Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Tamil Cinema News

என்னோட இது பெருசாகிட்டே இருக்கு.. என்ன பண்றதுன்னு தெரியல.. நடிகை சினேகா ஓப்பன் டாக்..!

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சினேகா.

இவர் தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம் ,மற்றும் கன்னட மொழி திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

குறிப்பாக தமிழில் தொடர்ச்சியாக பல்வேறு ஹிட் படங்களில் நடித்து இங்கு நட்சத்திர நடிகையாக அதிக சம்பளம் வாங்கும் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

நடிகை சினேகா:

2000 காலகட்டத்தில் நடிகை சினேகா பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

--Advertisement--

மும்பையை பூர்விகா பூர்வீகமாகக் கொண்ட இவர் தற்போது சென்னையிலே வசித்து வருகிறார்.

முதன்முதலில் அவர் நடித்த வெளிவந்த திரைப்படம் 2001 ஆம் ஆண்டில் வெளிவந்த நீலபக்ஷி என்று மலையாள திரைப்படம் தான்.

அதை அடுத்து தமிழில் என்னவளே திரைப்படத்தின் மூலமாக வாய்ப்பு கிடைக்க இங்கு ஹீரோயின் ஆக அறிமுகமானார்.

சினேகாவின் ஹிட் படங்கள்:

தொடர்ந்து தமிழில் அவர் நடித்து வெளிவந்த திரைப்படம் என பார்த்தோமானால் பார்த்தாலே பரவசம், ஆனந்தம், கிங், பம்மல் கே சம்பந்தம், வசீகரா, ஏப்ரல் மாதத்தில், வசூல்ராஜா எம்பிபிஎஸ், ஜனா ஆட்டோகிராப், ஆயுதம் செய்வோம்,பிரிவோம் சந்திப்போம்,புதுப்பேட்டை, கோவா, தீராத விளையாட்டுப் பிள்ளை, உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் சினேகா நடித்திருக்கிறார்.

ஒவ்வொரு படத்திலும் மிகவும் மென்மையான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து ஹோம்லி ஆன உடைகளை நேர்த்தியான உடைகளை அணிந்து கொண்டு ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக நடித்துவிட்டு சென்றார் சினேகா.

இதனாலே அவர்களுக்கு யோகோபித்த ரசிகர்கள் பட்டாலும் உருவாகினர். இதனிடையே நடிகை சினேகா கடந்த 2009 ஆம் ஆண்டில் பிரசன்னா அவர்களை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் என இருக்கிறார்கள் திருமணத்திற்கு பிறகும் குழந்தை பிறப்புக்கு பிறகும் தொடர்ந்து திரைப்படங்களில் குணசத்திர வேடங்களிலும் ஹீரோயினாகவும் நடித்து வருகிறார்.

42 வயசிலும் பிஸியான நடிகையாக சினேகா:

சினேகா தற்போது விஜய் நடித்துவரும் கோட் திரைப்படத்தில் மூத்த விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார் என தகவல்கள் வெளியாகி உள்ளது .

இந்த நிலையில் சினேகா சமீபத்திய பேட்டி ஒன்றில் தான் ஒரு முறை அணிந்த உடைய மறுமுறை அணிவதே கிடையாது.

இதனால் என்னுடைய கப்போர்ட மிகப்பெரிய அளவில் பெரிதாகிக் கொண்டே போகிறது என கூறி இருக்கிறார்.

அதாவது நான் ஒரு முறை ஒரு நிகழ்ச்சிக்கு அணிந்து கொண்டு சென்ற அதே உடையை நான் வேறொரு நிகழ்ச்சிக்கும் அணிந்து கொண்டு சென்றேன்.

என்னோட இது பெருசாகிட்டே இருக்கு:

அதை பார்த்து பத்திரிகையாளர் ஒருவர்… சினேகாவிடம் வேறொரு டிரஸ் இல்லையா? ஒரே டிரஸ் இரண்டு பங்க்ஷனுக்கு போட்டுட்டு வராங்க என பத்திரிகையில் எழுதி விட்டார்கள்.

அப்போதுதான் நான் முடிவெடுத்தேன். ஒருமுறை அணிந்தால் மறுமுறை அந்த உடைகளை அணியக்கூடாது என்று.

அப்படி நான் ஒரு முறை அணிந்த உடைகளை எனது நெருங்கிய தோழிகள் மற்றும் நண்பர்களுக்கு கொடுத்து விடுகிறேன் என கூறியிருக்கிறார் சினேகா.

Continue Reading
 

More in Tamil Cinema News

Trending Now

To Top