இந்த வயசில் தான் பெண்களுக்கு உடலுறவு ஆசை அதிகம் இருக்கும்.. கூச்சமின்றி கூறிய வித்யா பாலன்..!

பிரபல பாலிவுட் நடிகை வித்யா பாலன் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார். அதில் பெண்கள் எந்த வயதில் உடலுறவு குறித்த முழுமையான அறிவை பெறுகிறார்கள்…? எந்த வயதில் உடலுறவு குறித்து புரிதலுடன் முழு ஒப்புதலுடன் உடலுறவை கொண்டாட தயாராகிறார்கள்..? உள்ளிட்ட விஷயங்களை ஒளிவு மறைவு இன்றி வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

இளம் வயதில் தான் பெண்கள் தங்களை கவர்ச்சியாக உணர்வார்கள் என்று பலரும் நம்புகிறார்கள். ஆனால், அதை விடவும் 40 களில் தான் பெண்கள் தங்களை அதிக கவர்ச்சியாக உணர்வார்கள். உடலுறவு குறித்த ஆசைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக் கொள்வதில் அதீத தீவிரத்துடன் இருப்பார்கள்.

ஏனென்றால் 40 வயதுக்கு பிறகு அவர்களுக்கு பெரிய பொறுப்புகள் இருக்காது. அவர்களுடைய கடமைகளில் முக்கால்வாசியை கடந்திருப்பார்கள். அப்போது அவர்களுடைய இளமை திரும்பும்.

இளமை காலத்தில் அவர்கள் மிகவும் பொறுப்பான நபராக.. சீரியஸான நபராக இருந்திருக்கலாம். ஆனால், அவர்களுடைய பொறுப்புகள் கடமைகள் ஆகியவற்றில் முக்கால் வாசி கடந்த பிறகு அவர்களுக்கு ஒரு நம்பிக்கை இருக்கும்.

கணவர் பற்றிய புரிதலை அவர்கள் முழுமையாக பெற்றிருப்பார்கள். 40 வயதில் இருக்கும் பெண்களுக்கு அவருடைய கணவர் குறைந்தபட்சம் 15 வருடங்கள் பழக்கமான ஒரு நபராக இருப்பார்.

ஏன் என்றால் எனக்கு தற்பொழுது 40 வயதாகிறது. ஆனால், என்னுடைய 20 வயதில் எதை எதையெல்லாம் நான் யோசித்து வைத்திருந்தேனோ.. கற்பனை செய்து வைத்திருந்தேனோ.. கனவு கண்டு வைத்திருந்தேனோ.. அதையெல்லாம் தற்போது தான் நான் அனுபவித்துக் கொண்டிருக்கிறேன்.

30 வயது வாக்கில் நான் யார் என்னுடைய கடமைகள் என்ன என்று தெரிந்தது. எதற்காக என்னுடைய வாழ்க்கை இருக்கிறது.. என தெரிந்தது என்னுடைய வாழ்க்கையை நேசிக்க ஆரம்பித்தேன்.

தற்போது 40 வயதாகிறது.. இப்போது தான் எனக்கு உடலுறவின் மீது நிஜமான உந்துதல் அதிகமாக உள்ளது. என்னை போல தான் மற்ற பெண்களும் தங்களுடைய குடும்ப பொறுப்புகள், கடமைகள், ஆரம்பகால பயம் என பல்வேறு காரணங்களால் தங்களுடைய இளமையை கடந்து வந்து விடுகிறார்கள்.

ஒரு வழியாக ஒரு 40 வயதில் தான் அவர்களுக்கு ஒரு தெளிவு கிடைக்கிறது. எனவேதான் 40 வயதில் தான் பெண்கள் தங்களை இளமையாகவும் தங்களது உடலுறவு சார்ந்த ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கும் முனைவார்கள் என பேசி இருக்கிறார் நடிகை வித்யா பாலன்.

இவருடைய இந்த கருத்து குறித்து உங்களுடைய பார்வையை கமெண்ட் செக்ஷனில் பதிவு செய்யுங்கள்.