அடடே.. நடிகை சினேகாவின் மகளா இது..? நெடுநெடுன்னு வளர்ந்துட்டாரே..! - வைரல் போட்டோஸ்..!

அடடே.. நடிகை சினேகாவின் மகளா இது..? நெடுநெடுன்னு வளர்ந்துட்டாரே..! – வைரல் போட்டோஸ்..!

திரை உலகில் ஜூனியர் புன்னகை அரசியாக விளங்கும் சினேகா எப்போதும் குடும்ப பாங்கான உடைகளை உடுத்தி அதிக அளவு கவர்ச்சி காட்டாமல் தனது நடிப்பை வெளிப்படுத்தக் கூடிய சிறந்த நடிகை.

நடிகை ரேவதி, நதியாவிற்கு அடுத்தபடியாக இவர் திரை உலகில் தனக்கு என்று ஒரு பாணியை வகுத்துக் கொண்டு அதன்படி நடித்து இருக்கிறார். பிரிவோம் சந்திப்போம் படத்தில் நடிகர் சேரனோடு இணைந்து நடித்த இவரது நடிப்பை பாராட்டியே ஆக வேண்டும்.

புன்னகையரசி சினேகா..

1990களில் தமிழில் முன்னணி நடிகையாக திகழ்ந்த இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்துக் கொண்டவர்.

இதனை அடுத்து தமிழில் பல படங்களில் நடித்த இவர் தற்போது தளபதி விஜய்க்கு ஜோடியாக கோட் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் தளபதி விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் தந்தையாக நடிக்கும் விஜய் கேரக்டருக்கு சினேகா ஜோடியாக நடித்திருக்கிறார். காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் திருமணத்திற்கு பிறகும் சில படங்கள் மற்றும் விளம்பர படங்களில் நடித்து வருகிறார்.

சினிமாவில் நடிக்கும் போது அதிக அளவு கிசுகிசுகளில் சிக்காத நடிகையான சினேகா சின்னத்திரை நிகழ்ச்சிகளில் நடுவராகவும் பணி புரிந்திருக்கிறார்.

நடிகை சினேகா பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டவர். தற்போது இவர்களுக்கு ஆசைக்கு ஒரு மகள் ஆஸ்திக்கு ஒரு மகன் என்ற நிலையில் இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்.

சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருக்கும் இவர்கள் இருவருமே அவ்வப்போது தங்கள் மகன் மற்றும் மகளின் புகைப்படங்களை வெளியிடுவார்கள். கொள்ளை அழகில் இருக்கும் இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வார்கள்

குட்டி சினேகா..

அந்த வகையில் தற்போது சினேகாவின் மகளின் புகைப்படம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளி வந்து ரசிகர்களின் மத்தியில் பெருத்த ஆதரவை பெற்றுள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் அட.. இது.. குட்டி சினேகா வா.. என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் குழந்தையாக இருந்த சினேகாவின் மகள் தற்போது சற்று வளர்ந்து இருக்கிறார் என்பது புகைப்படத்தை பார்த்த உடனேயே தெரிந்து விட்டது.

அதுவும் ஒவ்வொரு புகைப்படத்திலும் ஒவ்வொரு உயிரினத்தோடு அவர் பாசத்தை பகிர்ந்த விதத்தைப் பார்த்து உயிரினங்கள் மீது செலுத்தும் அன்பை அறிந்து அனைவரும் வியந்து விட்டார்கள். அந்த அளவு நேர்த்தியான முறையில் ஒவ்வொரு புகைப்படமும் உள்ளது.

குறிப்பாக ஆட்டுக்குட்டி மற்றும் நாய் குட்டியுடன் சினேகாவின் மகள் நின்றிருக்கும் காட்சி வைரலாகி வருகிறது. மேலும் இந்த புகைப்படம் பார்ப்பதற்கு

வருங்காலத்தில் இவர்கள் இருவருமே நல்ல ஹீரோவாகவும் ஹீரோயினியாகவும் வருவார்கள் என்பது எந்த புகைப்படத்தை பார்க்கும் போதே தெரிகிறது என்று பல ரசிகர்கள் அவர்களது எண்ணத்தை பதிவு செய்து இருக்கிறார்கள்.

எது எப்படியோ குழந்தைகளின் மீது கட்டாயம் கண் பட்டு இருக்கும். எனவே மறக்காமல் சுற்றி போடுங்கள் என்பதை ரசிகர்கள் பலரும் வேண்டுகோளாக விடுத்திருக்கிறார்கள்.