பட வாய்ப்புக்காக அதை பண்ணி இருக்கேன்.. ரகசியம் உடைத்த நடிகை சினேகா..!

ஒவ்வொரு பூக்களும் சொல்கிறதே வாழ்வென்றால் போராடும் போர்க்களமே என்ற பாடல் வரிகளின் மூலம் ரசிகர்களை ஈர்த்த நடிகை சினேகா தமிழ் திரை உலகில் எவர்கிரீன் நடிகையாக திகழ்கிறார்.


தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் நடித்திருக்கும் நடிகை சினேகா தமிழக ரசிகர்களால் புன்னகை அரசி என்று அன்போடு அழைக்கப்படுகிறார்.

நடிகை சினேகா..

2001-ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளி வந்த அங்கே ஒரு நீல பக்ஷ்சி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானதை அடுத்து அதே ஆண்டு தமிழ் திரை உலகிற்கும் அறிமுகம் ஆனார்.

இதனை அடுத்து தமிழில் பல முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்த நடிகை சினேகா 2009-ஆம் ஆண்டு அச்ச முண்டு அச்சமுண்டு திரைப்படத்தில் நடிகர் பிரசன்னா ஒரு இணைந்து நடித்த போது காதல் ஏற்பட்டது.


இந்நிலையில் பெற்றோர்கள் சம்மதத்தோடு திருமணம் செய்து கொண்ட இவர்கள் தற்போது ஆசைக்கு ஒரு பெண், ஆஸ்திக்கு ஒரு மகன் என்ற இரண்டு குழந்தைகளுக்கு தாயாக இருக்கும் இவர் சில ஆண்டுகள் சினிமாவில் பிரேக் எடுத்துக் கொண்டதை அடுத்து தற்போது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்து இருக்கிறார்.

--Advertisement--

வாய்ப்புக்காக இதை பண்ணுன..

அந்த வகையில் நடிகை சினேகா தற்போது கோட் திரைப்படத்தில் தளபதியோடு இணைந்து நடித்து வருகிறார். அது மட்டுமல்லாமல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக பணி புரிந்து வரும் இவர் சினேகாலயா சில்க்ஸ் என்ற பெயரில் புதிய பிசினஸை ஆரம்பித்திருக்கிறார்.

இதனை அடுத்து சின்னத்திரை, பெரிய திரை மட்டுமல்லாமல் விளம்பர சூட்டிங்ளையும் கணவரோடு சேர்ந்து ரொமான்டிக் போஸ் கொடுத்து ரசிகர்களை கவர்ந்து வரும் நடிகை சினேகா பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம் என்று சொல்லும் பாடல் வரிகளுக்கு ஏற்ப தற்போது பிரசன்னாவும் இவரும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறார்கள்.


உடைந்த ரகசியம் இதுதானா?

இதனை அடுத்து சினேகா பற்றிய பல விஷயங்கள் இணையங்களில் பகிரப்பட்டு வரக்கூடிய சமயத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு சினிமாவில் டாப் இடத்தில் இருந்த நடிகை சினேகா நடித்த பேட்டி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

இதனை அடுத்து சினிமாவில் நடக்கும் பல்வேறு விஷயங்களை பேசி இருக்கும் நடிகை சினேகா சினிமாவில் நடிக்கும் ஆர்டிஸ்ட் எல்லோரும் ஜாலியாக இருப்பாங்க. ஏசியில் போவாங்க, வருவாங்க என்று அனைவரும் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.


ஆனால் அப்படி இல்லை சில நேரங்களில் ரொம்ப சந்தோஷமாக இருப்போம். சோகமான சீன் கொடுப்பாங்க. சோகமாக இருக்கும் போது சந்தோஷமான சீன் கொடுப்பாங்க. இந்த எல்லா எமோஷன்களையும், உணர்ச்சிகளையும் கட்டுப்படுத்தி நடிப்பது எல்லாமே பட வாய்ப்புக்காகவும் ரசிகர்களுக்காகவும் தான் என பேசிய பேச்சானது தற்போது வைரலாகி உள்ளது.

இந்த விஷயத்தை தற்போது ரசிகர்கள் அனைவரும் குறிப்பிட்டு பேசி வருவதோடு நடிகை சினேகா சொல்லி இருப்பதில் அர்த்தம் உள்ளதாக அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்து இருக்கிறார்கள்.