இரட்டை வேடம் போட்ட திரிஷாவுக்கு பிரபல நடிகர் கொடுத்த ட்விஸ்ட்.. தரமான சம்பவம் டோய்..

இரட்டை வேடம் போட்ட திரிஷாவுக்கு பிரபல நடிகர் கொடுத்த ட்விஸ்ட்.. தரமான சம்பவம் டோய்..

தமிழ் மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழிகளிலும் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கும் நடிகை திரிஷா இளைஞர்கள் விரும்பும் நடிகையாக திரை உலகில் இன்று வரை எவர்கிரீன் நடிகையாக திகழ்கிறார்.

இதையும் படிங்க: “அத்திந்தோம்.. திந்தியும் தோம்தன..” குட்டி பாப்பா இப்போ எப்படி இருக்காங்க பாருங்க..!

மேலும் இவர் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ரீஎன்றி கொடுத்ததை அடுத்து இவருக்கு பல திரைப்பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. இதனை அடுத்து திரையுலகில் முன்னணி நடிகையாக விளங்கும் நயன்தாராவுக்கே டப் கொடுக்க கூடிய வகையில் இவரது வளர்ச்சியை தற்போது உள்ளது.

நடிகை திரிஷா..

தமிழைப் பொறுத்த வரை இவர் தமிழில் இருக்கும் முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்ததோடு மட்டுமல்லாமல் இவர் நடிப்பில் வெளி வந்த சாமி, கில்லி போன்ற படங்கள் பிளாக் பஸ்டர் மூவியாக வெளி வந்து ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளானது.

1999 ஆம் ஆண்டு நடந்த சென்னை அழகிப் போட்டியில் சென்னை அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் அதே ஆண்டு வெளி வந்த ஜோடி திரைப்படத்தின் ஒரு துணை கதாபாத்திரத்தை மட்டுமே செய்திருந்தார்.


இதை அடுத்து மௌனம் பேசியதே என்ற திரைப்படத்தில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு சிறந்த நடிகைக்கான பிலிம் பேர் விருது கிடைத்தது.

இரட்டை வேடம் போடுகிறாரா..

மேலும் இவர் அண்மையில் இளைய தளபதி விஜய் உடன் இணைந்து லியோ படத்தில் நடித்ததை அடுத்து தல அஜித்தின் படத்தில் தற்போது நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் ஆன சிரஞ்சீவியுடன் 18 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் திரிஷா ஜோடி சேர்ந்து நடிக்க இயக்குகிறார்.

இந்த படத்தை வசிஷ்ட மல்லிடி இயக்க விஷ்வாம்பரா என்ற பெயரிடப்பட்டிருக்கும் இந்த படத்தில் நடிக்க உள்ளதால் இந்த படப்பிடிப்பு கடந்த 9 தேதி முதல் நடந்து வருகிறது.

பிரபல நடிகர் கொடுத்த கிப்ட்..

தற்போது கோடை காலம் என்பதால் திரிஷாவிற்கு வெப்பத்தை கட்டுப்படுத்தக்கூடிய ஸ்மார்ட் மக் ஒன்றை சிரஞ்சீவி பரிசளித்திருக்கிறார். இந்த மகின் புகைப்படத்தை தனது இன்ஸ்டால் பக்கத்தில் பகிர்ந்து இருக்கும் திரிஷா சிரஞ்சீவி அளித்த பரிசை விரும்புவதாகவும் நன்றியோடு கூறி இருக்கிறார்.

மேலும் இந்த விஷ்வாம்பரா படத்தில் திரிஷாவுக்கு இரட்டை வேடங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இதனை பட குழு இன்று வரை உறுதி செய்யவில்லை. யுவி கிரியேஷன் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஆஸ்கார் வென்றெடுத்த கீரவாணி இசையமைக்கிறார். மேலும் இந்த படமானது எதிர் வரும் 2025 ஆம் ஆண்டு ஜனவரி 10-ஆம் தேதி சங்கராந்தியை முன்னிட்டு திரைக்கு வரும் என்று பட குழு அறிவித்துள்ளது.


இதனை அடித்துத்தான் ரசிகர்கள் அனைவரும் இரட்டை வேஷம் போட்ட திரிஷாவிற்கு பிரபல நடிகர் கொடுத்த தரமான சம்பவத்தை தெரிந்து கொள்ளுங்கள் என்று அவரை கலாய்த்து தள்ளி இருக்கிறார்கள்.

இந்த விஷயமானது இணையத்தில் வைரலாக மாறி விட்டதோடு திரிஷாவின் ரசிகர்கள் தொடர்ந்து இவர் முன்னணி நடிகையாக வலம் வந்துவிடுவார். அதில் எந்த விதமான ஐயமும் இல்லை என்று கூறி வருகிறார்கள். அதற்கு ஏற்றது போல இவருக்கு பட வாய்ப்புகள் வந்து குவிந்துள்ளது.

இதையும் படிங்க: எலும்பே உடஞ்சி போச்சு.. அந்த இடத்தில் ஆக்ரோஷமாக தாக்கிய நடிகர்.. ஓப்பனாக கூறிய வரலட்சுமி சரத்குமார்..!

மேலும் விரைவில் வெளி வரும் இந்த படத்தை காண்பதற்காக தெலுங்கு ரசிகர்கள் அனைவரும் தயாராகி வருகிறார்கள். நீண்ட இடைவெளிக்கு பிறகு திரிஷா, சிரஞ்சீவியுடன் இணையும் இந்த கெமிஸ்ட்ரியை திரையரங்கில் சென்று பார்க்க அனைவரும் ஆவலாக இருக்கிறார்கள்.

   

--Advertisement--