பார்த்து விட்டேன்.

இதை பொதுவெளியில் வெளியிட்டால் நடிகர் சிவகார்த்திகேயன் சினிமா வாழ்க்கையே அஸ்தமனம் ஆகிவிடும். மட்டுமில்லாமல் தனிப்பட்ட வாழ்க்கையிலும் நிறைய பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

ஆனால் இசையமைப்பாளர் இமான் இதனை விரும்பவில்லை. நடந்தது நடந்து விட்டது இனிமேல் நடக்கப் போவதை பார்ப்போம் என்பது தான் அவருடைய நோக்கமாக இருக்கிறது. அவர் நடிகர் சிவகார்த்திகேயன் எனக்கு துரோகம் செய்துவிட்டார் என்பதை கூட வெளியில் கூறியிருக்க மாட்டார்.

அவர் அப்படி கூறும் சூழ்நிலை அமைந்து விட்டது. ஒரு வேளை அவர் சிவகார்த்திகேயனின் வளர்ச்சியை தடுக்க வேண்டும்.. அவரை பழி வாங்க வேண்டும்.. என்று நினைத்திருந்தால் பெரிய சேனல்களை அழைத்து பிரஸ் மீட் நடத்தி சிவகார்த்திகேயன் குறித்து ஆதாரங்களை வெளியிட்டிருக்க முடியும்.

ஆனால் பெரிய பிரபலம் இல்லாத ஒரு சிறிய youtube சேனலில் தான் இமான் பேசினார். அதுவும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க கூடிய தொகுப்பாளர் தன்னுடைய நெருங்கிய நண்பர் என்பதால் ஒரு நண்பரிடம் பேசுவது போல தன்னுடைய தரப்பு வேதனையை பதிவு செய்திருந்தார்.. தவிர, திட்டமிட்டு சிவகார்த்திகேயன் குறித்து பேச வேண்டும் என அவர் பேசவில்லை.

ஆனாலும் கூட மிகவும் கவனமாக பேசினார். சிவகார்த்திகேயன் செய்த லீலைகளை வெளிப்படையாக பேசாமல் ஒரே ஒரு வார்த்தையில் முடித்து விட்டார். தொடர்ந்து பேசிய அந்தணன், சிவகார்த்திகேயன் பேசியது மிகவும் தவறு. ஆனால் அந்த ஆதாரங்களை பார்க்கும் பொழுது சிவகார்த்திகேயன் மீது மட்டும் தவறு இருப்பதாக தெரியவில்லை.

நடிகர் இசையமைப்பாளர் இமானின் மனைவியும் இதற்கு உடந்தையாக இருந்திருக்கிறார். எந்த ஒரு நடிகரும் தானாக சென்று இப்படி செய்யப்போவதில்லை. மறுமுனையில் இருந்து ஏதேனும் ஒரு சிக்னல் வந்ததின் அடிப்படையில் தான் இப்படி இருந்திருப்பார்கள் இப்படி செய்திருப்பார்கள்.

இமான் பேட்டியில் கூறும்போது கூட சிவகார்த்திகேயன் மட்டும் இதற்கு காரணம் கிடையாது என்று கூறியிருந்தார்.. அப்படி என்றால்… வேறு யார் காரணம்..? என்று யோசித்துப் பார்த்தால் இமானின் முதல் மனைவியும் இதற்கு ஒரு முக்கிய காரணமாக இருந்திருக்கிறார் என்பதை அந்த ஆதாரங்களை பார்க்கும் போது தெரிகிறது.

சிவகார்த்திகேயன் இப்படியான பிரச்சனைகள் இருந்து தப்பித்துக் கொள்ள வேண்டும் என்றால் இதை அப்படியே விட்டுவிடுவதுதான் நல்லது. இதை நான் அவருடைய எதிர்கால நன்மைக்காக சொல்கிறேன்..

இந்த விஷயத்தை மழுங்கடிக்க செய்ய வேண்டும் என்று சிவகார்த்திகேயன் மீம்.. கிரியேட்டர்களுக்கு பணம் கொடுத்து.. தன்னுடைய மீடியா நண்பர்களுக்கு பணம் கொடுத்து.. தனக்கு ஆதரவாகவும் இமானுக்கு எதிராகவும் செய்திகளை உருவாக்க முயன்றால் இந்த பிரச்சனை வளர்ந்து கொண்டே தான் போகும் எனவே சிவகார்த்திகேயன் அமைதியாக இருப்பதுதான் அவருக்கு அவருடைய எதிர்காலத்திற்கு நல்லது என கூறி இருக்கிறார் அந்தணன்.