சோனியா அகர்வால் கையால் செருப்படி வாங்கிய பிரபல நடிகர்..! யாருன்னு தெரியுமா..?

ஆயிரத்தில் ஒருவன் என்ற திரைப்படத்தின் மூலம் தனது அபார திறமையை வெளிப்படுத்திய இயக்குனர் செல்வராகவன் தமிழ் சினிமாவில் வித்தியாசமாக, யாரும் எதிர்பார்க்காத கதை அம்சம் நிறைந்த திரைப்படங்களை இயக்கி வெற்றி கண்டவர்.

இவரது இயக்கத்தில் 2004 ஆம் ஆண்டு வெளி வந்த திரைப்படம் 7ஜி ரெயின்போ காலனி ரசிகர்களின் மத்தியில் பெரும் அளவு பேசும் பொருளாக இருந்ததோடு மிகச்சிறந்த வெற்றியை பெற்றுத் தந்தது.

இந்த திரைப்படத்தில் ரவி கிருஷ்ணா ஹீரோவாக நடித்திருந்தால் இவருக்கு ஜோடியாக சோனியா அகர்வால் நடித்திருந்தது உங்களுக்கு நினைவில் இருக்கலாம்.மேலும் இந்த திரைப்படமானது தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வெளியாகி வசூலில் சாதனை புரிந்தது.

அந்த வகையில் இந்த திரைப்படத்தின் வெற்றிக்கு பக்க பலமாக யுவன் சங்கர் ராஜா இசையில் அமைத்திருந்த பாடல்கள் ஒவ்வொன்றும் இருந்தது என கூறலாம். இந்தப் படத்தின் கதையில் வேலையில்லாமல் நண்பர்களோடு சுற்றித் திரியும் இளைஞனாக ரவி கிருஷ்ணா நடித்திருப்பார்.

இதனை அடுத்து அவர் தங்கி இருக்கும் குடியிருப்பு பகுதிக்கு பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த பெண்ணான சோனியா அகர்வால் வந்து குடியேறுவார். இவரை ரவி கிருஷ்ணா காதலிப்பார். ஆனால் ஆரம்பத்தில் இவரது காதலை மறுத்த சோனியா அகர்வால் பின்னர் ரவி கிருஷ்ணாவின் காதலை ஏற்று கொண்டு காதலிப்பார்.

இந்த நிலையில் இவருக்கு வீட்டில் வேறொரு மாப்பிள்ளை பார்த்து விடுவார்கள். கடைசியில் எப்படி ஹீரோவை திருமணம் செய்து கொண்டார் என்பதைச் சுற்றி கதை நகரும். தற்போது இந்த திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு ரசிகர்களின் பெருத்த வரவேற்பை பெற்றிருக்கிறது.

இது மட்டுமல்லாமல் இந்த படம் பற்றிய ஒரு சுவாரசியமான தகவல் வெளி வந்துள்ளது. அதை இந்த படத்தின் நாயகன் ரவி கிருஷ்ணா கூறியிருக்கிறார். இவர் அண்மை பேட்டி ஒன்றில் ரவி கிருஷ்ணா பேசும் போது இந்த படத்தில் பஸ்ஸில் பயணிக்கும் போது பஸ் திடீரென்று பிரேக் பிடிக்க, சோனியா அகர்வால் மீது ரவி கிருஷ்ணா கையை வைத்து விடுவாராம்.

இதனால் ஆத்திரம் அடைந்த சோனியா அகர்வால் கோபத்தோடு செருப்பை கழட்டி அடிக்க வேண்டும். இந்த காட்சியை படமாக்கும் போது நிஜமாகவே ரவி கிருஷ்ணாவை செருப்பால் அடிக்கச் சொல்லி டைரக்டர் செல்வராகவன் சோனியா அகர்வாலுக்கு கட்டளை இட்டிருக்கிறார்.

மேலும் ஒரே டேக்கில் சோனியா அகர்வால் இந்த காட்சியை முடித்து விட்டார். அப்படி அவர் ஒரே டேக்கில் முடிக்கவில்லை என்றால் நான் பல முறை செருப்பால் அடி வாங்கி இருக்க வேண்டும் என்பதை சிரித்தபடியே ரவி கிருஷ்ணா தெரிவித்திருப்பது ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகி விட்டது.